Thursday, December 1, 2011

THE_WAR_THAT_CHANGED_TAMILIAN_HISTORY


பழந்தமிழ்நாடு
1. மதுரை
2 தஞ்சை
3. வஞ்சி
4. திருச்சிராப்பள்ளி
5. காஞ்சி


பழம்பாடல்களில் பழமொழிகள் உவமைகள் முதலியவற்றை எடுத்தாள்வது குறித்து முன்பு ஒரு மடலில் கண்டோம்.

சுந்தமூர்த்தி நாயனார் திருப்புறம்ப்ம் என்னும் தலத்து ஈசனைப் பற்றி பாடிய திருப்பதிகம் ஒன்று உண்டு.

திருப்புறம்பயம் என்னும் ஊர் ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க ஊர். தமிழகத்தின் வரலாற்றையே மாற்றிவிட்ட போர் ஒன்று அங்கு நடைபெற்றது. மூன்று பேரரசுகளின் விதி அந்தப் போரில் நிர்ணயிக்கப்பட்டு புதிய பேரரசு ஒன்றினுக்கு வித்திடப்பட்டது.

பாடலைப் பார்ப்போம்.


படையெலாம் பகடு ஏற ஆளினும்
பவ்வம் சூழ்ந்தரசு ஆளினும்
கடையெலாம் பிணைதேரைவால்
கவலாதெழு மட நெஞ்சமே
மடையெலாம் கழுநீர் மலர்ந்து
மருங்கெலாம் கரும்பாடத்தேன்
படையெலாம் நாறுசோலைப்
புறம்பயந்தொழப் போதுமே

இதில் நாம் கவனிக்கவேண்டியது இந்த வரியை -

'கடையெலாம் பிணை தேரைவால்'

பாடலின் கருத்து இது:

'படைகளெல்லாம் யானைகளின்மீது வரக்கூடிய அளவுக்கு ஆண்டாலும், ஆளப்படும் அரசு நான்கு கடல்களையும் எல்லையாகக்கொண்டு பரந்துவிரிந்திருக்கூடிய அளவுக்குப் பேரரசாக இருந்து, அதனை ஆண்டாலும், அதெல்லாம் போகும் காலத்தில் தேரையின் வால் போலக் காணாமல் போய்விடும்.
ஆகவே திருப்புறம்பயத்தின் ஈசனை தொழவேண்டும். அதுவே நித்தியம'்.

இதிலுள்ள நயம் அந்த தேரையின் வால். அதுதான் கவனத்தை ஈர்த்தது.
தேரை, தவளை முதலியவை Amphibia என்னும் உயிரின வகுப்பைச் சேர்ந்தவை. பிறவியில் முதல் பாதியை முழுக்க முழுக்கத் தண்ணீருக்குள் இருந்து கழிக்கும். மீனைப் போல செவுளைக ்கொண்டு நீரிலுள்ள பிராணவாயுவை சுவாசித்துக்கொண்டு உயிர்வாழும். அப்போது அதற்கு மீனைப்போலவே வாலும் இருக்கும். அதனை Tadpole என்று குறிப்பிடுவார்கள். பிற்பாதியில் பெரிதாகும்போது நுரையீரல் வளர்ந்துவிடும். ஆகவே நீருக்கு வெளியில் வந்து காற்று மண்டலத்தின் பிராணவாயுவை சுவாசித்து உயிர் வாழும்.
தேரை பெரிதாகப் பெரிதாக அதன் வால் குறைந்துகொண்டே வந்து மறைந்துபோய்விடும்.
அதுபோலவே போகூழ் காலத்தின்போல் தேரையின்வால் மறைவதுபோல் பேரரசும் பெருவாழ்வும் மறைந்துபோய்விடும் என்பது பாடலின் கருத்து.
இதில் உள்ள உவமை: 'கடையெலாம் பிணை தேரைவால்'
திருப்புறம்பயம் அல்லது திருப்புறம்பியம் என்பது கும்பகோணத்துக்கு அருகிலுள்ளதோர் ஊர்.
கிபி 880-ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற போர் திருப்புறம்பியப்போர் என்று குறிப்பிடப்படும்.
கடைச்சங்க காலம் என்பது கிபி 285-உடன் முடிவுக்கு வந்துவிட்டது.
கடற்கோள், புயல்கள், கடலில் நிகழ்ந்த எரிமலைக்குமுறல், கடலுக்குள் நிலச்சரிவு என்ற பலவித காரணங்களாலும் பனிப்படலங்கள் உருகியதால் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வினாலும் தமிழகத்தில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. பாண்டிநாட்டின் கணிசமான முக்கியமான பகுதிகள் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டன. மக்கள் தொகை வெகுவாகக்குறைந்தது. மக்களும் கூட்டங்கூட்டமாகக் குடி பெயர்ந்தனர்.
பத்து தலைமுறைகளுக்கு இந்த நிலை நீடித்தது.
சங்க கால சமுதாய வாழ்வியல் அழிந்துபோனது.
அப்போதிருந்த மூவேந்தர்கள் என்னும் முடியுடை வேந்தர்களான சோழர், பாண்டியர், சேரர் ஆகியோர் வலுவிழந்துபோயினர்.

இந்த சமயத்தில் பல குடியினர் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்து அதனைக் கைப்பற்றி, மேலும் மேலும் குடியேறி, புதிய அரசுகளைத் தோற்றுவித்தனர்.
முக்கியமாகக் களப்பிரர் என்னும் குடியினர் தமிழகத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களின் காலத்தில் தமிழர்களின் பழைய நாகரிகம் மாறிப் போனது.
பார்த்தியாவிலிருந்து வந்த பல்லவர், பாணர், சகர் முதலிய குடியினர் இந்தியாவில் பரவலாயினர். பல்லவர் என்போர் ஆந்திரப் பேரரசு நிலவிய காலத்தில் அவர்களின் உயர் அதிகாரிகளாகவும் படைத ்தலைவர்களாகவும் கவர்னர்களாகவும் இருந்தனர். பின்னர் அவர்கள் ஆந்திராவில் வடபெண்ணை ஆற்றினருகில் தனிநாடு உருவாக்கிக்கொண்டனர். அங்கிருந்து தெற்கேயுள்ள தமிழ்நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றினர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவ அரசை ஏற்படுத்தினர். தொண்டை மண்டலத்தின் பெரும் பகுதி காடாக இருந்தது. அதனைத் திருத்தி விவசாய நிலங்களாக்கி நாட்டை வளப்படுத்தினர். இதன் காரணமாக அவர்களுக்குக் 'காடுவெட்டி' என்றும் 'காடவர்' என்றும் பெயர் ஏற்பட்டது. அப்போதிருந்த பல
குடிநாடுகளைக் கைப்பற்றி பல்லவர்கள் தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்திக்கொண்டனர்.
சிம்ம விஷ்ணு என்னும் பல்லவன் காலத்தில் தமிழகத்தில் பல்லவர்கள் மிக வலுவாக தாபித்துக்கொண்டுவிட்டனர்
தென்கிழக்காசியாவிலும் பல்லவத்தின் செல்வாக்குப் பரவியது.

பொதுவாகவே இந்திய நாட்டில் இருந்த மன்னர்களுக்கும் மக்களுக்கும் போர்க்குணம் மிகுந்திருந்தது. ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் இரண்டு மூன்று நாடுகளிலோ பேரரசுகளிலோ சிதறியிருப்பார்கள்.

கோல்கொண்டாவைச் சேர்ந்த மராத்தியரும் பீஜாப்பூரைச் சேர்ந்த மராத்தியரும் சிவாஜி வகையறா மராத்தியரும் ஒருவருடன் ஒருவர் போரிடுவார்கள். கோல்கொண்டாவைச் சேர்ந்த தெலுங்கர்களும் பீஜாப்பூர் தெலுங்கர்களும் விஜயநகரத் தெலுங்கர்களைப் போட்டு மொத்துவார்கள். அப்போது ராஜமஹேந்திரத்துத் தெலுங்கர்கள் ஏதாவது பக்கத்தில் சேர்வார்கள். அல்லது தமக்கு ஏதும் லாபமிருக்கிறதா என்று பார்ப்பார்கள். கன்னடிகரும் வரலாற்றுக் காலமுழுவதிலும் இரண்டு மூன்று நாடுகளில் சிதறியிருந்தார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில்கூட அவர்கள் பாம்பே, மெட்ராஸ், மைசூர், ஹைதராபாத், பீடார், மராத்தா சமஸ்தானங்கள் முதலியவற்றில் இருந்தார்கள். இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரே கர்நாடகாவில் ஒன்று சேர்ந்தார்கள்.

சங்க காலத்தில் சேரர்கள் சோழர்கள், பாண்டியர்கள், அதியமான்கள், தொண்டைமான்கள், பதினெண்குடி வேளிர்கள், தங்களுக்குள் போரிட்டுக்கொண்டேயிருந்தார்கள். 'நான்மொழிக் கோசர்' போன்றோர் ஏதாவது ஒரு பக்கம் இருபபர்கள். சில சமயங்களில் 'வம்ப மோரியர்', 'முனையெதிர் வடுகர்' வந்து மாட்டுவார்கள். அப்போது 'ட்ரமிட தேச சங்காத்தம்' என்ற பெயரில் கூட்டணி அமைத்துப் போரிடுவார்கள்.


இதேதான் பல்லவர் காலத்திலும் நடைபெற்றது.
சாளுக்கியர் vs பல்லவர், பல்லவர் vs பாண்டியர், பல்லவர் vs இலங்கை, பாண்டியர் vs சேரர் என்று போர்கள் நடந்தவண்ணமிருந்தன. சாளுக்கியர்களை ராஷ்ட்ரகூடர்ஒடுக்கியபின்னர் அவர்களும் இதே மாதிரி கட்சி கட்டிக்கொண்டு போரிட்டனர்.
இது ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் நடந்தவையல்ல.
கிபி 600-இலிருந்து 900 வரைக்கும் இதே கதைதான்.
நமக்குத் தெரிந்த முக்கியப் போர்கள் :
சாளுக்கியர் V/S பல்லவர்

1. புள்ளலூர்
2. பரியளம்
3. சூரமாரம்
4. மணிமங்கலம்
5. வாதாபி
6. பெருவளநல்லூர்
ராஷ்ட்ரகூடர் V/S பல்லவர்
1. விளந்தை
2.குருக்கோடு

பாண்டியர் V/S பல்லவர்

1. நெல்வேலி -இதில் சாளுக்கியரும் கலந்திருந்தனர்
2. நந்திபுரம்
3. நெடுவயல்
4. குறுமடை
5. மன்னிக்குறிச்சி
6. பூவலூர்
7. கொடும்பாளூர்
8. குழும்பூர்
9. சங்கரமங்கை
10. மண்ணைக்குறிச்சி
11. பெண்ணாகடம்
12. மண்னை
13. நென்மிலி
14. கரூர்
15. சூதவனம்
16. நிம்பவனம்
17. குரும்பூர்
18. சூரவழுந்தூர்
20. தெள்ளாறு 1
21. வெள்ளாறு
22. பழயாறு
23. நள்ளாறு
24. கடம்பூர்
25. அரிசிலாறு
26. இடவை
27. திருப்புறம்பயம்
பாண்டியர் V/S சாளுக்கியர்

1. மங்களாபுரம்
2. வெண்பை

பாண்டியர் V/S மற்றவர்கள்

1. பாழி
2. செந்நிலம்
3. மருதூர்
4. செங்கோடு
5. புதான்கோடு
6. மழகொங்கம்
7. பெரியலூர்
8. புகலியூர்
9. ஆயிரவேலி
10. அயிரூர்
11. புகழியூர்
12. வெள்ளூர்
13. விண்ணம்
14. செழியக்குடி
15. நாட்டுக்குறும்புப் பறந்தலை
16. விழிஞம் I
17. விழிஞம் II
18. திருநெல்வேலி,
19. கோட்டாறு
20. சேவூர்
21. பூலந்தை
22. நாரையாறு
23. கடையல்
24. குன்னூர்
25. விழிஞம் III
26. கரகிரி
இங்கு மற்றவர்கள் என்பது அதியமான், சேரர்கள், இலங்கையர் இன்னும் சிலரை ஆகியோரைக் குறிக்கும்.

கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் காலகட்டம்.
நடந்தவை 65 போர்கள்.
இவை எல்லாமே செப்பேடுகள், கல்வெட்டுக்கள், இலக்கியம் முதலியவற்றில் காணப்படும் செய்திகள்.
எதிலுமே குறிப்பிடப்படாதவை?
அல்லது கிடைகாமலேயே போய்விட்ட சாசனங்கள்?

போர்களின் எண்ணிக்கை அறுபத்தைந்துக்கும் அதிகமாகவே இருந்திருக்கும்.

இந்தப்பொர்களில் பல, மிகவும் உக்கிரமானவை; சேதம் அதிகம் விளைவித்தவை.
வாதாபிப் போர், மங்களாபுரத்துப்போர், அரிசிலாற்றுப்போர், தெள்ளாற்றுப்போர், திருப்புறம்பயப்போர் முதலியவை அப்படிப்பட்டவை.

இவற்றில் சில No Win Situation-ஐ ஏற்படுத்தியவை.

இவ்வாறு சொல்வதால் யாருமே வெல்லவில்லை என்று அர்த்தமல்ல. யாரோ வென்றிருக்கிறார்கள். ஆனால் அந்த வெற்றியினால் ஏற்பட்ட பாதகங்கள் மிக அதிகமாக இருக்கக்கூடும்.
இன்னொரு வகை வெற்றியும் உண்டு. Pyrrhic Victory என்று ஒரு வகை இருக்கிறது. அது Pyrrus என்னும் மன்னன் நீண்ட நாட்கள் நடத்திய மிகுந்த செலவும் ஆட்சேதமும் மிகுந்த போர். பிடிபட்ட அந்த நாட்டையும் அவனால் கைப்பற்றி வைத்திருந்து ஆளவும் முடியவில்லை.

பல்லவர் பாண்டியப ்போர்களினால் ஏற்பட்ட No Win Situation-இல் ஆட்சேதமும் பொருட்சேதமும் அதிகம் ஏற்பட்டன. போர்களுக்காக மக்கள் அதிகம் உழைக்கவேண்டியிருந்தது. விவசாயம், விளச்சலின் பெரும்பகுதி படைகளுக்காகச் செலவிட வேண்டியிருக்கும். சம்பளம் முதலியவற்றுக்காக பொருட் செலவிட்டு அதனால் கஜானா காலியாகியிருக்கும். ஊரை நாட்டைக் கவனிக்க ஆளில்லாமல்போய் பொருளாதாரம் முதலிய அனைத்துமே ஸ்தம்பித்திருக்கும். War Economy-யில் அதிக நாள் ஓட்டவும் முடியாது. போரிடுவதற்காகப் படைவீரர்களாகப் போனவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தால் அவர்களுக்கு ஆயுதம், உணவு கொடுப்பதுமுதல் மற்ற பல வேலைகளைச்செய்வதற்கு இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் போயிருப்பார்கள். இதனாலெல்லாம் நாட்டில் தங்கிய மக்கள் தொகை குVறைவாக இருக்கும். ஆட்சேதத்தாலும் மக்கள்தொகை குறைந்து போயிருக்கும்.
விளைவு?
வெற்றி பெற்ற நாடும் வலுவிழந்து போயிருக்கும்.
தோற்றுப்போன நாட்டைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை.
பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மேலாதிக்கப் போட்டி உண்மையிலேயே கிபி 710-க்குப் பிறகே ஏற்பட்டது. அது கிபி 880-உடன் முடிவுற்றது.
அப்படியானால் நூற்று எழுபதே ஆண்டுகளில்தான் அத்தனை கடுமையாகவும் உக்கிரமாகவும் போரிட்டிருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில்தான் 27 போர்கள் அவர்களுக்கு இடையில் நடந்திருக்கின்றன.

இவற்றில் மிகக் கடுமையான போர்கள் -

734-இல் நடைபெற்ற நந்திபுரத்து முற்றுகையும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து புரியப்பட்ட போர்களும்

765 plus - பெண்ணாகடப் போர் - இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் vs
அரிகேசரி பராங்குச மாறவர்ம பாண்டியன்

834 - 836 - முதலாவது தெள்ளாற்றுப் போர் - மூன்றாம் நந்திவர்மன் vs
ஸ்ரீமாற ஸ்ரீவல்லபப் பாண்டியன்.
834 - 836 - முதலாவது தெள்ளாற்றுப் போர் - மூன்றாம் நந்திவர்மன் vs
ஸ்ரீமாற ஸ்ரீவல்லபப் பாண்டியன்

854 - குடமூக்குப் போர் - நிருபதுங்கவர்ம பல்லவன் vs
ஸ்ரீமாறஸ்ரீஇவல்லப பாண்டியன்

862 - அரிசிலாற்றுப் போர் - நிருபதுங்கவர்ம பல்லவன் vs
ஸ்ரீமாறஸ்ரீவல்லப பாண்டியன்

862 - இடவைப் போர் - நிருபதுங்கவர்ம பல்லவன் + ஆதித்த சோழன் vs
வரகுணவர்ம பாண்டியன்

880 - திருப்புறம்பயப் போர் - நிருபதுங்கவர்ம பல்லவன் + அபராஜிதவர்ம பல்லவன் + முதலாம் பிருதிவீபதி கங்கன் + ஆதித்தசோழன் vs இரண்டாம் வரகுணவர்ம பாண்டியன்

இவற்றின் நடுவே பாண்டியர்கள் மற்றவர்களுடனும் போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.

கிபி 834 -இலிருந்து கிபி 880வரைக்கும் உள்ள கால கட்டத்திற்குள் ஏற்பட்ட மற்ற போர்களுடன் இவற்றையும் சேர்த்துப் பார்ப்போம் -
834 - முதலாவது தெள்ளாற்றுப் போர் - மூன்றாம் நந்திவர்ம
பல்லவன் vs ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டியன்
பல்லவன் வெற்றி

834 - 836 - வெள்ளாறு, நள்ளாறு, கடம்பூர் போர்கள் - மூன்றாம்
நந்திவர்ம பல்லவன் vs ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டியன்
பல்லவன் வெற்றி

840 - சிங்களப்போர் - இலங்கையர் vs ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டியன்
பாண்டியன் வெற்றி

840 plus - விழிஞப்போர் II - ஸ்ரீமாறஸ்ரீவல்லப பாண்டியன் vs சேரர்
பாண்டியன் வெற்றி

854 - குடமூக்குப் போர் - நிருபதுங்கவர்ம பல்லவன் + கங்கர் +
சோழர் + கலிங்கர் + மகதர் vs ஸ்ரீமாறஸ்ரீஇவல்லப பாண்டியன்
பாண்டியன் வெற்றி

862 - அரிசிலாற்றுப்போர் - நிருபதுங்கவர்ம பல்லவன் + சிங்களர் vs
ஸ்ரீமாறஸ்ரீவல்லப பாண்டியன்
பல்லவன் வெற்றி

862 - இடவைப்போர் - நிருபதுங்கவர்ம பல்லவன் + ஆதித்த சோழன் vs
வரகுணவர்ம பாண்டியன்
பாண்டியன் வெற்றி

880 - திருப்புறம்பயம் - நிருபதுங்கவர்ம பல்லவன் + அபராஜிதவர்ம
பல்லவன் + முதலாம் பிருதிவீபதி கங்கன் + ஆதித்தசோழன் vs
இரண்டாம் வரகுணவர்ம பாண்டியன்
பல்லவன் வெற்றி
திருப்புறம்பியத்தின் அருகில் கிபி 880-இல் The Final Show-down பல்லவருக்கும் பாண்டியருக்கும் இடையே ஏற்பட்டது.

நிருபதுங்கவர்ம பல்லவனுக்கு வயதாகிவிட்டதால் அவனுடைய மகனாகிய அபராஜிதவர்ம பல்லவன் தலைமையில் மைசூரிலிருந்த கங்கநாட்டு மன்னன் முதலாம் பிருதிவீபதி, ஆதித்த சோழன் ஆகியோரும் வரகுணவர்ம பாண்டியனின் பக்கத்தில் முத்தரையர்களும் போரிட்டனர்.

முத்தரையர் என்போர் வெளிநாட்டினர் என்பர். சிலர் அவர்கள் தமிழகக் குடியினர்தாம் என்பர். சங்க காலம் முடிந்தபின்னர் தமிழகத்தில் தலைதூக்கிய சில குடியினரில் இவர்களும் ஒருவர்.
காவிரி பல கிளைகளாகப் பிரிந்து கடலில் கலக்கும் நிலப்பகுதியை முத்தரையர் ஆண்டனர். இது பழைய சோழநாட்டின் ஒரு பகுதியாகும். இவர்கள் தஞ்சை முதலிய இடங்களை மட்டுமல்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியையும் திருச்சி மாவட்டத்தின் சிறு பகுதியையும் தங்கள் வசம் வைத்திருந்தனர். சந்திரலேகை என்னும் பலமிகுந்த ஊரைத் தங்கள் கோநகரமாகக் கொண்டிருந்தனர்.
பல்லவ மன்னர்களின் அரசில் பெரும்பங்கு கொண்டிருந்தனர். படையுதவி தந்தனர். அமைச்சு, படைத்தலைமை போன்ற பொறுப்புகளையும் வைத்திருந்தனர்.
இவர்களால் சோழர்கள் பழையாறை, உறையூர் போன்ற ஊர்களில் மையம் கொண்டிருக்கவேண்டியிருந்தது.

கொடும்பாளூர் என்னும் சிறுநாட்டை இருங்கோவேளிர் என்னும் பழங்கால வேள்குடியினர் ஆண்டுவந்தனர். அவர்களும் பல மன்னர் பரம்பரைகளுடன் மணவுறவு கொண்டவர்கள்.

அடிக்கடி ஏற்பட்ட பெரும்பெரும் படையெடுப்புக்களையும் போர்களையும் தங்களின்கீழிருந்த சிற்றரசர்களின் படைகளின் துணையோடும் தளபத்தியத்துடனும் பல்லவர்கள் நடத்தவேண்டியிருந்தது.
முத்தரையர்களின் நாட்டை ஸ்ரீமாறஸ்ரீவல்லப பாண்டியன் கைப்பற்றிக்கொண்டதால் அவர்கள் பாண்டியர்களின் கீழ் போரிட்டனர்.

அரிசிலாற்றங்கரைப் போரில் பாண்டியர்கள் தோல்வியடைந்தபின்னர் முத்தரையர்களின் நாட்டின் ஒரு பகுதியைச் சோழர்கள் கைப்பற்றிக்கொள்ளுமாறு பல்லவர்கள் அனுமதித்தனர்.

தஞ்சை விஜயால சோழனின் கைக்கு வந்தது. பண்டைய சோழநாட்டின் பெரும்பகுதியும் அவ்வாறே இணைத்துக் கொள்ளப்பட்டது.
பாண்டியர்/பல்லவர் போட்டி

1. மதுரை
2. தஞ்சை
3. திருப்புறம்பியம்
4. காஞ்சி
5. திருச்சிராப்பள்ளி
6. உறையூர்
7.வஞ்சி

M - முத்தரையர்
C - சோழர்
SR - சம்புவராயர்
AD - அதியமான்
ML - மலையமான்
V - வேளிர்


விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் எதிர்காலத் திட்டமொன்றை மிகவும் தொலைநோக்குடன் போட்டிருந்தார். பாண்டிய பல்லவ ராஷ்ட்ரகூடப் பேரரசுகளின் கதி எந்தத் திக்கை நோக்கிப்போகிறது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

கிபி 250-இல் தென்னகம் வந்து கிபி 340 அளவில் தமிழகத்தில் காலூன்றிக்கொண்டுவிட்ட பல்லவர்கள் ஒரு பேரரசை நிறுவிக்கொண்டவர்கள்; பல்லவநாட்டைவிடப் பன்மடங்கு பெரிதான சாளுக்கியப் பேரரசையும் சமுத்திரகுப்தனின் சமுத்திரம்போன்ற படைகளையும் எதிர்த்து நின்று வெற்றியும் பெற்றவர்கள். அந்த பழக்க தோஷத்தினாலோ என்னவோ வருங்காலத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சிபுரிந்து பழக்கப்பட்டவர்கள் பாண்டியர்கள். பன்னெடுங்காலமாக கடற்கோள்கள், போர்கள், பஞ்சம், முதலிய பலவகையான மிரட்டல்களைச் சமாளித்தவர்கள்.

களப்பிரரை அடக்கிய பாண்டியன் கடுங்கோன் காலம் தொடங்கி நாட்டை விரிவு படுத்திக்கொண்டும் எதிர்ப்புகளைச் சமாளித்துக்கொண்டும் இருந்து பழக்கப்பட்டுவிட்ட பாண்டியர்களும் உணரவில்லை.
முன்னால் குறிப்பிடப்பட்ட பல்லவ பாண்டியப் போர்களில் கிட்டத்தட்ட அனைத்துமே பல்லவ நாட்டிற்குள் நிகழ்ந்தவை. சோழநாட்டின் வடவெல்லைக்கும் பல்லவநாட்டிற்குள்ளும் போரைக் கொண்டு சென்றவர்கள் பாண்டியர்கள். சேரநாடு, இலங்கை முதலிய இடங்களுக்குள்ளும் படைகளை அனுப்பிப் போரிட்டிருக்கின்றனர்.
பாண்டியர்கள் Agressive War புரிந்து பழக்கப்பட்டவர்கள்.
இருநூறு ஆண்டுகளில் அவர்கள் புரிந்த ஐம்பத்தேழு போர்களில் பெரும்பான்மையானவற்றில் அவர்களே வென்றிருக்கிறார்கள். அவர்கள் தாக்கப்பட்டதைவிட அவர்கள் தாக்கியதே அதிகமாகத் தெரிகிறது.
ஆகவே தங்களுடைய Aggressive Wars மூலம் ஒரு பெரும் பேரரசை ஏற்படுத்திவிடவேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

அபராஜித பல்லவன்

'இனிமேல் தமிழகத்தில் ஒரு பெரும் பேரரசு தோன்றுமானால் அது பாண்டியப் பேரரசுவாகத்தான் இருக்கும்; இருக்கவேண்டும்', என்று மனப்பூர்வமாக நம்பியிருந்திருக்கின்றனர். வேறுவகையாக சிந்திப்பதற்கு அவர்களின் Mind-set இடம் கொடுக்கவில்லை.

பாண்டிய பல்லவ ஆதிக்கப்போட்டியின் இறுதியான நாற்பத்தாறு ஆண்டுகளில் நடைபெற்ற ஆறு போர்களினால் பல்லவர்களும், ஏழு போர்களினால் பாண்டியர்களும் கை சளைத்திருந்தனர். 854-இல் நடைபெற்ற குடமூக்குப்போர் பெரும்போர். அதை அடுத்து எட்டே ஆண்டுகளில் 862-இல் நடைபெற்ற அரிசிலாற்றுப் போர்தான் இரு தரப்பினரையும் பெரிதும் பலவீனப்படுத்திவிட்டது. அதைத் தொடர்ந்து நடந்த இடவைப் போரும் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

பதினெட்டு ஆண்டுகளுக்குள்ளாக ஒரு பெரிய Show-down-ஐ இருதரப்பினரும் எதிர்நோக்க வேண்டியிருந்தது.

திருப்புறம்பியத்தில் பல்லவன் நிருபதுங்க பல்லவரின் சார்பாக அவர் மகன் அபராஜித பல்லவன் தலைமை தாங்கினார். அவருடைய உறவினராகிய கங்கமன்னர் பிருதிவீபதியும் அவருடைய படைகளைக் கொண்டு வந்திருந்தார். ஆதித்த சோழரின் படைகளும் சேர்ந்து பெரும் படை உருவாகியிருந்தது.

இவர்களை எதிர்த்து இரண்டாம் வரகுண பாண்டியர் தம் படைகளுடன் நின்றார்.

போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பிருதிவீபதியின் தலைமையில் அவருடைய படைகள் பாண்டியப்படைகளின்மீது பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டன.

திருப்புறம்பியத்தில் பிருதிவீபதிக்கு பள்ளிப்படைக்க

வரகுண பாண்டியர் ஒப்புயர்வு காணமுடியாத அளவுக்கு வீரத்தைக் காட்டினார். கங்கப்படைகளால் ஏற்படுத்தப்பட்ட பெருஞ்சேதம் அவருக்குச் சீற்றத்தை ஊட்டிவிட்டது.

போரின்போது பிருதிவீபதி ஏறியிருந்த யானையின்மீது வரகுண பாண்டியர் பாய்ந்து அவரைக் கொன்றுவிட்டார்.

ஆனால் பிருதிவீபதி இறக்குமுன்பே போரின் போக்கைப் பல்லவர்களுக்கு முழுமையாக சாதகமாக ஆக்கிவிட்டுவிட்டார்.

பல்லவ வெற்றி உறுதியாகிவிட்டது.

'தன் உயிரைக் கொடுத்து அபராஜிதனை அபராஜிதனாகவே ஆக்கிவிட்டார்' என்று கங்கர்களின் உதயேந்திரக் கல்வெட்டு கூறுகிறது.
அபராஜிதன் - அ + பர + ஜிதன் = எதிரிகளால் வெல்லப்படமுடியாதவன்.

திருப்புறம்பியத்தில் பிருதிவீபதிக்கு பள்ளிப்படைக்கோயில் ஒன்றை எழுப்பினார்கள்.
போரில் வீத்தைக் காட்டி உயிர்துறக்கும் மன்னர்களுக்குப் பள்ளிப்படை கோயிலை எழுப்புவது அக்கால வழக்கம். இன்றும் அந்தக் கோயில் இருக்கிறது என்பார்கள்.

பாண்டியர்கள் அந்தப் போரினால் தங்களின் சாம்ராஜ்ய அந்தஸ்தை இழந்தனர்.
பல்லவர்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும்கூட அவர்களும் தங்களின் வலுவை இழந்தார்கள்.

திருப்புறம்பியப் போரின் விளைவால் ஆதித்த சோழருக்குப் பெருத்த லாபமேற்பட்டது.

சோழநாடு முழுவதும், பாண்டிநாட்டின் வடபகுதி, முத்தரையரின் நாட்டின் மிச்சம் மீதாரி முதலியவை அவருக்குக் கொடுக்கப்பட்டன.

திருப்புறம்பியப் போர் முடிந்து இரண்டே ஆண்டுகளில் நிருபதுங்கவர்ம பல்லவர் இறந்துபோனார்.
அதே 882-ஆம் ஆண்டில் ஆதித்த சோழர் தொண்டைநாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டார்.
வலிவிழந்து போன அபராஜிதவர்மர் இன்றைய ஆந்திராவின் தென்பகுதியில் இருந்த பிரதேசத்தை ஆண்டுகொண்டிருந்தார்.

ஆதித்தரின் மகனாகிய பராந்தக சோழர் அபராஜித பல்லவரை முறியடித்து பல்லவர் மேலாதிக்கத்தை இல்லாமல் செய்துவிட்டார்.

கடைச்சங்க காலத்தின் முடிவிற்குப் பின்னர் ஆறு நூற்றாண்டுகளாகத் தங்களின் சுய உரிமையை விட்டுவிட்டு, தங்களின் சொந்த நாட்டின் பெரும் பகுதியையும் முத்தரையரிடமும் பல்லவர்களிடமும் விட்டுவிட்டு சிறிய பிரதேசத்தை மட்டுமே ஆண்டுகொண்டிருந்த சோழர் குடியின் தாழ்ந்த நிலைக்குப் ஆதித்த சோழரும் பராந்தக சோழரும் பரிகாரம் தேடிக்கொண்டு பழியும் வாங்கிக்கொண்டனர்.
கி.பி 904-இல் தமிழகத்தின் பெரும்பகுதி சோழநாட்டிற்குள் வந்துவிட்டது.

பாண்டியர் அத்தனை தோல்விகண்டும் 890-இல் நடந்த இன்னொரு போரில் பெண்ணாகடத்தை அழித்தார்.

சோழர்கள் பாண்டியநாட்டைப் பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

இந்த முயற்சி கிட்டத்தட்ட பல ஆண்டுகள் நடந்து, 966-இல் சோழர்களிடம் பாண்டியநாடு சென்றது. இருப்பினும் பாண்டியர்கள் ஆங்காங்கு இருந்துகொண்டு போராடிக்கொண்டே யிருந்தனர். ராஜராஜ சோழர் காலத்திலும் ராஜேந்திர சோழர் காலத்திலும்கூட அவர்கள் போராடினர். கடைசியில் ராஜேந்திர சோழர் காலத்தில் பாண்டிய அரச வம்சத்தை நீக்கிவிட்டு, தம் சொந்த மகன்களை 'சோழபாண்டியர்' என்ற பட்டத்தோடு பாண்டியநாட்டை ஆளுமாறு செய்தார். அவர் காலத்தில் சோழநாடு மிகபெரிய அளவில் பரந்துவிரிந்தது.

இந்த மாதிரியாகத் தமிழகத்தின் வரலாற்றை மாற்றிவிட்ட போர் - திருப்புறம்பியப ்போர்.

கோப்பெருஞ்சிங்கன் காலம்:

பல்லவர் குலத் தோன்றலான காடவர் கோன் எனப்படும் கோப்பெருஞ் சிங்கன் பி
ற்காலச்சோழர் ட்சிக் காலத்தில் முக்கிய பங்கு வகித்தான். தென் ற்காடு மாவட்டத்திலுள்ள
சேந்தமங்கலம் அவனது தலை நகராக விளங்கியது. சோழர்களின் கீழ் சிற்றரசனாக விளங்கிய
காடவர்கோன் அவர்களது பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனது செல்வாக்கை அதிகரித்தான்.
பாண்டிய இளவரசன் சுந்தர பாண்டியனுடன் போர் தொடுத்தான். தெள்ளாறு என்ற இடத்தில் சோழ
மன்னன் மூன்றாம் இராஜ ராஜனை வென்று சேந்தமங்கலத்தில் சிறை வைத்தான். கோபெருஞ்சிங்கனின்
கல்வெட்டுக்கள் தொண்டை நாட்டிலுள்ள பல கோயில்களில் கிடைத்துள்ளன. தொண்டிநாட்டின் சில பகுதி
கள் சிலகாலம் கோப்பெருஞ்சிங்கனின் ளுகைக்கு உட்பட்டிருந்தன.

பாண்டிமண்டலத்தில் போசளர்கள்

திருச்சிக்கு அருகேயுள்ள கண்ணனூர் எனும் ஊரினைத்
தலைமையிடமாகக் கொண்டு கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த
போசளர்கள் தமிழகத்தில் காலூன்றினர். பாண்டியர்களுக்கு
எதிராகச் சோழர்களுக்கு உதவ முற்பட்டதனால் இவர்களது
பலம் மிகுந்தது. கண்ணனூரில் போசளர் ஆட்சியைத்
தோற்றுவித்தவன் வீரநரசிம்மனாவான். இவ்வரசன் கி.பி. 1231- இல்
காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கனைத் தோற்கடித்து அவன்
சிறைபிடித்திருந்த மூன்றாம் இராஜராஜ சோழனைச் சிறையிலிருந்து
மீட்டு, அவனைச் சோழர் அரியணையில் அமரச் செய்தான்.
போசள வீரநரசிம்மன் மகனான வீரசோமேஸ்வரன் பாண்டிய
நாட்டை வென்று அவர்களிடமிருந்து திறைபெற்றான். இக்கால
கட்டத்தில் வெட்டப் பெற்ற போசளர் கல்வெட்டுக்கள் பல
பாண்டியநாட்டின் பல்வேறு இடங்களில் காணப்பெறுகின்றன.
பாண்டியர் போசளர்களுடன் நட்புறவுடன் திகழும் நிலை
ஏற்பட்டது.
போசள வீரசோமேஸ்வரனுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே
இருந்த நட்பு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. கி.பி. 1250-இல்
முடிசூடிய இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் போசள
மன்னனுடன் பகைமை கொண்டான். அவனது தம்பியான
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264- இல்
வீரசோமேஸ்வரனைப் போரில் கொன்று, பாண்டிய நாட்டில்
இருந்த போசளர் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வந்தான்

சோழப்பேரரசும் பாண்டியப்பேரரசும்

கி.பி. 1250-இல் முடிசூடிக்கொண்ட முதலாம் சடையவர்மன்
சுந்தர பாண்டியன் கி.பி. 1257-இல் சோழநாட்டின் மீது படை
எடுத்து மூன்றாம் இராஜேந்திர சோழனைப் போரில் வென்று,
அவனைத் தனக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாகச் செய்தான்.
பின்னர் கி.பி. 1264-இல் போசள மன்னன் வீரசோமேஸ்வரனைக்
கண்ணனூரில் (திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம்) சமர்புரிந்து
கொன்றான். அடுத்து, சேந்தமங்கலம் சென்று,
தொண்டைமண்டலத்தை ஆட்சி புரிந்து கொண்டிருந்த காடவர்
கோமான் கோப்பெருஞ்சிங்கனை வென்று, அவனைத் தன்
மலோதிக்கத்தின் கீழ்க்கொணர்ந்தான். கொங்குநாட்டையும்
கைப்பற்றினான். இறுதியில் தெலுங்குச் சோழனாகிய
கண்டகோபாலனையும் போரிற்கொன்று அவனது தலைநகராகிய
நெல்லூரில் (ஆந்திர மாநிலம்) வீராபிடேகம் செய்து கொண்டான்.
எனவே சடையவர்மன் முதலாம் சுந்தரபாண்டியனின் பேரரசு
தெற்கே குமரிமுனையிலிருந்து வடக்கே கிருஷ்ணை என்ற பேராறு
வரையில் பரவியிருந்தது. இவனது காலத்தில்தான் முழுத்தமிழகமும்
பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டுத் திகழ்ந்தது. கி.பி. 1279-இல்
மூன்றாம் இராஜேந்திரன் இறந்த பிறகு சோழராட்சி முடிவு
பெற்றது.