Saturday, June 30, 2012

சிவகிரி பாண்டிய வன்னியர்களின் தென்காசி பட்டயம் :






சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும்.

பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்

சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை:

சகல விருதுகளுடையோன், சந்திரபதி,

அரசுபதி,  வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.




=========================================


This one of the leading vanniyar palayam was located in the Sivagiri taluk of Tirunelveli, on the slopes of the Western Ghats.

proof

http://books.google.mv/books?id=Erin3nkU3ZUC&q=sivagiri#v=snippet&q=sivagiri%20vanniya%20by%20caste&f=false

The Poligar of Sivagiri.
=======
Sivagir poligars belong to the “Palli or Vanniyan caste”.
Please refer to “History of the military transactions of the British nation in Hindustan” written by Orme(1861).
Also refer to the Tirunelveli district Gazetter (Page 416-419) published in 1916 by H.R.Pate.
There is a literary work “Sivagiri Kadhal” written by a poet named Pugazhendhi in which the Sivagiri chieftain is mentioned as “vanniya kula rasa Varagunarama pandiyan”.
Also a descendant of poligar of Sivagiri even participated in a Vanniyar(Palli) caste conference.
The zamindar of Sivagiri Sri.Sangili Veeera Pandiya Chinnathambiar(1854-1896) is defintely a Vanniyar by caste.

Friday, June 29, 2012

வன்னியர் பாளையமான சிவிகிரி பாண்டிய வன்னியர்கள் பற்றிய கட்டுரை : திரு. அண்ணல் கண்டர் நேரடியாக சென்று அவர்களை சந்தித்த நிகழ்வுகளும் இதில் அடக்கம்


செய்தியை  அளித்த திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு நன்றி .

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_3995.html



என் தென் தேச யாத்திரை

இது புகழ் பெற்ற பழைய தொடர் கட்டுரை ஒன்றின் தலைப்பு. தற்போது
( ஏப்ரல் 2012 - அதாவது இந்த கட்டுரை எழுதும் போது) ஜூனியர் விகடனில்
ஜி. ராமகிருஷ்ணன், எனது இந்தியா என்கிற தலைப்பில் எழுதி வருகிறார்
அல்லவா ! இதை போலவே, 1930 களில் சுதேசமித்திரன் இதழில் திரு.உலகநாத நாயகர் என்பவர் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இவர் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர். மேலும் வன்னியகுல க்ஷத்ரிய மகாசங்கத்திலும் சேவையாற்றி வந்தார். அவர் எழுதிய தொடர் கட்டுரையின் தலைப்பே எனது தென் தேச யாத்திரை. இந்த கட்டுரை தொடர் தனது எழுத்து பணிக்கு பெரும் தூண்டுதலாக இருந்தது என்று புகழ்பெற்ற சரித்திர நாவலாசிரியர் திரு .சாண்டில்யன் அவர்கள் புகழ்ந்து எழுதியதை எனது தந்தையார் கவிஞர் திரு.காவிரிநாடன் அவர்கள் உணர்வுபூர்வமாக குறிப்பிடுவார்.

ந்த படத்தில் இடமிருந்து மூன்றாவதாக அமர்ந்திருப்பவர் தான் திரு. உலகநாத நாயகர்.  படத்தில் உள்ள மற்றவர்களும் வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்திற்கு உழைத்தவர்களே.  1930 களில் இந்த நிழற்படம் எடுக்கப்பட்டது. ஸ்ரீ மான் "சம்புகுல வள்ளல்" சென்னை காட்டுப்பாக்கம் பா. ல. முருகேச நாயகரின் வாரிசு ஒருவரது  வீட்டில் இந்த படம் காணப்படுகிறது.   


சரி!இப்போது இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நானும் எனது மாப்பிள்ளை திரு. ஸ்ரீ விஜய் கண்டர் அவர்களும் சுமார் 12 நாட்கள் பயணம் செய்தோம். அந்த பயணத்தின் முக்கிய செய்திகளை விளக்குவதால் இந்த கட்டுரைக்கு "எனது தென் தேச யாத்திரை" என்று தலைப்பிட்டேன்.

இந்த பயணத்திற்கு இரண்டு நோக்கங்கள். ஒன்று மூன்றாயிரம் ரூபாய் விலையுள்ள "க்ஷத்ரியன்" இதழ் தொகுப்பை promote செய்வது. இரண்டாவது தென் மாவட்டங்களில் வன்னியர் நிலை பற்றி அறிந்து கொள்வது.




தென்காசியை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஒருவரது மகனும் அச்சக அதிபருமான திரு. வேல் முருகன் அவர்கள் இப் பயணத்திற்கு பெரிதும் துணையாய் இருந்தார். குற்றால அருவிக்கு அருகிலேயே அறையும் எடுத்து கொடுத்திருந்தார். அவரது உதவியுடன் தென்காசியில் வன்னியர்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிக்கு சென்று பார்த்தோம்.

தென்காசி நகரின் மீன் வியாபாரம் வன்னியர்கள் கையில் தான் இருக்கிறது. குறுகலான தெருக்களை கொண்ட சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் பகுதி இது. இந்த பகுதிக்குள்ளேயே சுமார் 10 கோவில்களும் இருக்கின்றன.

பொதுவாக தென் மாவட்டங்களில் வசிக்கும் வன்னியர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது. தென் பகுதி வன்னியர்களின் குல தெய்வ கோவில்களும் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இருக்கின்றன.










தென் பகுதி வன்னியர்கள், அவர்கள் மற்றும் அவர்களது முன்னோர்களின் நினைவுக்கு எட்டிய காலம் தொட்டு தென் மாவட்டங்களில் தான் வசித்து வருகின்றனர்.

நாதஸ்வரம், மிருதங்கம் வாசித்தல், இசைக்கலையை  கற்பித்தல் மற்றும் உள்ளூர் நீர் நிலைகளை குத்தகைக்கு எடுத்து மீன் பிடித்தல் ஆகியவை தொழிலாக இருந்துள்ளன.

படையாட்சி, அண்ணாவி (இந்த தெலுங்கு சொல்லுக்கு "வாத்தியார்" என்று அர்த்தமாம்), புலவர் போன்றவை அங்கு சாமானிய வன்னியர்களின் பட்டபெயர்களாக இருக்கின்றன. 

மேலும் சவளக்காரன்  என்றும் குறிப்பிடபடுகின்றனர். சவளம் என்பது வாள் போன்ற ஒரு ஆயுதம் என்றும் அதனை கொண்டு போரிட்டதால் தாங்கள் அந்த பெயரிலும் அழைக்கப்பட்டதாக தென் பகுதி வன்னியர்கள் கூறுகின்றனர்.

நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஊருக்கு ஓரிரண்டு வன்னியர் குடும்பங்களாவது வாழ்ந்து வருகின்றனர். கடையநல்லூர் புளியங்குடி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட ஏராளமான ஊர்களில் ஊருக்கு 100  குடும்பங்களுக்கு மேல் வன்னியர்கள வாழ்கின்றனர்.

குற்றாலத்தில் வன்னியருக்கு பாத்தியப்பட்ட மடத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது ...
 தமிழக அமைச்சராக இருந்த திரு. எஸ். எஸ். ராமசாமி படையட்சியாரின் பெயர் சொல்லும் கல்வெட்டு நெல்லை மாவட்டம் இடைகாலில் காணப்படுகிறது  

நெல்லை குமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள திசையன்விளை என்ற ஊரில் கூட 50 க்கும் மேற்பட்ட வன்னிய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தென் பகுதி வன்னியர்களில் குமரி மாவட்ட வன்னியர்கள் நிலை வித்தியாசமானது .

1956 ஆம் ஆண்டு மொழி வழி மாநில பிரிவினையின் போது கேரள மாநிலத்தில் இருந்த நாகர் கோவில் , செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன. அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியராக வன்னியர் சமுதாய விடிவெள்ளிகளில் ஒருவரான திரு. அம்பாசங்கர் IAS அவர்கள் பொறுப்பேற்றார்.      
                    
 சமூக பற்று மிக்க அம்மேதை, தன் குல மக்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினார். கோட்டாறு, வடசேரி உள்ளிட்ட தற்போதைய குமரி மாவட்டத்தின் பலபகுதிகளில் வன்னியர்கள் வசிப்பதையும், தங்கள் பூர்வ பெருமை அறியாது உள்ளூர் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்ததையும் அறிந்தார்.

அவ்வன்னியர் வீடுகளில் இருந்துதான் அம்பா சங்கர் அவர்களுக்கு உணவு கொண்டு செல்லப்படும்.  நம் மக்களிடம், உங்களுக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக அவர் இதனை செய்திருக்கவேண்டும்.

நம் மக்களை அரவணைத்தாலும் அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் அம்பா சங்கர் அவர்களுக்கு சிக்கல் ஏற்ப்பட்டது. நாகர் கோவில், செங்கோட்டை தாலுக்காக்களில் வன்னியர்களுக்கு சாதி சான்று வழங்குவதில் ஆவண ரீதியிலான முட்டுகட்டைகள் இருந்திருகின்றன.

எனவே, நம் மக்கள் உள்ளூர் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு அவர்களுக்கு "இந்து- பரதர்" என்று சாதி சான்று வழங்க வழி செய்தார்.

நாகர்கோவில் வடசேரியில் சுகம் மருத்துவமனை நடத்தி வரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் திரு. முத்துராமலிங்கம் அவர்களின் தந்தையார் இவர்.
  

ஆனால் இன்னொரு பின்னடைவு அவர்களுக்கு ஏற்ப்பட்டது. அவர்கள் வன்னியர்களே என்றாலும் சாதி சான்றிதழ் வேறாக இருப்பதால் வடமாவட்டங்களை சேர்ந்த வன்னியர்கள் பெண் கொடுக்கவோ எடுக்கவோ தயங்குகின்றனர்.

ஆனாலும் தாங்கள் வன்னியர்கள் என்பதை விளக்கி, தங்கள் நிலையை புரியவைத்து அரியலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வன்னியர்களிடம் குமரி மாவட்ட வன்னியர்கள் சம்பந்தம் செய்து உள்ளனர்.

குமரி மாவட்ட வன்னியர்களுக்கு, வன்னியரின் குல பெருமையும் உறவும் வேண்டும். அதே சமயம் பரதர் சான்றிதழின் மூலம் கிடைக்கும் சலுகையும் வேண்டும். இது கொஞ்சம் சிக்கலான நிலை தான்.

விருதுநகர் மாவட்டத்திலும் வன்னியர்கள் கணிசமாக வாழ்ந்துவருகின்றனர். வன்னியர்களுக்கு பாத்தியப்பட்ட பல கோவில்களையும் இங்கு காணலாம். ராஜபாளையத்தில் வன்னியர்களிடம் இருந்த திரௌபதி அம்மன் கோவில் எப்படியோ தெலுங்கு ராஜுக்கள் வசம் சென்று விட்டது.

ராஜபாளையத்துக்கு அருகில் தான் வன்னியர்களின் பெருமையை பறைசாற்றும் சிவகிரி அரண்மனை அமைந்துள்ளது. அந்த அரண்மனையில் தற்போது நீதி மன்றம் உள்ளிட்ட அரசு அலுவகங்கள் செயல்பட்டு வருகின்றன.     

சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த வீரபாண்டியன், ராஜபாளையத்தில் வணிகம் செய்து வருகிறார். அவரது வழிகாட்டலுடன் சிவகிரிக்கு சென்றோம். அரச பரம்பரையை சேர்ந்த சிலர் தேனீர் கடை நடத்தி வருகின்றனர். அவர்களை சந்தித்து அளவளாவினோம்.

வன்னியகுல க்ஷத்ரியர்களான சிவகிரி அரச வம்சத்தாருடன் நான். 

சிவகிரி அரச வம்சத்தாருடன் புளியங்குடியை சேர்ந்த திரு. லக்ஷ்மணன் படையாட்சியார் அவர்கள் 


சிவகிரி அரச வம்சத்தாருடன் தென்காசியை சேர்ந்த திரு. வேல்முருகன் படையாட்சியார் அவர்கள்  

சிவகிரி அரச வம்சத்தாருடன் திரு. ஸ்ரீ விஜய் கண்டர் அவர்கள் 


அப்போது இலை வாணியர் அல்லது சேனை தலைவர் என்று சொல்லப்படும் சமூகத்தை சேர்ந்த திரு. நல்லசிவம் அவர்கள் எதிரில் வந்தார். சிவகிரி வம்சம் மறவர் சமுதாயம் என்று பொய் பிரச்சாரம் செய்து வருபவர் இவர் தான். அவரோடு பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது. அப்போது எதிரிலேயே இருந்த சிவகிரி அரச வம்சத்து வாரிசுகள் தங்களை வன்னியர் என்று கூறினாலும், இல்லை இல்லை நீங்கள் மறவர் தான் என்றார் நல்லசிவம். அவருக்கு சிவகிரி வரலாற்றை நாம் விளக்கினோம்.

அதாவது வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பாண்டியர்களின் வாரிசுகளான சிவகிரி அரசர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். இதற்க்கு ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. திருக்கைவளம், சிவகிரி காதல், சிவகிரி திக்கு விஜயம் போன்ற நூல்களும் கைபீதுகளும் ஆங்கிலேயர்களின் நூல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவகிரி அரசர்களின் பத்திரங்களும் அவர்களை "வன்னியகுல க்ஷத்ரியர்" என்றே கூறு கின்றன. அவ்வளவு ஏன் 23 .05 .2012  அன்று திருமணம் செய்து கொள்ள இருக்கும் (இதை தட்டச்சு செய்த நாள் 22 .05 .2012  ) சிவகிரியின் தற்போதைய ஜமீன்தார் ராஜா வ. சேவுக பாண்டிய சின்ன தம்பியார் என்ற விக்னேஷ் அவர்களின் சாதி சான்றிதழில் கூட "வன்னிய குல க்ஷத்ரியர்" என்று தான் உள்ளது.

சிவகிரி ஜமீன்தார் அனுப்பிய திருமண அழைப்பிதழ்
தற்போதைய சிவகிரி ஜமீன்தார் வன்னியகுல க்ஷத்ரியரான தெய்வ திரு. வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் அவர்களின் புதல்வன் என்ற செய்தி திருமண அழைப்பிதழின் உள்ளே இடம்பெற்றுருக்கிறது.

 

சிவகிரி அரசர்கள் "வன்னியகுல க்ஷத்ரியர்கள்" என்று கூறும் அவர்களது சொத்து பத்திரம்.
 
1925  ஆம் ஆண்டு மைனர் பாண்டியன் என்ற சிவகிரி ஜமீன்தார் காலமானார். இதனால் இதே ரத்த உறவை சேர்ந்த கல்வி அறிவு பெறாத வன்னியர் ஒருவரை உறவினர்கள் சிவகிரி ஜமீனாக நியமித்தார்கள். அவரோ சிங்கம்பட்டி மறவர் ஜமீனை சேர்ந்த பெண்ணை காதலித்து மணம் புரிந்தார்.

சிவகிரி வன்னியர் பாளையத்தின் ஐந்தாம் ஜமீன்தார் மைனர் ராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார்.

அரண்மனைக்கு ராணியாக வந்த அந்த மறவர் குல பெண்மணி, தன் வாரிசுகளுக்கு தன் சமூகத்தில் பெண் எடுக்க ஆரம்பித்தார். தற்போது ராணியாக இருக்கும் திருமதி. பால குமாரி நாச்சியார் அவர்கள் சேத்தூர் மறவர் ஜமீனை சேர்ந்தவர். பெண் எடுத்தது மறவர் சமூகத்தில் என்றாலும் சிவகிரி அரசர்கள் அனைவரும் வன்னியகுல க்ஷத்ரியர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

இன்றும் சிவகிரியை சுற்றி உள்ள பல கிராமங்களில் சிவகிரி அரச வம்சத்து வன்னியகுல க்ஷத்ரியர்களை காண முடிகிறது. சிவகிரி ஜமீன்தார் மைனர் பாண்டியனின் நினைவு நாளின் போது, சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த பலர் வன்னியர் சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர். இந்த செய்திகளை எல்லாம் நல்லசிவத்திடம் காரசாரமாக விவாதித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டாலும் நீண்ட நேரத்திற்கு மனம் அமைதி அடையவில்லை.

இதை போலவே, தென் மாவட்ட வன்னிய அரசர்கள் பற்றி விளக்கமாக எழுதவேண்டும். அதை வேறொரு சந்தர்பத்தில் பார்க்கலாம். 

திண்டுக்கல் மாவட்ட வன்னியர்களின் கதையோ வேறு. பெயர் தான் தென் மாவட்டமே தவிர வட மாவட்டங்களை போலவே வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி திண்டுக்கல்.

திண்டுக்கல், நத்தம் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை வன்னியர்களே நிர்ணயிக்கின்றனர். ஆனால் வன்னியர்கள், இந்து வன்னியர் - கிருஸ்தவ வன்னியர் என்று பிரிந்து கிடக்கின்றனர்.




2011  ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் பா ம க சார்பில் வன்னிய கிறிஸ்தவரான பால் பாஸ்கர் போட்டியிட்டார். இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர். இந்தியாவின் புகழ் பெற்ற தொண்டு நிறுவனம் இவருடையது. பசுமை வானொலி என்ற பெயரில் பண்பலை வானொலியும் நடத்தி வருகிறார். கல்லூரி அதிபருமான இவருக்கு அனைத்து சமூகத்தினர் மத்தியிலும் நல்ல செல்வாக்கு. ஆனாலும் தோற்று போனார். காரணத்தை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும்.

திண்டுக்கல் வன்னிய கிறிஸ்தவரான பேராசிரியர் திரு. ரூஸ்வெல்ட் அவர்கள் எழுதிய நூல்.  

மேலே காணும் புத்தகத்தின் 59  ஆம் பக்கத்தில்...

இவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பாலபாரதி
கன்னடக்காரர்.

எல்லா ஊரிலும் கம்யூனிஸ்ட் கட்சி மதத்துக்கு எதிரானது ஆனால் திண்டுக்கல் தேர்தலில் ஆர் எஸ் எஸ் அமைப்புடன் ரகசிய கூட்டணி சேர்ந்து கிருஸ்தவரான பால் பாஸ்கர் ஜெயிக்க கூடாது என்று பிரச்சாரம் செய்து ஓட்டை பிரித்து கோட்டைக்குள் இறங்கினார் பாலபாரதி.

தமிழனும் தோற்றான். வன்னியனும் தோற்றான்.        
                   
திண்டுக்கல்லில் மறக்கமுடியாத இன்னொரு மாமனிதர் வன்னிய கிறிஸ்தவரான அருட்தந்தை பாத்திமா நாதன். தவசிமேடை என்ற ஊரில் ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கிறார். 70  வயதை கடந்த முதியவர். நாம் நேரில் சென்று பார்த்தபோது. ரத்த பாசத்தால் புளகாங்கிதம் அடைந்தார். நம்மை ஆசிர்வதித்தார்.

நாம் பார்த்ததில் தென் மாவட்டங்களிலேயே பிறந்து வளர்ந்த சில வன்னியர்கள் உயர் அதிகாரிகளாகவும் பணியாற்று கின்றனர். குறிப்பாக நெல்லை அண்ணா பல்கலை கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய காளியப்பன் குறிப்பிடதக்கவர். கடந்த 2010 ஆம் ஆண்டு அவரை அரசு விழா ஒன்றில் தி மு க சட்டமன்ற உறுப்பினரான மறவர் சமூகத்தை சேர்ந்த மாலைராஜா மேடையில் வைத்தே தாக்கினார். அப்போதைய
தி மு க அரசு இதை கண்டிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை. ஒட்டுமொத்த வன்னியர்களும் இதை ஒரு சம்பவமாகவே எடுத்து கொள்ளாத அவமானமும் அரங்கேறியது.

தென் மாவட்டங்களில் விரல் விட்டு என்ன கூடிய அளவிலேயே வன்னியர்கள் வாழ்க்கை தரத்தில் உயர்ந்து உள்ளனர். பெரும்பான்மை வன்னியர்களின் நிலை போதிய உயரத்தில் இல்லை.

மொத்தத்தில் திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வன்னியர்கள் அடியோடு இல்லை என்பதெல்லாம் பச்சை பொய்.

வட மாவட்டங்களில் வசிக்கும் முக்குலத்தோரை விட தென் மாவட்டங்களில் அதிக அளவில் வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதே மெய்.

   -நன்றி-        

இப்பயணத்துக்கு உற்ற துணையாய் இருந்த திரு. ஸ்ரீ விஜய் கண்டர், தவத்திரு. அன்னை சகுந்தலா அம்மையார்,  திரு. வேல்முருகன், திரு. இசக்கியப்பன், திரு. ஆறுமுக நயினார், திரு. அரிகரன், திரு. வி. எம். முருகன் , திரு. சாமித்துரை, திரு. சுரேஷ், திரு. செண்பகராஜ், 
திரு. வீரபாண்டியன் (ராஜபாளையம்), திரு. குருநாதன் (திசையன் விளை), டாக்டர். முத்துராமலிங்கம் (கன்னியாகுமரி), வழக்கறி ஞர் திரு. நவநீத கண்ணன்( மதுரை ), திரு. சண்முக சுந்தரத்தின் மாமனார் (திண்டுக்கல்),   திரு. மைகேல் டேவிட் (திண்டுக்கல்) மற்றும் இந்த வலைப்பூவை உருவாக்கி தட்டச்சும் செய்த திரு. அ.கார்த்திக் நாயகர் உள்ளிட்ட அனைவருக்கும்... 

          
    

சோழர்களின் வாரிசுகள் பற்றி தினமணி





அண்ணாமலை பல்கலை கழகத்தில் 1995 ஆகஸ்ட் 26, 27 இல் நடைபெற்ற கருத்தரங்கில் சோழ மன்னர்களின் வாரிசுகளை பற்றி பேசப்பட்ட செய்தி 1995 அக்டோபர் ௦08 ஆம் தேதி தினமணியில் வெளியிடப்பட்டது.  






நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/1.html

சோழர்கள் வன்னியர்களே என்று கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த புலவர் திரு. செ.ராசு அவர்கள் எழுதிய கட்டுரை.



            
                    
                

அண்ணாமலை பல்கலை கழகத்தில் 1995 ஆகஸ்ட் 26,27 இல் நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்று பேரவையின் இரண்டாவது கருத்தரங்கில் புலவர் திரு. செ. ராசு அவர்களால் படிக்கப்பட்ட  இக்கட்டுரை 1999 ஆகஸ்ட் மாத "அச்சமில்லை" இதழில் வெளியிடப்பட்டது.   






நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_7841.html

சோழர் வாரிசு - நூல் வெளியீட்டு விழா செய்தி



                 

நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_18.html

ராஜ ராஜ சோழ மன்னர் வாரிசு பற்றி நக்கீரன்










 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_2153.html

சோழர் வன்னியரே - கனல் மாத இதழ்




http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_9015.html

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

சோழர் வாரிசு - தமிழ் ஓசை நாளிதழ்


 

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_9072.html

ஆண்டியப்ப சூரப்ப சோழனார் பட்டாபிஷேக பிரகடனம் - 1943


 

 

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு

http://annalpakkangal.blogspot.in/2012/05/1943.html

சிதம்பரநாத சூரப்ப சோழனார் பட்டாபிஷேக பிரகடனம் - 1978


 

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு

http://annalpakkangal.blogspot.in/2012/05/1943.html

பல்லவர் வழித்தோன்றல்களான உடையார் பாளையம் வன்னிய அரசர்களின் வரலாறு.


http://annalpakkangal.blogspot.in/2012/06/blog-post_28.html

Thursday, June 28, 2012

பொன்னியம்மன் கோவிலில் உள்ள காடுவெட்டியை குறிக்கும் சிற்பம்




 செய்ததை அளித்த பாபு நாயக்கர் அவர்களுக்கு நன்றி :

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து அனுமந்தபுரம்
செல்லும் சாலையில் 5 கி.மீ தொலவில் அமைந்துள்ள கொண்டமங்கலம் கிராமம்.
இக்கிராமத்தின் வடக்கு பகுதியில் வனசூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள
பொன்னியம்மன் கோவிலில் உள்ள பலித்தூண் சிறுக்கோவில். அம்மனை வழிபடுவதற்கு
முன் இந்த கற்பலகைக்கு தான் முதல் மரியாதை. கற்பலகையில் மரம் வெட்ட
பயன்படும் அரிவாள்(கத்தி) மற்றும் கோடரி ஆகிய உருவங்கள் உள்ளன. கோவில்
வடக்கு பார்த்து உள்ளது. இது முழுக்க முழுக்க வன்னியர்கள்
கட்டுப்பாட்டில் உள்ள கோவில். 4.5.2012 அன்று தான் கும்பாபிசேகம்
நடைபெற்றது.

குறிப்பு:இந்த கற்பலகையை பார்க்கும் போது நாம் காடுவெட்டியர் என்பதை
நினைவு படுத்துவது போல் உள்ளது. இது வனப்பகுதியின் அருகில்
அமைந்திருப்பது கூடுதல்  விசேசம்.

உங்கள் கருத்துக்களை தெரிவுயுங்கள்.
படம் இணைத்துள்ளேன்

Wednesday, June 27, 2012

1987 இல் நடைபெற்ற வன்னியர் சங்க ஒரு வாரகால சாலை மறியல் பற்றி அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை.

1987 இல் நடைபெற்ற வன்னியர் சங்க ஒரு வாரகால சாலை மறியல் பற்றி அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. 


தகவலை வழங்கிய சொந்தம்: திரு. கமலன் அவர்கள்.   







March 15, 1989

Tindivanam Journal; Seeking Its Share, Rural Caste Tries Disobedience

By BARBARA CROSSETTE, SPECIAL TO THE NEW YORK TIMES
LEAD: From their homes of mud and thatch nestled along country roads lined with tamarind trees, landless rural laborers have been coming out by the thousands to block roads, stop trains and join in other acts of mass disobedience. They are demanding that affirmative-action laws deliver on promises to improve the lot of one of Hinduism's poorest rural castes.

The new movement of farm workers, members of the Vanniar caste, is being watched all over India. Here, the powerless lowest social groups often suffer discrimination and abuse, according to public-action organizations, whose assertions are supported by extensive reporting in the Indian press.

To some political observers and welfare organizations, the Vanniar movement in Tamil Nadu, India's southernmost state, holds promise as an example to the disadvantaged of success through unity and the strength of numbers. To others, it sounds an alarm, provoking fears of caste-based politics that could further fragment Indian society. 

Where the Vanniar movement leads, and what kind of a model it creates, depends to a great extent on the next moves made by its leader and founder, Sanjivikaundar Ramadoss, politicans in Tamil Nadu and foreign diplomats watching the campaign say.

Impatience With Politicians

The state has a new government, which Dr. Ramadoss said he had already put on notice. The Government of Prime Minister Rajiv Gandhi assigned a Cabinet minister to meet with him last year and has pledged to study his complaints. A newly elected state government in Tamil Nadu has suggested changes in a state affirmative-action program on Monday in response to Dr. Ramadoss's demands, but militant Vanniars rejected the proposals the same day as ''treacherous and an insult to the Vanniar community,'' the Press Trust of India reported from Madras. The Vanniars are reported to be planning more protests.

Somewhere between his birth into a small, dark hut in the village of Keel Siviri, about 10 miles from this market town of 35,000 people, and his comfortable life now as a physician, Dr. Ramadoss grew impatient with politicians, who, he said, cheated his people of their fair share of a generous affirmative-action program.
Dr. Ramadoss said the Vanniars, scattered in small villages around the town, number 20 million, about a third of the state's population. Federal officials, questioning the figures, say they would like to take a new census and work from that.

Shortage of Arable Land

But whatever the final count, there is no doubt among residents of Tamil Nadu that the Vanniars dominate a large area of rural hinterland west and south of Madras, the state capital. There, mostly on other people's land, they labor in the rice, sugar cane, peanut and vegetable fields. Some Vanniars, less than a fifth of them, own a few acres of arid ground.
Their villages, already suffering shortages of arable land, have this year been struck by a drought that has emptied their ponds of water and is beginning to dry the wells.
Dr. Ramadoss, who lives above his private clinic in Tindivanam, said the children in Keel Siviri suffer ''all the diseases associated with malnutrition.''

Affirmative-Action Plan

At a small, ramshackle building that serves as the Vanniar Organization headquarters in Tindivanam, N. Govindarajan sits at a worn desk listening to complaints of Vanniar men and women. Most need help in dealing with authority or financial assistance. Many want to find a way to educate their children or get them jobs.
Dr. Ramadoss, who is 52 years old, said that in the 1960's, when Tamil Nadu's affirmative-action program for the lowest of the state's 570 castes was introduced, 105 groups were listed as disadvantaged. Fifty percent of places in educational institutions and jobs in government were set aside for them.
Eighteen percent was reserved for outcastes, called harijans by Mohandas K. Gandhi.

The remaining 32 percent was open to competition among the higher castes and anyone from the lower groups wanting to apply on merit.

Rise in Disadvantaged Castes

In 1967, when a forerunner of the Dravidian nationalist party now in power was the government of the state, Dr. Ramadoss said, the number of castes described as disadvantaged rose to 202, an addition of 97 castes.
But the 202 shared the same 50 percent of educational and employment opportunities. Worse, the new castes added to the list were able to take a lion's share of the reserve places because they had come from communities with more advantages. The Vanniars, Dr. Ramadoss said, were pushed back further.
''This Vanniar community has been the most backward educationally, socially and economically for the last 41 years since independence,'' he said. ''The literacy rate of our people is only 20 percent - that state average is 35.'' ''In higher education, in professional courses - medical, engineering, agrcultural science, law -we get only 1 percent, sometimes 2 percent of the places. But our population is one third of the state.''
In 1987, under Dr. Ramadoss' leadership, the Vanniars - a caste largely confined to rural Tamil Nadu - began their acts of civil disobedience. In September of that year, they left the fields to blockade major highways for seven days. Nineteen Vanniars were killed in battles with the police - 11 shot and 8 clubbed to death, Dr. Ramadoss said - and 40,000 people were arrested.

Occasional Protest Actions

Since then, there have been sporadic demonstrations intended to keep the case in public view. Dr. Ramadoss said that to speed up the caste's development, the Vanniar Organization is asking for 20 percent of the places reserved in schools and jobs for the backward castes in Tamil Nadu and 2 percent at the national level, proportions closer to the Vanniars' percentage of the population.
''We have conducted more than 10,000 meetings, had 25 district conferences and many agitations,'' he said. ''If our demands are not met, there will be more.''

Saturday, June 23, 2012

வன்னியர்கள் யார் ?

வன்னியர்கள் யார் ?



ஒரே சமூகத்தில் ஒற்றுமை இல்லாமையால் அழிந்த தென்னார்க்காடு மாவட்ட வன்னியர் பாளையம் : உருப்படியம்மன் கதை


நன்றி திரு சுவாமி அவர்களுக்கு :

தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியர் பாளையங்கள் பல இருந்தன.சக வன்னிய பாளையக்காரர் இருவர் செய்த தீங்கினால் அழிந்த பாளையைம்தான் "தென்குத்து".


"வெற்றிக்களித்த வீரமிண்டார்" எனும் பட்டம் பெற்ற அப்பாளையக்காரர் மரபு எங்கோ ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் முடங்கிக் கிடக்கிறது. படிப்பவரை கண் கலங்க வைக்கும் சோக வரலாறு கொண்டதுதான் "தென்குத்து".

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவ்வினத்தைச் சார்ந்த மக்களை அழிக்க வேண்டியதில்லை.மாறாக அவர்களை சுற்றியுள்ள வரலாற்றுத் தடயங்களை அழித்தாலே போதும்.அவ்வினம் முகவரியற்றுப் போகும்.
எனவே தான் விலை மதிப்பற்றவையாக விளங்கும் வரலாற்றுத் தடயங்களை பாதுகாக்க வேண்டும்.என்ற உறுதி மொழியை ஒவ்வொரு தமிழனும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம்.

சுமார் 4500 ஆண்டுகால வரலாற்றுப் பாராம்பரியத்தையும் ,33000 சங்கப் பாடல்களையும் 2900 கல்வெட்டுக்களில் இனப்பதிவு பெற்றும் பண்டைய காலத்தில் எகிப்து வரை சென்று வர்த்தக பிணைப்பை ஏற்ப்படுத்தியதோடு அல்லாமல் 2300 ஆண்டுகால மொழியியல் வரலாற்றினையும் கொண்ட பெருமைக்குரிய நம் இனம் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு விதமான ஒடுக்கு முறைகளுக்கு ஆட்பட்டாலும் நம்மிடையே அவ்விப்பொழுது ஒரு குடிதாங்கித் தலைவன் தோன்றி தமிழனின் இழந்த பண்பாட்டியல் கூறுகளை மீட்டெடுக்கும் பணியை செய்து வருகிறார்கள்.

இத்தன்மையியல் கூறுகள் ஒரு தலைவனிடத்தில் மட்டும் இருந்தால் போதாது.அது அவனைச் சார்ந்த சமுகத்திடமும் இருத்தல் வேண்டும்.என்ற அடிப்படையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை கடலூர் மாவட்டத்தில் மறையும் நிலையில் உள்ள கிராமப்புற சிறு தெய்வங்களை பற்றிய அரிய தகவல்களை தொகுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் இக்குழுவினர் சமீபத்தில் இம்மாவட்டத்தில் உள்ள சந்தைவெளிப் பேட்டை என்ற ஊரின் கிராமப்புற தெய்வமான உருப்புடியம்மன் பற்றிய பல அரிய வரலாற்றுத் தடயங்களைத் தொகுத்துள்ளனர்.


சந்தைவெளிப்பேட்டை:

கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.குறிப்பாக புதிய வீராணம் நீரேற்றும் நிலையத்திற்கு தென்புறத்தில் சந்தைவெளிப்பேட்டை அமைந்துள்ளது.

இவ்வூரைப் பார்ப்பதற்கு குக்கிராமமாக இன்று தோன்றினாலும் சுமார் 2300 ஆண்டுகால வரலாற்றினை தன்னத்தே கொண்டுள்ளது. குறிப்பாக இவ்வூரில் இரும்புக்கால பண்பாட்டின் எச்சங்களும் பிற்கால சோழர் காலத்தின் கலைப்படைப்புகளும் நாயக்கர் காலத்திய வரலாற்றுத் தடயங்களையும் தன்னுள் தாங்கியுள்ளது.

இவ்வளவு சிறப்புமிக்க சந்தைவெளிப்பேட்டையின் காவல் தெய்வமாக விளங்கும் உருப்புடி அம்மன் வழிபாடு இப்பகுதி மக்களிடையே ஐக்கியப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது.

உருப்புடி அம்மன் கோவில்:

சந்தைவெளிப்பேடை கிராமத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெரிய வாய்க்காலின் வடக்கு கரையில் மரங்கள் மற்றும் புதர்கள் நிரம்பிய பகுதியில் உருப்புடி அம்மன் கோவிம் அமைந்துள்ளது.இன்று இப்பகுதியின் காவல் தெய்வமாகவும் இப்பகுதி மக்களின் குடும்பதெய்வமாகவும் விளங்குகிறாள்.மேலும் இவ்வம்மன் தெய்வமாக்கப்பட்ட பின்னனியில் கூறப்படுகின்ற கதையில் ஒர் அற்புதமான வரலாற்றுப் பின்னனியுள்ளது.


தென்குத்துப்பாளையம்:


பொதுவாக பாளையக்காரர்கள் முறையானது தமிழகத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக திகழ்ந்த விசுவநாத நாயக்கரின் அமைச்சரான அரிய நாத முதலியாரால் அறிமுகப்படுத்தபட்டதாகும்

உருப்புடி அம்மனின் முன்னோரான வெற்றி களித்த வீரமுண்டனர் பரம்பரையினரே சோழர் காலம் முதல் இப்பகுதியின் தனிப்பெரும் நிலமானிய தலைவர்களாக விளங்கி வந்தனர்.

கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சந்தைவெளிப்பேட்டை பகுதி நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.இப்பகுதி வடக்குத்துப் பாளையம் தெக்குத்துப்பாளையம் என மூன்று பாளையங்களாக பிரிக்கப்பட்டன.தென்குத்து பாளையம் வீரமுண்டனாரின் வாரிசிடம் ஒப்படைக்கப்பட்டது.

கி.பி 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் அட்சி முடிவிற்கு வந்தது.அதன் பிறகு இப்பகுதிகள் அனைத்தும் ஆர்காட் நவாப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

வன்னியரால் அழிந்த வன்னியர் பாளையம்(con)
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வடக்குத்து மற்றும் கீழுர் பாளையக்காரர்கள் தங்களது வரிவசூலை நேரடியாக ஆர்காட் நவாப்பிடம் வழங்கினார்.இதன் மூலம் நவாப்பின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கினார்.இதனால் இவ்விரு பாளையக்காரர்களும் சேர்ந்து தென்குத்துபாளையக்காரரான வீரமுன்லனாரின் வாரிசுகளை மதிக்காமல் அவ்வப்போது தவறான செய்திகளை நவாப்பிடம் கூறிவந்தனர்.

இதனால் ஆத்திரம் முற்ற ஆர்காட் நவாப் தென்குத்துப்பாளைக்காரரை வரி என்கிற பெயரில் தொல்லை கொடுக்கலானார்.மேலும் பாலைத்தின் உரிமைகளை பறிக்க போவதாகவும் கூறினார்.இதனால் அத்திரமுற்ற வீரமுண்டனாரின் வாரிசுகள் அர்காட் கொடுத்து வந்த வரியினை நிறுத்தி வந்தனர்.

இதனால் ஆர்காட் நவாப் வடக்குத்து கீழுர் பாளையக்காரர்களின் ஆலோசனைப்படி படையை அனுப்பி தென்குத்துபாளையத்தின் உரிமையைப் பறிக்கும் நோக்கில் தலைமையை கைது செய்து வரும் படி அனுப்பினான்.நவாப்பின் படை வீரர்கள் தென்குத்து பாளைய தலைவனை சந்தித்து தமது மன்னன் கூறிய செய்திகளைக் கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற பாளையத் தலைவன் நாளை போரில் சந்திப்பதாக கூறினான். மறுநாள் காலை இருந்த சொற்ப்பவீரர்களைக் கொண்டு நவாபி வீரர்களைத் தாக்க முற்பட்டார்.

இதற்கிடையே கீழுர் வடக்குத்து பாளையக்காரர்கள் நவாப்புடன் சேர்ந்து தென்குத்து பாளையத் தலைவரை எதிர்த்தனர்

அரண்மனை முழுவதும் சூறையாடிய நவாப்பின் படைவீரர்களுக்கு அஞ்சித் தென்குத்துப் பாளையத்தலைவனின் பெண்டிர் ஒடி தப்பினர்.இவர்களை விரட்டிக் கொன்றனர் நவாபின் வீரர்கள்.

தென்குத்துப் பாளையத் தலைவனின் மகள் நிறைமாத கற்பினி இவள் தமது தலைப்பிரசவத்திற்காகத் தந்தை வீட்டிற்கு வந்திருந்தாள்.இவளையும் விட்டு வைக்கவில்லை எதிரிப்படையினர்.தமது உயிர் போனாலும் பரவாயில்லை மக்களின் உயிர் காப்பாற்ற பட வேண்டும் என்பதற்காக நவாபின் மேலாண்மையை ஏற்று வீரர்களிடம் சரன் அடைவதே மேல் என்று தம் தந்தையிடம் கூறிப் போரை எப்பிடியாவது நிறுத்தி விட வேண்டும் எனக் கருதி தந்தையை தேடிப் போர்க்களம் புறபட்டாள்

அங்கே அவளை சுற்றி வளைத்த நவாபின் வீரர்கள் அவளை கொன்றனர்.இதனை அறிந்து தென்குத்துப்பாளைய தலைவன் மகளே இறந்த பிறகு பாளையம் எதற்கு எனக்கூறி தனது பாளையத்தைப் பிரித்து வடகுத்து,தென்குத்து மக்களுக்கு ஆளுக்குக்கால் காணி வீதம் கொடுத்து விட்டு அப்பகுதியை விட்டு குடிபெயர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்கூறிய செய்திகளை எங்களுக்கு நேர்க்காணலின் பொழுது கூறிய வெற்றிக் களித்த வீரமுண்டனாரின் தற்போதைய வாரிசான செந்தாமரைக்கண்ணராயர் இதனைப் பாடலாகக் கூறுகிறார்.

தம் இனம் காக்க முற்பட்ட தம் மகள் கொடுரமாக கொல்லப்பட்டமையால் அவளை இன்று வரை அவ்வாரிசுகள் உருப்புடியம்மன் என்ற பெயரில் தம் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.

இவ்வாறு தென்குத்து பாளையத்தலைவனின் மகள் கொடுரமாகக் கொல்லப்பட்ட அவ்விடத்தை இன்றும் இவ்வூர் மக்கள் கருவருத்தான் கரம்பு என்று அழைக்கின்றனர்.பொதுவாக தமிழர்கள் இடத்தே ஒரு பாரம்பரியம் உண்டு.ஒரு பெண்னைக் கொன்றால் அப்பாவம் ஏழேழு தலைமுறையை தாக்கும் என்பார்கள்

அதனால்தான் என்னவோ அவள் ரத்தம் பட்ட இடம் இன்று வரை கரம்பாகவே காட்சி அளிக்கிறது.சாபம் மனிதர்களுக்கும் மட்டும் அல்ல மண்ணுக்கும் உண்டு போலும்.

கோட்டைமேடு:

சந்தவெளிப்பேட்டையில் இருந்து பெரிய வாய்க்காலுக்கு செல்லும் வழியில் கோட்டை மேடு என்ற பகுதி உள்ளது.இன்று சாலை அமைக்கப்பட்டுள்ளது.எஞ்சிபகுதியில் கள ஆய்வு செய்த பொழுது சாலை அமைக்க மண் எடுக்க பட்ட பள்ளத்தில் கூரைக்காக பயன்படுத்தபட்ட ஒடுகள் மற்றும் மண்ட்பாண்ட ஒடுகள் ஏராளமாக காணப்பட்டன.மேலும் 216 செ.மீ அளவுள்ள செங்கற்கள் உடன் கூடி கட்டடப்பகுதி ஒன்று கண்டப்பட்டது

இவற்றை அய்வு செய்த பொழுது அக்கட்ட பகுதி கி.பி.11-12-ஆம் நூற்றாண்டை சார்ந்தவையாகும்.மேலும் இங்கு சேகரிக்கப்பட்ட கூரை ஒடுகளின் அமைப்பு கங்கைக் கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டுப்பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்துள்ள கூரை ஒடுகளின் அமைப்பை ஒத்துள்ளது.எனவே இங்கு கிடைத்துள்ள கலைப்பொருட்களும் ஒடுகளும் சோழர்க்காலத்தை சார்ந்தவையாகும்.இப்பகுதியில் இருந்த அரண்மனை வெற்றி களித்த வீரமுண்டனார் உடையதாகவும் இருக்கலாம்.

உருப்புடியம்மன் சிலை:

பெரியவாய்க்காலின் வடகரையில் அம்மன் கோவில் சமீபத்திலிருக்கும் அம்மன் சிலை 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

செவ்வகவடிவத்தினால் ஆன எளிய பீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்த நிலையிலும் தலைமுடி சவாளகேச அமைப்பில் பரந்து காட்டப்பட்ட நிலையிலும் காதில் பத்ரகுண்டலம் கழுத்தில் எளிய ஆரம்,சரப்பளி மற்றும் தோள்வலை காலில் பாதசரம் மெல்லிய முப்பிரி நூல் போன்றவைகளும் கிழாடை மெல்லிய மடிப்புகள் உடனும் மேலிரு கரங்களின் வலது கரத்தில் கபாலமும் கணப்படுகிறது.

மேலும் சிலையில் மார்புக் கச்சை இல்லை.இச்சிலையின் உடல் அமைப்பில் பிற்கால சோழர் பாணியை போன்று காணப்பட்டாலும் சிற்பத்தின் அணிகலன் ,ஆடை வடவமைப்பு ,முகம் ,கை,கால்,கூரியநாசி போன்ற அமைப்புகளின்கி.பி-17-ஆம் நூற்றாண்டின் கலைப் பாணியின் தாக்கமே அதிகம் காணப்படுகிறது.

இதன் மூலம் உருப்புடியம்மன் வழிபாடு கி.பி 17-ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கி இருக்கலாம்.என்பதை அறிய முடிகிறது.


மேலும் உருப்புடி அம்மன் தெய்வமானதற்கு பின்னனியில் கூறப்படுகின்ற வரலாறு நிகழ்வுகளை தனியாகப் பிரித்துப் பார்த்தால் ஏதோ புராணக்கதை போல் தோன்றும்.

மாறாக சந்தைவெளிப்பேட்டை கோட்டை மேடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்,பானை ஒடுகள் கூரைக்காக பயன்படுத்தப்பட்ட ஒடுகள்,கல்வெட்டு சண்டிகேஸ்வரர் சிலை சிவலிங்கங்கள் போன்றவைகளை வைத்துப் பார்க்கும் பொழுது சோழர் காலத்தில் இப்பகுதியின் தலைவனாக வெற்றி களித்த வீரமூண்டனார் இருந்தது உண்மையாகவே தோன்றுகிறது.

மேலும் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் வடக்குத்து பாளையக்காரரான சமுட்டியார் ஒருவர் இருந்தார்.என்பதை சேலம் செப்பேட்டின் மூலம் அறிய முடிகிறது.எனவே தென்குத்துப் பாளையம் இருந்ததாக கூறப்படுவது கர்ணப்பரம்பரை கதையாக நமக்கு தோன்றினாலும் வடக்குத்துப் பாளையம் இருந்தது ஆணித்தரமான உண்மையே.


ஆர்காட் நவாப் தென்குத்து பாளையத்தை கைப்பற்ற நினைத்து தம் வீரர்களை அனுப்பியது இருவருக்கும் இடையே சண்டை நடைபெற்றது எல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற கேள்விக்கு விடைகளாக விளக்குபவையாதென்றால் இப்பகுதியில் காணபடுகின்ற சிலைகள் சிவலிங்கங்கள் அனைத்தும் சிதைக்க பட்ட நிலையிலே காணப்படுகின்றன.

மேலும் இவ்வூருக்கு அருகாமையில் உள்ள பெரியக் கோவில் குப்பம் என்ற ஊரில் பெயரில் தான் கோவில் சிலைகள் மற்றும் கோவில் இருந்ததற்கான தடயங்கள் மட்டுமே காணப்படுகின்றன.இவைகளை வைத்து பார்க்கும் பொழுது சந்தைவெளிப்பேட்டை,கோவில் குப்பம் ஊர்களில் இருந்த சோழர்கால கோவில்கள் கண்டிப்பாக இப்பகுதியில் நடைபெற்ற போரினால் அழிக்கப்பட்டிருக்கலாம்.மேலும் வெங்கடாம்பேட்டையில் நவாப் கட்டியதாகக் கூறப்படும்மசூதி ஒன்று இன்றும் உள்ளது.


எனவே சந்தைவெளிப்பேட்டையில் வெற்றிகளித்த வீரமுண்டனார் அவரது வாரிசான உருப்புடியம்மன் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு கதைகளாக இப்பகுதியில் உலாவினாலும் அவர்கள் வாழ்ந்தது உண்மையே என வரலாற்று சான்றுகள் நிரூபித்துள்ளன

நன்றி: தமிழோசை

Thursday, June 21, 2012

வன்னிய குல சோழர் பரம்பரையினர் பங்கு பெற்ற அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி.

வன்னிய குல சோழர் பரம்பரையினர் பங்கு பெற்ற அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி.

 

Chola Descendants - Jaya TV Achamillai Achamillai Program 

 

 

 

Sunday, June 10, 2012

தென் தமிழகத்தில் உள்ள வன்னியர் திருவிழா - முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவ விழா

தென் தமிழகத்தில் உள்ள வன்னியர் திருவிழா - முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவ விழா


பரமக்குடி, மார்ச் 15: பரமக்குடி அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழா 4-ம் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வன்னியகுல ஷத்திரிய மகாசபையினரால் வண்டி மாகாளி உற்சவ விழா நடைபெற்றது.

பரமக்குடி ஆயிர வைசியர்களுக்கு பாத்தியமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழா, மார்ச் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொ டங்கியது.செவ்வாய்க்கிழமை காலையில் ரிஷப வாகனத்தில் வன்னியர்குல சேர்வைக்காரர்கள் மண்டகப்படியில் எழுந்தருளினார்.

 இதையொட்டி மாலை 4.30 மணிக்கு வன்னியகுல ஷத்திரியர்கள் வண்டி மாகாளி வேஷமிட்டும், புலி வேஷமிட்டும் ஊர்வலம் புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் ஆலயம் சென்றடைந்தனர்.மார்ச்-20-ம் தேதி இரவு 7.45 மணிக்கு விசேஷ மின்சார தீப அலங்காரத்துடன் அம்பாள் தேரோட்டம் நடைபெறும்.





Source http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Madurai&artid=391200&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=SocialTwist%20Tell-a-Friend

Sunday, June 3, 2012

பண்டார வன்னியர் சின்னங்களை அழிக்க முயலும் அரசு



வீரம் செறிந்த வன்னியில் தேடல்கள்..-வன்னியின் வரலாறு

வெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர். 

வன்னி என்றதும் எம் இயதக் கதவுகளைத் தட்டித் திறப்பது வீரம். ஒல்லாந்தர் கோட்டைகளை வென்று, வாட்கொடி ஏற்றி, எந்த ஏகாதிபத்திற்கும் அடிபணியாது பீரங்கிகளுக்கெதிராக. வாட்களை ஏந்திப் போராடி வீர மரணமடைந்த மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம், அவன் தன் மறவைக் கேட்டு நஞ்சை உண்டு மடிந்த காதலி குருவிச்சி நாச்சியின் வீரம் அறுவர் சேர்ந்து ஆண்ட வன்னி வள நாட்டை அவர்கள் அறுவரும் தமிழ் நாட்டிற்கு தலயாத்திரை சென்ற போது,
கைப்பற்றப் போர்தொடுத்த அரசனிற்கு எதிராக அவ் அறுவர் துணவியரும் பணிப்பெண் ஒருவருமாக எழுவரும் ஆண்வேடமிட்டு போர்கோலம் 10ண்டு களம் சென்று சமராடிய வீரம் என்பது போன்ற வரலாறுகளைக் கொண்டிருக்கும் வன்னி மண் தன்னகத்தே பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகளைக் சொல்லக்கூடிய பல பொக்கிஷங்களையும் கொண்டுள்ளது என்பது யாவருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.