Saturday, June 23, 2012

ஒரே சமூகத்தில் ஒற்றுமை இல்லாமையால் அழிந்த தென்னார்க்காடு மாவட்ட வன்னியர் பாளையம் : உருப்படியம்மன் கதை


நன்றி திரு சுவாமி அவர்களுக்கு :

தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியர் பாளையங்கள் பல இருந்தன.சக வன்னிய பாளையக்காரர் இருவர் செய்த தீங்கினால் அழிந்த பாளையைம்தான் "தென்குத்து".


"வெற்றிக்களித்த வீரமிண்டார்" எனும் பட்டம் பெற்ற அப்பாளையக்காரர் மரபு எங்கோ ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் முடங்கிக் கிடக்கிறது. படிப்பவரை கண் கலங்க வைக்கும் சோக வரலாறு கொண்டதுதான் "தென்குத்து".

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவ்வினத்தைச் சார்ந்த மக்களை அழிக்க வேண்டியதில்லை.மாறாக அவர்களை சுற்றியுள்ள வரலாற்றுத் தடயங்களை அழித்தாலே போதும்.அவ்வினம் முகவரியற்றுப் போகும்.
எனவே தான் விலை மதிப்பற்றவையாக விளங்கும் வரலாற்றுத் தடயங்களை பாதுகாக்க வேண்டும்.என்ற உறுதி மொழியை ஒவ்வொரு தமிழனும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம்.

சுமார் 4500 ஆண்டுகால வரலாற்றுப் பாராம்பரியத்தையும் ,33000 சங்கப் பாடல்களையும் 2900 கல்வெட்டுக்களில் இனப்பதிவு பெற்றும் பண்டைய காலத்தில் எகிப்து வரை சென்று வர்த்தக பிணைப்பை ஏற்ப்படுத்தியதோடு அல்லாமல் 2300 ஆண்டுகால மொழியியல் வரலாற்றினையும் கொண்ட பெருமைக்குரிய நம் இனம் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு விதமான ஒடுக்கு முறைகளுக்கு ஆட்பட்டாலும் நம்மிடையே அவ்விப்பொழுது ஒரு குடிதாங்கித் தலைவன் தோன்றி தமிழனின் இழந்த பண்பாட்டியல் கூறுகளை மீட்டெடுக்கும் பணியை செய்து வருகிறார்கள்.

இத்தன்மையியல் கூறுகள் ஒரு தலைவனிடத்தில் மட்டும் இருந்தால் போதாது.அது அவனைச் சார்ந்த சமுகத்திடமும் இருத்தல் வேண்டும்.என்ற அடிப்படையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை கடலூர் மாவட்டத்தில் மறையும் நிலையில் உள்ள கிராமப்புற சிறு தெய்வங்களை பற்றிய அரிய தகவல்களை தொகுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் இக்குழுவினர் சமீபத்தில் இம்மாவட்டத்தில் உள்ள சந்தைவெளிப் பேட்டை என்ற ஊரின் கிராமப்புற தெய்வமான உருப்புடியம்மன் பற்றிய பல அரிய வரலாற்றுத் தடயங்களைத் தொகுத்துள்ளனர்.


சந்தைவெளிப்பேட்டை:

கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.குறிப்பாக புதிய வீராணம் நீரேற்றும் நிலையத்திற்கு தென்புறத்தில் சந்தைவெளிப்பேட்டை அமைந்துள்ளது.

இவ்வூரைப் பார்ப்பதற்கு குக்கிராமமாக இன்று தோன்றினாலும் சுமார் 2300 ஆண்டுகால வரலாற்றினை தன்னத்தே கொண்டுள்ளது. குறிப்பாக இவ்வூரில் இரும்புக்கால பண்பாட்டின் எச்சங்களும் பிற்கால சோழர் காலத்தின் கலைப்படைப்புகளும் நாயக்கர் காலத்திய வரலாற்றுத் தடயங்களையும் தன்னுள் தாங்கியுள்ளது.

இவ்வளவு சிறப்புமிக்க சந்தைவெளிப்பேட்டையின் காவல் தெய்வமாக விளங்கும் உருப்புடி அம்மன் வழிபாடு இப்பகுதி மக்களிடையே ஐக்கியப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது.

உருப்புடி அம்மன் கோவில்:

சந்தைவெளிப்பேடை கிராமத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெரிய வாய்க்காலின் வடக்கு கரையில் மரங்கள் மற்றும் புதர்கள் நிரம்பிய பகுதியில் உருப்புடி அம்மன் கோவிம் அமைந்துள்ளது.இன்று இப்பகுதியின் காவல் தெய்வமாகவும் இப்பகுதி மக்களின் குடும்பதெய்வமாகவும் விளங்குகிறாள்.மேலும் இவ்வம்மன் தெய்வமாக்கப்பட்ட பின்னனியில் கூறப்படுகின்ற கதையில் ஒர் அற்புதமான வரலாற்றுப் பின்னனியுள்ளது.


தென்குத்துப்பாளையம்:


பொதுவாக பாளையக்காரர்கள் முறையானது தமிழகத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக திகழ்ந்த விசுவநாத நாயக்கரின் அமைச்சரான அரிய நாத முதலியாரால் அறிமுகப்படுத்தபட்டதாகும்

உருப்புடி அம்மனின் முன்னோரான வெற்றி களித்த வீரமுண்டனர் பரம்பரையினரே சோழர் காலம் முதல் இப்பகுதியின் தனிப்பெரும் நிலமானிய தலைவர்களாக விளங்கி வந்தனர்.

கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சந்தைவெளிப்பேட்டை பகுதி நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.இப்பகுதி வடக்குத்துப் பாளையம் தெக்குத்துப்பாளையம் என மூன்று பாளையங்களாக பிரிக்கப்பட்டன.தென்குத்து பாளையம் வீரமுண்டனாரின் வாரிசிடம் ஒப்படைக்கப்பட்டது.

கி.பி 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் அட்சி முடிவிற்கு வந்தது.அதன் பிறகு இப்பகுதிகள் அனைத்தும் ஆர்காட் நவாப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

வன்னியரால் அழிந்த வன்னியர் பாளையம்(con)
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வடக்குத்து மற்றும் கீழுர் பாளையக்காரர்கள் தங்களது வரிவசூலை நேரடியாக ஆர்காட் நவாப்பிடம் வழங்கினார்.இதன் மூலம் நவாப்பின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கினார்.இதனால் இவ்விரு பாளையக்காரர்களும் சேர்ந்து தென்குத்துபாளையக்காரரான வீரமுன்லனாரின் வாரிசுகளை மதிக்காமல் அவ்வப்போது தவறான செய்திகளை நவாப்பிடம் கூறிவந்தனர்.

இதனால் ஆத்திரம் முற்ற ஆர்காட் நவாப் தென்குத்துப்பாளைக்காரரை வரி என்கிற பெயரில் தொல்லை கொடுக்கலானார்.மேலும் பாலைத்தின் உரிமைகளை பறிக்க போவதாகவும் கூறினார்.இதனால் அத்திரமுற்ற வீரமுண்டனாரின் வாரிசுகள் அர்காட் கொடுத்து வந்த வரியினை நிறுத்தி வந்தனர்.

இதனால் ஆர்காட் நவாப் வடக்குத்து கீழுர் பாளையக்காரர்களின் ஆலோசனைப்படி படையை அனுப்பி தென்குத்துபாளையத்தின் உரிமையைப் பறிக்கும் நோக்கில் தலைமையை கைது செய்து வரும் படி அனுப்பினான்.நவாப்பின் படை வீரர்கள் தென்குத்து பாளைய தலைவனை சந்தித்து தமது மன்னன் கூறிய செய்திகளைக் கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற பாளையத் தலைவன் நாளை போரில் சந்திப்பதாக கூறினான். மறுநாள் காலை இருந்த சொற்ப்பவீரர்களைக் கொண்டு நவாபி வீரர்களைத் தாக்க முற்பட்டார்.

இதற்கிடையே கீழுர் வடக்குத்து பாளையக்காரர்கள் நவாப்புடன் சேர்ந்து தென்குத்து பாளையத் தலைவரை எதிர்த்தனர்

அரண்மனை முழுவதும் சூறையாடிய நவாப்பின் படைவீரர்களுக்கு அஞ்சித் தென்குத்துப் பாளையத்தலைவனின் பெண்டிர் ஒடி தப்பினர்.இவர்களை விரட்டிக் கொன்றனர் நவாபின் வீரர்கள்.

தென்குத்துப் பாளையத் தலைவனின் மகள் நிறைமாத கற்பினி இவள் தமது தலைப்பிரசவத்திற்காகத் தந்தை வீட்டிற்கு வந்திருந்தாள்.இவளையும் விட்டு வைக்கவில்லை எதிரிப்படையினர்.தமது உயிர் போனாலும் பரவாயில்லை மக்களின் உயிர் காப்பாற்ற பட வேண்டும் என்பதற்காக நவாபின் மேலாண்மையை ஏற்று வீரர்களிடம் சரன் அடைவதே மேல் என்று தம் தந்தையிடம் கூறிப் போரை எப்பிடியாவது நிறுத்தி விட வேண்டும் எனக் கருதி தந்தையை தேடிப் போர்க்களம் புறபட்டாள்

அங்கே அவளை சுற்றி வளைத்த நவாபின் வீரர்கள் அவளை கொன்றனர்.இதனை அறிந்து தென்குத்துப்பாளைய தலைவன் மகளே இறந்த பிறகு பாளையம் எதற்கு எனக்கூறி தனது பாளையத்தைப் பிரித்து வடகுத்து,தென்குத்து மக்களுக்கு ஆளுக்குக்கால் காணி வீதம் கொடுத்து விட்டு அப்பகுதியை விட்டு குடிபெயர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்கூறிய செய்திகளை எங்களுக்கு நேர்க்காணலின் பொழுது கூறிய வெற்றிக் களித்த வீரமுண்டனாரின் தற்போதைய வாரிசான செந்தாமரைக்கண்ணராயர் இதனைப் பாடலாகக் கூறுகிறார்.

தம் இனம் காக்க முற்பட்ட தம் மகள் கொடுரமாக கொல்லப்பட்டமையால் அவளை இன்று வரை அவ்வாரிசுகள் உருப்புடியம்மன் என்ற பெயரில் தம் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.

இவ்வாறு தென்குத்து பாளையத்தலைவனின் மகள் கொடுரமாகக் கொல்லப்பட்ட அவ்விடத்தை இன்றும் இவ்வூர் மக்கள் கருவருத்தான் கரம்பு என்று அழைக்கின்றனர்.பொதுவாக தமிழர்கள் இடத்தே ஒரு பாரம்பரியம் உண்டு.ஒரு பெண்னைக் கொன்றால் அப்பாவம் ஏழேழு தலைமுறையை தாக்கும் என்பார்கள்

அதனால்தான் என்னவோ அவள் ரத்தம் பட்ட இடம் இன்று வரை கரம்பாகவே காட்சி அளிக்கிறது.சாபம் மனிதர்களுக்கும் மட்டும் அல்ல மண்ணுக்கும் உண்டு போலும்.

கோட்டைமேடு:

சந்தவெளிப்பேட்டையில் இருந்து பெரிய வாய்க்காலுக்கு செல்லும் வழியில் கோட்டை மேடு என்ற பகுதி உள்ளது.இன்று சாலை அமைக்கப்பட்டுள்ளது.எஞ்சிபகுதியில் கள ஆய்வு செய்த பொழுது சாலை அமைக்க மண் எடுக்க பட்ட பள்ளத்தில் கூரைக்காக பயன்படுத்தபட்ட ஒடுகள் மற்றும் மண்ட்பாண்ட ஒடுகள் ஏராளமாக காணப்பட்டன.மேலும் 216 செ.மீ அளவுள்ள செங்கற்கள் உடன் கூடி கட்டடப்பகுதி ஒன்று கண்டப்பட்டது

இவற்றை அய்வு செய்த பொழுது அக்கட்ட பகுதி கி.பி.11-12-ஆம் நூற்றாண்டை சார்ந்தவையாகும்.மேலும் இங்கு சேகரிக்கப்பட்ட கூரை ஒடுகளின் அமைப்பு கங்கைக் கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டுப்பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்துள்ள கூரை ஒடுகளின் அமைப்பை ஒத்துள்ளது.எனவே இங்கு கிடைத்துள்ள கலைப்பொருட்களும் ஒடுகளும் சோழர்க்காலத்தை சார்ந்தவையாகும்.இப்பகுதியில் இருந்த அரண்மனை வெற்றி களித்த வீரமுண்டனார் உடையதாகவும் இருக்கலாம்.

உருப்புடியம்மன் சிலை:

பெரியவாய்க்காலின் வடகரையில் அம்மன் கோவில் சமீபத்திலிருக்கும் அம்மன் சிலை 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

செவ்வகவடிவத்தினால் ஆன எளிய பீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்த நிலையிலும் தலைமுடி சவாளகேச அமைப்பில் பரந்து காட்டப்பட்ட நிலையிலும் காதில் பத்ரகுண்டலம் கழுத்தில் எளிய ஆரம்,சரப்பளி மற்றும் தோள்வலை காலில் பாதசரம் மெல்லிய முப்பிரி நூல் போன்றவைகளும் கிழாடை மெல்லிய மடிப்புகள் உடனும் மேலிரு கரங்களின் வலது கரத்தில் கபாலமும் கணப்படுகிறது.

மேலும் சிலையில் மார்புக் கச்சை இல்லை.இச்சிலையின் உடல் அமைப்பில் பிற்கால சோழர் பாணியை போன்று காணப்பட்டாலும் சிற்பத்தின் அணிகலன் ,ஆடை வடவமைப்பு ,முகம் ,கை,கால்,கூரியநாசி போன்ற அமைப்புகளின்கி.பி-17-ஆம் நூற்றாண்டின் கலைப் பாணியின் தாக்கமே அதிகம் காணப்படுகிறது.

இதன் மூலம் உருப்புடியம்மன் வழிபாடு கி.பி 17-ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கி இருக்கலாம்.என்பதை அறிய முடிகிறது.


மேலும் உருப்புடி அம்மன் தெய்வமானதற்கு பின்னனியில் கூறப்படுகின்ற வரலாறு நிகழ்வுகளை தனியாகப் பிரித்துப் பார்த்தால் ஏதோ புராணக்கதை போல் தோன்றும்.

மாறாக சந்தைவெளிப்பேட்டை கோட்டை மேடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்,பானை ஒடுகள் கூரைக்காக பயன்படுத்தப்பட்ட ஒடுகள்,கல்வெட்டு சண்டிகேஸ்வரர் சிலை சிவலிங்கங்கள் போன்றவைகளை வைத்துப் பார்க்கும் பொழுது சோழர் காலத்தில் இப்பகுதியின் தலைவனாக வெற்றி களித்த வீரமூண்டனார் இருந்தது உண்மையாகவே தோன்றுகிறது.

மேலும் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் வடக்குத்து பாளையக்காரரான சமுட்டியார் ஒருவர் இருந்தார்.என்பதை சேலம் செப்பேட்டின் மூலம் அறிய முடிகிறது.எனவே தென்குத்துப் பாளையம் இருந்ததாக கூறப்படுவது கர்ணப்பரம்பரை கதையாக நமக்கு தோன்றினாலும் வடக்குத்துப் பாளையம் இருந்தது ஆணித்தரமான உண்மையே.


ஆர்காட் நவாப் தென்குத்து பாளையத்தை கைப்பற்ற நினைத்து தம் வீரர்களை அனுப்பியது இருவருக்கும் இடையே சண்டை நடைபெற்றது எல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற கேள்விக்கு விடைகளாக விளக்குபவையாதென்றால் இப்பகுதியில் காணபடுகின்ற சிலைகள் சிவலிங்கங்கள் அனைத்தும் சிதைக்க பட்ட நிலையிலே காணப்படுகின்றன.

மேலும் இவ்வூருக்கு அருகாமையில் உள்ள பெரியக் கோவில் குப்பம் என்ற ஊரில் பெயரில் தான் கோவில் சிலைகள் மற்றும் கோவில் இருந்ததற்கான தடயங்கள் மட்டுமே காணப்படுகின்றன.இவைகளை வைத்து பார்க்கும் பொழுது சந்தைவெளிப்பேட்டை,கோவில் குப்பம் ஊர்களில் இருந்த சோழர்கால கோவில்கள் கண்டிப்பாக இப்பகுதியில் நடைபெற்ற போரினால் அழிக்கப்பட்டிருக்கலாம்.மேலும் வெங்கடாம்பேட்டையில் நவாப் கட்டியதாகக் கூறப்படும்மசூதி ஒன்று இன்றும் உள்ளது.


எனவே சந்தைவெளிப்பேட்டையில் வெற்றிகளித்த வீரமுண்டனார் அவரது வாரிசான உருப்புடியம்மன் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு கதைகளாக இப்பகுதியில் உலாவினாலும் அவர்கள் வாழ்ந்தது உண்மையே என வரலாற்று சான்றுகள் நிரூபித்துள்ளன

நன்றி: தமிழோசை