Tuesday, November 6, 2012

பாதி சிதம்பரத்தையே அடைத்து கொண்டிருக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் எப்படி வந்தது தெரியுமா ?



சிதம்பரத்தில் பாதி நிலம் பிச்சாவரம் மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் குடும்பத்திற்கு சொந்தமாக இருந்தது . செட்டியார் நடத்தும் அந்த அண்ணாமலை பல்கலைகழகம் நிலம் கூட இந்த சோழனார் குடும்பத்திடம் தான் இருந்தது .

இவரின் மூதாதையர் ஒரு திருமணத்திற்க்காக முகையூர் சுப்ரமணிய பிள்ளையிடம் அறுபதாயிரம் ரூபாய் கடன் வாங்கினார்கள் .அந்த பணத்தை திருப்பி தர இயலாத நிலைமை வந்ததால் நிலத்தை ஏலமிடும் நிலைமைக்கு வந்தார்கள் . அப்போது ராமநாதபுரம் கானாடுகாத்தானை சேர்ந்த அண்ணாமலை செட்டியார் அவர்கள் அந்த நிலத்தை ஏலம் எடுத்தார் .அந்த நிலம்தான் இன்று அண்ணாமலை பல்கலைகழகம் .

---- நக்கீரன்

வன்னியர்களுக்கு நன்றியாக படையல் போடும் செங்குந்த முதலியார் சமூகத்தினர்

தமிழ்நாட்டில் இடங்கை வலங்கை தகராறு நடந்த சமயத்தில் பிராமணர், வன்னியர் தவிர மற்ற சமூகங்கள் அனைத்தும் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவரோடு ஒருவர் மோதி கொண்டனர். அப்போது சிதம்பரம் பகுதியில் வேளாளர் சமூகத்தினர் செங்குந்தர் சமூகத்தினரை மிக கடுமையாக தாக்கினர். அது வரை இடங்கை வலங்கை சண்டையில் பங்கேற்காத வன்னியர்கள், செங்குந்தர் சமூக மக்களை காக்க வேளாளர்களோடு சண்டையிட்டனர். 

அந்த சண்டையில் பல உயிர் சேதம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியை ஆட்சி செய்து வந்த தில்லை சோழர்களான பிச்சாவரம் ஜமீனுக்கு கொடுக்கப்பட்டு வந்த மானியத்தை ஆங்கிலேய அரசு நிறுத்தி கொண்டது. அது முதலே அந்த சோழர் குடும்பம் வறுமையில் விழுந்தது. இருபினும் அவர்களுக்குரிய உரிமைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.

வன்னியர்களின் இந்த தியாகத்திற்கு நன்றியாக இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழும் செங்குந்த முதலியார் சமூகத்தினர் சாமிக்கு படையல் போடும் போது வன்னியர்களுக்கும் ஒரு படையல் போட்டு தங்கள் நன்றியை தெரிவிகின்றனர் .

வன்னியர்கள் இடங்கை சாதி தலைவனாக அறியப்பட்டனர் . இதனால் அவர்கள்  இடங்கைப் பெரியோன், இடங்கையாதிபர் என்று அழைக்க பட்டனர்

குறிப்பு : இடங்கை வலங்கை தகராறு புத்தகம்.

நன்றி : கார்த்திக் சம்புவராயர் 

Monday, November 5, 2012

மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் , சோழ அரசராக தில்லை நடராஜர் கோவிலில் முடிசூட்ட பெற்ற 34-ஆம் ஆட்சி ஆண்டில் (2012) அவரை வாழ்த்திய செய்தி மாலைமலரில் (05-11-2012)


மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் , சோழ அரசராக தில்லை நடராஜர் கோவிலில் முடிசூட்ட பெற்ற 34-ஆம் ஆட்சி ஆண்டில் (2012) அவரை வாழ்த்திய செய்தி மாலைமலரில் (05-11-2012) .........................

 "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் "


=============



Sunday, November 4, 2012

களப ராஜராஜன் என்றுள்ள கல்வெட்டு சாளுக்கிய சோழனது . நேரடி சோழனது அல்ல




“ களப ராஜராஜன்”

“ கள்வன் ராஜராஜன்”

என மெய்க்கீர்த்தி கல்வெட்டு "இராண்டாம் இராசராச சோழனை" களபர்-கள்வன் எனவும் குறிப்பிடுவதால் , "முதலாம் ராஜ ராஜனும் " கள்ளர் சமூகமாக இருக்கலாம் என்று கள்ளர் சமூக நண்பர்கள் கூறுவதால் , அது மிகப்பெரும் பிழை என்று சொல்கிறேன் .

இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை “களப ராஜராஜன்” என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை”கள்வன் ராஜ ராஜன்” என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள “களப” என்ற வார்த்தை “களவ” என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல். ) என்பது கள்ளர் சமூகத்தார் வாதம் .

இது மட்டமான ஆதாரம் .

காரணம் , இந்த வார்த்தை உள்ள மெய்க்கீர்த்தி "இராண்டாம் இராசராச சோழனை" சொல்வது . அவன் முதலாம் ராஜ ராஜன் அல்ல .
அதோடு இந்த மெய்க்கீர்த்தி இரண்டாம் இராசராச சோழனால் வெளி இடப்பட்டது , இந்த இரண்டாம் ராஜா ராஜன் யார் தெரியுமா ?

இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவான்.இங்கு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்தே சாளுக்கிய மரபு கொண்டவர்கள் சோழர்கள் ... ஆகையினால் இவன்  சாளுக்கிய சோழன் ...

ஆகவே இது மட்டமான ஆதாரம் .

அதுமட்டுமில்லை களப என்பதற்கு பல பொருள் உண்டு .  களப என்றால் கலவை , யானை போன்ற பல பொருள் உண்டு .

எடுத்துக்காட்டு :

1. களப மாட வீதி - யானை செல்லும் வீதி என்றும் கூறலாம்.       

2. களப மாட வீதியும் - சுண்ணம் பூசப்பெற்ற, மாளிகைகளை உடைய       வீதியையும்

Refer:  http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=73&pno=7

3. களப வன முலைப் பொறை சுமந்து உருகி இறந்ததோ -சந்தனக்குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச்
சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ

Refer : http://www.tamilvu.org/slet/l3100/l3100pd2.jsp?bookid=63&pno=64

4. பரிமள களப சுகந்த -- நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின் வாசனை வீசும்

Refer : http://www.kaumaram.com/thiru_uni/tpun0078.html

இதுபோன்ற பல பொருள்  உண்டு .

ஆகவே இம்மன்னன் யானையை போன்ற பலம்  பொருந்திய மன்னன் என்று புகழ  “ களப ராஜராஜன்” என்று பாராட்ட பெற்றிருக்கலாம் .

 சாளுக்கிய மரபுடைய இந்த சோழனை "களப " என்பது என்று கூறுவது அவன் களம் கண்டவன் என்பதனாலோ, அல்லது யானையை போன்ற பலம்  பொருந்திய மன்னன் என்பதாலோ ,அல்லது சோழ மற்றும் சாளுக்கிய குலத்து கலப்பில் வந்த மன்னன் என்பதாலோ என்று பல பொருள்கள் இதில் அடங்கும் .அந்த கல்வெட்டின் முழு வாக்கியம் படித்தால்தான் அதன் முழு செய்தி நமக்கு கிடைக்கும் .

“ கள்வன் ராஜராஜன்” என்றாலும் இங்கே ஒரு குறிப்பிட்ட சாதியை சொல்ல இயலாது . கள்வன் என்பது திருடனை குறிப்பது . ஒருதன் நாட்டு மக்களை காக்கும் ஒரு  மன்னனை அப்படி கூற காரணம் , அவன் மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன் என்பதனால் கூட இருக்கலாம் .

அடுத்து முத்தரையர்களில் குறிப்பிடத்தக்கவன் பெரும்பிடுகு முத்தரையன்(கி.பி. 655 – 680) என்பவன் ஆவான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஸ்ரீ கள்வர கள்வன் என்பதாகும். இதனைச் செந்தலை மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே கள்வர கள்வர் எனப்படும் முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே எனலாம்

Refer: http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312112.htm

ஆக முத்தரையர் மன்னருக்கும் இந்த கள்வர் பட்டம் உண்டு . அதோடு முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே என்று சொல்வதாலும், இவர்கள் கன்னட நாட்டவர் என்பதாலும் , இதே போல இரண்டாம் ராஜ ராஜனும் சாளுக்கிய (கன்னடர் ) பகுதியில் இருந்து வந்தமையால் அதே கள்வர் என்னும் வார்த்தையை உபயோகித்திருக்கலாம் அல்லவா .........

அதோடு  சாளுக்கிய மரபுக்கும் கள்ளர் சாதிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

சாளுக்கிய மரபு கொண்ட முதலாம் குலோத்துங்க சோழனே பூணூல் அணிந்தவன் . இதை அப்போது எழுதிய களிங்கத்துபரணியும் உறுதிபடுத்துகிறது .

பேரனாகிய குலோத்துங்கனைக் கங்கைகொண்ட சோழன் தேவி, தன்
மலர்க்கையால் எடுத்து,

'அவனிபர்க்குப் புரந்தரனாம் அடையாளம்
அவயவத்தின் அடைவே நோக்கி
இவன் எமக்கு மகனாகி இரவிகுலம்
பாரிக்கத் தகுவன் என்றே'


கூறினாளாக ஆசி்ரியர் கூறுகின்றார்.

இவன் பூணூல் அணிந்தானாகவும், வடமொழி மறை பயின்றானாகவும்,
ஆசிரியர் கூறுகின்றார். இதனால் அக்காலத்திய தஞ்சைச்சோழர் தம்மை
வடநாட்டுச் சத்தி்யரின் கால்வழியில் வந்தாராகவே கொண்டு, வடநாட்டுச்
சத்திரியருக்குரிய ஒழுக்கத்தைக் கைக்கொண்டும் வந்தாராதல் தெரிகின்றது.
ஆசிரியர் சயங்கொண்டாரும் சோழர் மரபு வரலாறு கூறுமிடத்துச்
சோழர்களின் முன்னோராக வடநாட்டுச் சத்திரியர்
 பலரைக் கூறுவதும் 
ஈண்டு நோக்கத்தக்கது. 

இவரை அடுத்துச் சோழர் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த ஒட்டக்கூத்தரும் தாம் பாடிய மூவர் உலாவிலும், சோழ மரபு கூறுமிடத்தும் இங்ஙனமே சோழரின் முன்னோராக வடநாட்டுச்சத்திரியர் பலரைக் கூறுவதும் கருததக்கது. '...
----------------------- கலிங்கத்துப்பரணி

Reference: http://www.tamilvu.org/library/l5920/html/l5920p12.htm



கள்ளர்கள் பூணூலும் அணிவதில்லை .. ஆனால் இந்த வழக்கம் வன்னியரில் உண்டு .'

இந்த கீழை சாளுக்கிய மரபு கூட வன்னியருக்கும் உறவாக உள்ளது .. அதாவது வன்னியர் பிறப்பை பற்றி சொல்லும் நூல்களுள் அனைத்தும் அக்னியில் இருந்து பிறந்தவர் என்று கூற , கல்லாடம் மட்டும் பன்னிரண்டு பன்றிகளிலிருந்து வன்னியர் தோன்றினரெனக் கூறுகிறது .
அதாவது சாளுக்கியர் கீழ் குறுநில மன்னராக இருந்துள்ளனர் என்பது இதன் அர்த்தம் .அது மட்டுமல்லாது வன்னியர்களுக்கு சாளுக்கியர் என்ற பட்டமும் உண்டு .

அடுத்து தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் (மூன்று தொகுதிகள்) - (முனைவர் பா.சுப்பிரமணியன் 1989 பதிப்பாசிரியர்) (வெளியீடு : தஞ்சாவூர் பல்கலைக் கழகம்) என்ற பகுதியில் இடங்கை வலங்கை சாதியை பற்றி குறிப்பிடும் போது ,

வலங்கைச் சாதியினராக (1) ரெட்டிவடுகர் (2) கமல வடுகர் (3) துளுவ வடுகர் (4) துளுவச் செட்டி (5) வெள்ளாளச் செட்டி (6) குத்திக் கொல்லர் (7) நங்காரி வடுகர் (8) சேணயர் (9) சலுப்பன் (10) இடையர் (11) சாலியர் (12) கோமுட்டி (13) உப்பிலியன் (14) சாணான் (15) சுண்ணாம்புக்காரன் (16) மாறாயச் செட்டி (17) மேளகாரன் (18) வலையர் (19) தெலுங்க அம் பட்டன் (20) தமிழ் அம்பட்டன் (21) வண்ணான் (22) வாணியன் என இருபத்திரண்டு சாதியினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இடங்கைச் சாதியினராக (1) மேலசெட்டி (2) கைகோளர் (3) பள்ளி (4) படையாச்சி (5) மறவர் (6) மேளக்காரர் என ஆறு சாதியினர் குறிப்பிடப் பட்டுள்ளனர்.

Reference : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21440:2012-09-27-18-44-18&catid=25:tamilnadu&Itemid=137

தஞ்சை பகுதிகளில் மாரதியர் ஆட்சியின் போது இடங்கை வலங்கை சாதிகள் என்று குறிப்பிட பட்டு இருப்பதில் கள்ளர் என்ற சாதி காணப்படவில்லை . அவர்கள் தஞ்சை குடந்தை பகுதிகளில் இருந்தவர் பற்றி குறிப்பிடும் போது படையாச்சி ,  மறவர் என்ற சாதிகள் இருந்ததாக மட்டுமே கூறுகின்றனர் . தஞ்சை கள்ளர்கள் இங்கே பன்னெடுங்காலமாக வாழ்ந்தார்கள் என்றால் ஏன் அவர்கள் குறிப்பிட படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது .


நன்றி : இந்த களப என்னும் கல்வெட்டு குறிப்பை பற்றி செய்தி எனக்கு கிடைக்க காரணமாக இருந்த திரு.ராஜேஷ் பிள்ளை அவர்களுக்கு நன்றி 

சோழர் மன்னர்கள் வர்மன் என்ற பெயர் சேர்த்து அழைக்க பட்ட கல்வெட்டுக்கள் :


சோழர் மன்னர்கள் வர்மன் என்ற பெயர் சேர்த்து அழைக்க பட்ட கல்வெட்டுக்கள் :






----நன்றி
சோழர் கரந்தை செப்பேடு தொகுதி
ஆசிரியர்: சி.கோவிந்தராசன்
சி.கோ.தெய்வநாயகம்
மதுரை பல்கலைக்கழகம்

Friday, November 2, 2012

கி.பி.7 ஆம் நூற்றாண்டு மஹேந்திரவர்ம பல்லவர் காலத்திய கல்வெட்டு : காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்ற செய்தி



ஆதாரம்: தருமபுரி மாவட்டம் பலிஞ்சரஹள்ளி எனும் ஊரில் உள்ள நடுகல் கூறும் செய்தி.


இதன் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு.மஹேந்திரவர்ம பல்லவர் காலத்தியது.

"கோவிசைய மயீந்திர பருமற்கு

யாண்டைந்தாவது காடந்தைகள்
சேவகன் புதுப்பள்ளிகளோடு பொருத
ஞான்று பட்டா நெருமேதிகாரி"


(தருமபுரி கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண். 1973/26)

காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்பதே செய்தி.

ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டொன்றில் சோழர் படைத்தளபதியாக இருந்த ஒரு பள்ளி (வன்னியர் ) இனத்தவர்


ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டொன்றில் சோழர் படைத்தளபதியாக இருந்த ஒரு பள்ளி (வன்னியர் ) இனத்தவர் குறிப்பிடப்படுகிறார்.

"வேசாலி பிரமதேயத்திலிருக்கும் குடிப்பள்ளி பெருமான் இரண்டாயிரவனான ஸேநாபதி ராஜேந்திர சோழ வேசாலிப் பேரரையன்" (ARE 124 of 1902)

இரண்டாயிரவன் என்பதால் இந்த பள்ளி இனத்தவர் இரண்டாயிரம் வீரர்கள் கொண்ட படைப்பிரிவிற்கு தளபதியாக இருந்தார் என்பது தெரிய வருகிறது.

###

நன்றி : தகவலை அளித்த திரு சுவாமி அவர்களுக்கு நன்றி :