Tuesday, November 6, 2012

வன்னியர்களுக்கு நன்றியாக படையல் போடும் செங்குந்த முதலியார் சமூகத்தினர்

தமிழ்நாட்டில் இடங்கை வலங்கை தகராறு நடந்த சமயத்தில் பிராமணர், வன்னியர் தவிர மற்ற சமூகங்கள் அனைத்தும் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவரோடு ஒருவர் மோதி கொண்டனர். அப்போது சிதம்பரம் பகுதியில் வேளாளர் சமூகத்தினர் செங்குந்தர் சமூகத்தினரை மிக கடுமையாக தாக்கினர். அது வரை இடங்கை வலங்கை சண்டையில் பங்கேற்காத வன்னியர்கள், செங்குந்தர் சமூக மக்களை காக்க வேளாளர்களோடு சண்டையிட்டனர். 

அந்த சண்டையில் பல உயிர் சேதம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியை ஆட்சி செய்து வந்த தில்லை சோழர்களான பிச்சாவரம் ஜமீனுக்கு கொடுக்கப்பட்டு வந்த மானியத்தை ஆங்கிலேய அரசு நிறுத்தி கொண்டது. அது முதலே அந்த சோழர் குடும்பம் வறுமையில் விழுந்தது. இருபினும் அவர்களுக்குரிய உரிமைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.

வன்னியர்களின் இந்த தியாகத்திற்கு நன்றியாக இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழும் செங்குந்த முதலியார் சமூகத்தினர் சாமிக்கு படையல் போடும் போது வன்னியர்களுக்கும் ஒரு படையல் போட்டு தங்கள் நன்றியை தெரிவிகின்றனர் .

வன்னியர்கள் இடங்கை சாதி தலைவனாக அறியப்பட்டனர் . இதனால் அவர்கள்  இடங்கைப் பெரியோன், இடங்கையாதிபர் என்று அழைக்க பட்டனர்

குறிப்பு : இடங்கை வலங்கை தகராறு புத்தகம்.

நன்றி : கார்த்திக் சம்புவராயர்