Monday, May 21, 2012

கடந்தையார்:

 தகவலை வழங்கிய சொந்தம் திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி :
சம்புவராயர்,காடவராயர், கச்சிராயர்,வாணகோவரையர், மழவராயர் என்ற பெயர்களில் வன்னியர்கள் சிறு பகுதிகளை சோழர் காலந்தொடங்கி ஆண்டு வந்துள்ளனர்.

வன்னிய குலத்தினருள் கடந்தையார் என்ற பிரிவினர் உள்ளனர்.

இவர்கள் கி.பி. 16 ஆம் நுற்றாண்டில் பெண்ணாடத்தை ஆண்ட பாளையக்காரர்களாக அறியப்படுகின்றனர்.

இரு நூல்களைக் கொண்டு இப்பாளையக்காரர்கள் பற்றியும் அவர்கள் யார் என்பது பற்றியும் அறிய முடிகிறது.

கடந்தையார்களைப் பற்றி ஒரு செப்பேடு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் 3, பகுதி 1 இல் பக்கம் 1263 இல் இதனை பற்றிய செய்தி உள்ளது.

செப்பேட்டின் மூலம் அறியப்படும் பெண்ணாடம் பாளையக்காரர்கள் :

1.பிரளயங்காத்த கடந்தையார் 2. பொன்னளந்த கடந்தையார் 3.பெரிய நாயக கடந்தையார் 4.ராமநாதக் கடந்தையார்.

இக்கடந்தையார்களின் உறவினராக அறியப்படுபவர்கள் குண்ணத்தூரை ஆண்ட வன்னிய பாளையக்காரர்களான மழவராய நயினார்கள்.

கடந்தையார்களும், குண்ணத்தூர் மழவராயர்களும் உறவின் முறையினராக (பெண் கொண்டு பெண் கொடுப்பவர்களாக) இருந்திருக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட அந்தச் செப்பேட்டை கி.பி.1512 இல் பெரிய நாயகக் கடந்தையார் வெளியிட்டிருக்கிறார்.

பெண்ணாடம் பகுதியில் வாழ்ந்து வரும் கடந்தையார் பட்டம் கொண்ட வன்னியர்களுக்கு கடந்தை ஈச்சரன் கோயிலில் இன்றும் முதல் மரியாதை செய்யப் பெற்று வருகிறது.

(நன்றி: வன்னியர் - நடன.காசிநாதன்)

------

இந்த கடந்தையார் என்பவர்களின் முந்தைய நிலை என்ன?

பென்ணாகடம், குடிகாடு, திட்டக்குடி,பெரம்பலூர், செந்துறை பகுதிகளில் வாழ்ந்த வன்னியர்களான இக்கடந்தையார்கள் சோழர் காலத்தில் குறுநிலத் தலைவர்களாகவும், பாடி காவல் அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர். இவர்களுக்கு "வங்கார முத்தரையர்" என்ற பட்டம் உண்டு.

சோழர் காலத்தில் ஆட்சியாளர்களாக அறியப்பட்ட வங்கார முத்தரையர் பட்டம் கொண்ட கடந்தையார்கள்:

1. சேந்தன் கூத்தாடுவானான ராஜராஜ வங்கார முத்தரையன் (2 ஆம் ராஜ ராஜ சோழன் காலம்)

2.கடந்தை சேந்தன் ஆதித்தன் ராஜராஜ வங்கார முத்தரையன்.

3.ஆதித்தன் மண்டலியான ராஜாதிராஜ வங்கார முத்தரையன் (சோழன் 2 ஆம் ராஜாதிராஜன் காலம்)

4.பொன்பரப்பினான் வீர வங்கார முத்தரையன் (3 ஆம் குலோத்துங்க சோழன் காலம்)

5.கடந்தை ஆதித்தன் மண்டலியான வங்கார முத்தரையன் ( 3 ஆம் குலோத்துங்க சோழன் காலம்)

6.மண்டலியான ராஜராஜ வங்கார முத்தரையன்.

7.வங்காரமுதரையனான பொன்பரப்பினார் (3 ஆம் ராஜராஜ சோழன் காலம்)

(நன்றி: வரலாற்றில் பெண்ணாகடம்)

Saturday, May 19, 2012

ஜனநாயகத்தில் பெரும்பான்மைக்கே ஆட்சியுரிமை; அந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆட்சியுரிமை வன்னியரின் பிறப்புரிமை இதுவே இனி நம் போராட்ட முழக்கமாகட்டும்.

இட ஒதுக்கீடு எனும் மாயமான் வேட்டையில் வன்னிய சமூகம் 60 ஆண்டுகளை வீணடித்தது போதும்;

வன்னியர் மகா சங்கத்தின் 123ஆம் ஆண்டுவிழாவில் ந.இறைவன் பேச்சு.


வன்னியகுல சத்திரிய மகா சங்கத்தின் 123ஆவது ஆண்டு விழாவும்; சங்கத்தின் பொதுக்குழு கூட்டமும் 18.12.2011 ஞாயிற்றுக்கிழமை சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஏ.என்.ராமசாமி திருமண மாளிகையில் மகாசங்கத் தலைவர் உ.பலராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார் விருது; வாழப்பாடியார் விருது ஆகியவற்றை வழங்கி ‡  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் கோ.சூரியமூர்த்தி சிறப்பு பேருரையாற்றினார். மகாசங்கத் துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார். மகாசங்கப் பொதுச்செயலாளர் கோவி தட்சிணாமூர்த்திஆண்டறிக்கையை வாசித்தார்.

மகாசங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கோ.முத்து தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார்.

டாக்டர் எஸ்.எஸ்.ஆர்.ராமதாசு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்; வாழப்பாடி இராம.சுகந்தன்; சி.ஆர்.தசரதன்; நண்பர்கள் நலமன்ற தலைவர் எ.பாலகிருஷ்ணன், கட்டிடத் தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம், அருள் முருகன் பில்டர்ஸ் ராமமூர்த்தி; கெஜபதி நாயகர், ஓவியர் ராகி.பாரி, அச்சமில்லை ஆசிரியர் ந.இறைவன் ஆகியோர் சமுதாய முன்னேற்றம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.

மகாசங்கத் தலைவரும் விழாவின் தலைவருமான இலக்கியப் புரவலர் உ.பலராமன் நிறைவுரையாற்றினார்.

தலைவர் உ.பலராமன்; கோ.சூரியமூர்த்தி; வழக்கறிஞர் முத்து ஆகியோர் உரைகள் அடுத்த இதழில் இடம் பெறும்.

========================================================================
 
வன்னிய மகாசங்கத் தலைவர் சகோதரர் பலராமன் அவர்களே,
மகா சங்கத்தின் பொறுப்பாளர்களே, உறுப்பினர்களே உரையாற்ற வந்திருக்கும் தலைவர்களே, அனைவருக்கும் வணக்கம்.

நம் சமூக முன்னேற்றத்திற்காக இப்படி ஓர் சங்கம் அமைக்க வேண்டும் என 123 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து செயல்பட்ட நம் சமூக சான்றோர்கள் என்றைக்கும் நம் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.

இந்தப் பழம்பெரும் சங்கத்தின் 123ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துச் சொல்ல வாய்ப்பு பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன்.

123ஆண்டுகளுக்கு முன்பே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ‡ இந்த சங்கத்தின் முக்கியக் கொள்கை வன்னியர் சமூகக் கல்வி முன்னேற்றம் என சங்கத்தின் சட்டதிட்டத்தில் குறிப்பிட்டிருப்பதை எண்ணி வியக்கிறேன். அடுத்த முக்கியக் கொள்கையாக நமக்குள் ஒற்றுமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதை சங்கத்தின் விதியாக வரையறுத்திருக்கிறார்கள்.

இந்த 123 ஆண்டுகளில் வன்னியர் சமூகம் கல்வியில் முன்னேறி இருக்கிறதா
நம்மிடையே சமூக ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறதா?
இல்லை. இல்லை என்பதுதானே பதில்.
ஏன் இந்த அவலம் என்பது குறித்தாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? என்றால். அதுவும் இல்லை.

எனவேதான்-
இந்த சங்கத்தை நிறுவியவர்களின் கனவு வெறும் கனவாகவே இருக்கிறது இன்றளவும்.

வன்னிய சமூகமே தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம்.
தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம் நாம்தான். எந்த ஆதாரமும் இல்லாமல் தாங்கள்தான் தமிழ்நாட்டின் பெரும்பான்மைச் சமூகங்கள் என மற்ற சமூகத்தவர்கள் சொல்லித் திரிகிறார்களே அது போன்றதுதானா நாம் சொல்வது?

நாம் அப்படிச் சொல்லவில்லை.
வெள்ளைக்கார அரசு 1871 முதல் 1931 வரை ஒவ்வொரு பத்தாண்டும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. அதன் விபரங்கள் அப்போதைய அரசிதழ்களில் வெளியிடப்பட்டது. அந்த புள்ளி விபரங்களின்படி நாம்தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம். தாங்கள் தான் தமிழ்நாட்டின் பெரும்பான்மைச் சமூகங்கள் என இன்று வாய்ப்பறை அடித்துக்கொண்டிருக்கும் சாதிகளில் ஒன்றுகூட அந்த புள்ளி விபரப்படி வன்னிய சமூக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட இல்லாதவையே. நம்மோடு ஒப்பிட முடியாத சிறுபான்மைச் சாதிகளே.

புலவர்கள் மொழியில் சொல்வதானால் வன்னியர்கள் தமிழ்நாட்டில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெரும்பான்மைச் சமூகம்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் வார இதழில் நான் தமிழன் என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் முக்கிய சாதிகள் பற்றிய கட்டுரைத் தொடர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்தக் கட்டுரையில்.

வன்னியர் சமூகம் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்நாட்டை இவர்களே ஆள்வார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையை எழுதியவர் வன்னியர் அல்ல.
வன்னியர் அல்லாத ஒருவர் நம்மைப்பற்றி இப்படி எழுதி இருப்பது‡
வன்னியர்கள் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம் என்ற உண்மை வன்னியர் அல்லாத மற்ற சமூகத்தவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றாகும்.
வன்னியரின் மகாசக்தி
ஜனநாயக நாட்டில் பெரும்பான்மையாக இருப்பது ஒரு சக்தி. அதிலும் நம்பம் 1 பெரும்பான்மைச் சமூகமாக இருப்பது ஒரு மகா சக்தி.
இன்று  சிறுபான்மைச் சமூகங்கள் எல்லாம் அரசியலில் கொடிகட்டிப் பறக்கிறதே.
மகா சக்தியாக இருக்கின்ற வன்னிய சமூகம் அரசியலும்; ஆட்சியிலும்; அதிகாரத்திலும் என்னவாக இருக்கிறது?
சொன்னால் வெட்கக்கேடு; சொல்லாவிட்டால் மானக்கேடு என்பார்களே அந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம்.
ஆளவேண்டிய வன்னியர்சமூகம், தங்களுக்குரிய ஆட்சி உரிமையை வந்தேறி சிறுபான்மைத் தலைவர்களிடம் கொடுத்துவிட்டு;
அவர்களது கட்சியில் ஒரு கிளைச்செயலாளர் பதவிக்கும்; அவர்களது ஆட்சியில் கடைகோடி எடுபிடி மந்திரி பதவிகளுக்கும் பிச்சைகேட்டு நிற்கும் யாசகர்களாகத்தான் ஒவ்வொரு கட்சியிலும் வன்னியர்கள் இருக்கிறார்கள்.
அதிகாரத்தில் வன்னியர் நிலை என்ன?
60 ஆண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு கேட்டு போராடிக்கொண்டிருக்கும் ஒரே சாதி வன்னியர் சாதிதான்.
இந்திய அளவில் வரலாறு காணாத சாலை மறியல் போராட்டத்தை நடத்த முடிந்த சக்தி மிக்க சமூகமாக வன்னியர் சமூகம் இருந்தும்‡
அந்த போராட்டத்தால் வந்த எம்.பி.சி இட ஒதுக்கீட்டால் வன்னியர் சமூகத்திற்கு லாபமா நஷ்டமா என்ற கணக்கைப் பார்க்கத் தெரியாத சமூகமாக வன்னியர் சமூகம் இருக்கிறது என்பதுதான் வேதனை.
அதுமட்டுமல்ல-
எம்.பி.சி இட ஒதுக்கீட்டால் கிடைக்கும் சில பியூன் பதவிகளையும்; சில குமாஸ்த்தா பதவிகளையுமே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக எண்ணிக்கொண்டு-
இதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும் என்று துதிபாடிக் கிடக்கும் அப்பாவி சமூகமாகவும்  வன்னிய சமூகம் இருக்கிறது.
எதொன்றிலும் லாபநட்டம் பார்க்கத் தெரியாத சமூகம் முன்னேறுவது முடியாதது.

நமது நிலை என்ன?
அதே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நில உடைமையாளர்களாக; மிராசுதாரர்களாக திருநெல்வேலி சிவகிரி வரை விரிந்து பரந்த ஜமீன்களைக் கொண்ட சமூகமாக வன்னியர் சமூகம் இருந்தது.
இன்று என்ன நிலை?
நம்மவர்களில் பெரும்பாலோர் டாஸ்மாக் கடைகளையே கோயில்கள் எனக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலைதானே நம் நிலை?
நாடார்களின் இந்த விஸ்வரூப வளர்ச்சிக்கும் நமது அதலபாதாள வீழ்ச்சிக்கும் என்ன காரணம்?
பார்வைத் தீட்டிலிருந்த சமுதாயத்தில் பிறந்த காமராச நாடார் காங்கிரசுக் கட்சித் தலைவராக ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் இருந்தார். தொடர்ச்சியாகப் பத்தாண்டுகளுக்கு மேலாக முதல்வராக இருந்து தமிழ்நாட்டை ஆண்டார்.
பிறகு அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் தலைவராகவும் ஆனார்.
காமராசரின் 40 ஆண்டுகாலத்திற்கும் மேலான இந்த அரசியல் தலைமைதான் - நாடார் சமூகத்தின் இந்த விஸ்வரூப வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
தமிழ்நாட்டின் நம்பர் 1 சமூகமாக நாம் இருந்தும் காமராசரைப் போல அரசியல் ஆதிக்கம் கொண்ட ஒருதலைவர் நம் சமூகத்திலிருந்து தோன்றாததுதான் நம் சமூகத்தின் வீழ்ச்சிக்கு காரணம்?
நம்முடைய சமூகத்திலிருந்து அப்படியோர் அரசியல் தலைமை ஏன் உருவாகவில்லை?
பதவி வரும்போது காமராசரைப் போல அதை சிக்கென பற்றிக்கொள்ளும் வல்லவர்களாக பதவி மோகம் கெண்டவர்களாக வன்னியர்கள் இல்லாதிருப்பதே காரணம்.
ஊராட்சித்தலைவர் பதவிக்கு மட்டுமே போராடுபவர்களாக வன்னியர்கள் இருந்திருக்கிறார்கள். முதல்வர் பதவிக்கு போராடும் சமுதாயமாக வன்னிய சமூகத்தை மாற்ற வேண்டும்.
உதாரணத்திற்கு எனக்குத் தெரிந்த நம்மவர்கள் பற்றிய செய்திகளைச் சொல்கிறேன்.
இப்படிப் பதவி மோகம் இல்லாத தலைவர்களை வேறு எந்த சமுதாயத்திலாவது பார்க்க முடியுமா?

அய்யா ஆனைமுத்து:
 
 
பெரியாரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர்களில் அய்யா ஆனைமுத்து முக்கியமானவர். பெரியாரே விரும்பி திராவிடர் கழகத்தில் பொறுப்பேற்க அழைத்தபோது - நிர்வாகத்திற்குள் வர விருப்பமில்லை எனச் சொல்லி ஒதுங்கிக் கொண்டதாக அவரே சொல்லியிருப்பதாக எனக்கு நினைவு.
நிர்வாகப் பொறுப்பிற்குள் வந்துவிட்டால் -  பிறர் செய்கிற தவறுகளுக்கான பழிகள் தன்மீது விழும் எனக்கருதி பெரியாரின் அழைப்பை ஏற்க அய்யா ஆனைமுத்து மறுத்திருக்கலாம் என்பது எனது யூகம்.
இப்படி நல்லவர்கள் எல்லாம் வீண்பழி வருமே என அஞ்சி ஒதுங்குவதால்தான் ஆட்சியும் அதிகாரமும் பெரும்பாலான காலங்களில் தீயவர்களின் கைகளுக்குள் சிக்கி சீரழிகின்றன.
திராவிடர் கழக நிர்வாக பொறுப்பிற்குள் வர மறுத்த அய்யா ஆனைமுத்துதான்‡
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற தலைப்பில் பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் 3000 பக்கங்களில் தொகுத்து 3 தொகுதிகளாக - பெரியாரின் ஒப்புதலோடு - 1974ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார். அடுத்தடுத்ததலைமுறையினரும்; பெரியார் ஆய்வாளர்களும் பெரியார் பற்றி அறிந்து கொள்ள இது பெரும் வாய்ப்பாக அமைந்தது.
இதோடு தன்பணி முடிந்தது என ஓய்ந்தாரா அய்யா ஆனைமுத்து என்றால் இல்லை.
மேலும் சுமார் 40 ஆண்டுகள் உழைத்து‡
பெரியார் பற்றிய அனைத்து செய்திகளையும் திரட்டி; பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் நூலை 9000 பக்கங்களாக விரிவாக்கி; 9 தொகுதிகளாக 2009இல் வெளியிட்டு பெரியாருக்கு பெருந்தொண்டு ஆற்றியுள்ளார்.
இப்படி தன் வாழ்நாளையே பெரியாரின் புகழ்பரப்ப செலவிட்டு வரும் அய்யா ஆனைமுத்து அவர்கள்-
சேப்பாக்கம் முருகப்பா தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதியில் வாடகைக்கு அலுவலகத்தை வைத்துக்கொண்டு-
ஒரு பக்கிரியைப் போல கால்நடையாக அலைந்து திரிந்து உழைக்கிறார் என்பதும்‡
அய்யா ஆனைமுத்துவின் பெரியார் பெருந்தொண்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு பணிகூட செய்யாத ஒருவர் -
பெரியாரின் திராவிடர் கழகத்தையும்; அதற்கான பலநூறுகோடி சொத்துக்களையும் கைப்பற்றி ஆண்டு அனுபவித்துக்கொண்டு சுகவாழ்வு வாழ்கிறார் என்பதும்‡
எதனால் வந்தது‡?
 ஆனைமுத்து நிர்வாகத்திற்குள் வர மறுத்ததாலும் - வீரமணி நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டதாலும் என்பதைத்தவிர வேறு என்ன காரணம்?
இதை யார்மீதும் பொறாமை காரணமாக ஒப்பிட்டுச் சொல்லவில்லை.
இவ்வளவு பெரிய பெரியாரின் சொத்துக்கள் - அய்யா ஆனைமுத்துவின் நிர்வாகத்திற்குள் இருந்திருக்குமானால் - பெரியாருக்கு என்னவெல்லாம் செய்திருப்பார் அய்யா ஆனைமுத்து என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.
இப்படி வாய்ப்பு தானாக வரும்போதுகூட அதை மறுத்தவர் அய்யா ஆனைமுத்து ஒருவர் மட்டுமல்ல.

வாழப்பாடியார்  :


தமிழ்நாட்டில் 1967இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து தோற்ற பின்னால்‡
காங்கிரசு கட்சிக்கு அதிகப்படியான எம்.எல்.ஏக்களை பெற்றுத்தந்தது வாழப்பாடியார் தலைமைதான். 64 எம்.எல்.ஏக்கள்.
முதல்வர் ஜெயலலிதா - ஒரு சூழ்நிலையில் முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை அப்போது கவர்னராக இருந்த பீஷ்மநாராயண சிங்கிடம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் -
பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் வாழப்பாடியாரைச் சந்தித்து நீங்கள் முதல்வராக ஆகுங்கள். நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் எனப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வாழப்பாடியார் அதனை ஏற்க மறுத்துவிட்டார் என்ற செய்தியை அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த சகோதரர் பலராமன் அவர்கள் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
வேறு ஒரு சாதியைச் சேர்ந்த அரசியல்வாதி யாராவது ‡ தானாக வரும் இப்படிப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டிருப்பார்களா?
குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர விருப்பமிவில்லை வாழப்பாடியாருக்கு என்பது என்னைப் பொருத்தவரை பெருமைக்கு உரியது என்பதை விட - வருத்தத்திற்கு உரியதாகவே நான் கருதுகிறேன்.
சில நாட்களே பதவியில் இருந்த சரண் சிங் பெயரும்; சில மாதங்களே பதவியில் இருந்த சந்திரசேகர் பெயரும் இந்திய பிரதமர் பட்டியலில் இருக்கத்தானே செய்கிறது.
சில நாட்களே முதல்வராக இருந்த வி.என்.ஜானகி பெயரும்; பினாமிதான் அடிமைச் சேவகம்தான் என்றாலும் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் தமிழக முதல்வர்கள் பட்டியலில் இருக்கத்தானே செய்கிறது.
வாழப்பாடியாருக்குத் தானாக வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டிருப்பாரானால் - தமிழக முதல்வர்களில் தனிச்சிறப்பு பெற்ற முதல்வராக இருந்திருப்பார் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.
இதேபோல்தான்-


எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார் :

வன்னிய இனத்தின் எழுச்சி நாயகரான எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியாரும்.
1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராச நாடாரின் வன்னிய ஒடுக்குமுறைக்குஎதிராகக் கிளர்ந்தெழுந்த ராமசாமிப படையாட்சியார்‡
கட்சி ஆரம்பித்த ஒரே மாதத்தில் தேர்தலைச் சந்தித்து 19 எம்.எல்.ஏக்களைப் பெற்றிருந்தார்.
1954 இல் ராஜாஜிக்கு எதிராக களத்தில் இறங்கிய காமராச நாடார் முதல்வராக ஆவதற்கு ராமசாமி படையாட்சியார் ஆதரவு தேவைப்பட்டது. பெரியார் மூலம் ராமசாமிப் படையாட்சியாருக்கு நெருக்கடி கொடுத்தபோது - காமராசரைப் போல பதவி மோகம் கொண்டவராக இருந்திருந்தால்‡
எனக்கு துணை முதல்வர் பதவி கொடு; உன்னை ஆதரிக்கிறேன் என நிபந்தனை விதித்திருக்கலாம்.
வியாபாரச் சமூகத்தில் பிறந்த காமராசர் அதற்கு இணங்கி இருக்கவும் கூடும்.
வன்னியர் சமூக முன்னேற்ற மோகம் கொண்டவராக ‡ ராமசாமி படையாட்சியார் ‡ இருந்த காரணத்தால் - எங்கள் சமூகப் பிள்ளைகளுக்கு கல்விக்கான அரைக் கட்டணச் சலுகைத் தரவேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை நிபந்தனையாக வைத்தார். அதை ஏற்று 39 சாதிகளை எம்.பி.சி.எனப் பட்டியலிட்டு பள்ளி மாணவர்களுக்கு அரைக் கட்டணச் சலுகைகளைத் தந்தார் காமராசர்.
என்னைப் பொருத்தவரையில் இது ஒரு கோரிக்கையே இல்லாத கோரிக்கை.
தனக்கு கல்வி அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டு வாங்கி; இந்த அரைக்கட்டணச் சலுகை என்ன, முழுக்கட்டணச் சலுகையையே கூட ராமசாமி படையாட்சியாரே வழங்கி இருக்கலாம்.
இப்படிப்பட்ட‡
பதவி மோகம் இல்லாத ஏமாளித்தனமான அரசியல்வாதிகளை வேறு எந்த சமூகத்திலாவது பார்க்க முடியுமா? நம் சமூகத்தவர்களின் இத்தகைய குணங்கள் தான் நம் சமூகத்தின் இன்றைய பின்னடைவிற்கு ஒரு காரணம்.
வன்னியர் சமூகம் நூறாண்டுகளாக இழந்த பெருமையை பத்தே ஆண்டுகளில் மீட்டுவிடலாம்
போனதெல்லாம் போகட்டும்;
இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை.
இன்னமும்-
மற்ற சமூக அரசியல்வாதிகளால் அபகரிக்க முடியாத ஒரு பெரும் சொத்து வன்னிய சமூகத்திடம் இருக்கிறது. தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம் வன்னியர் சமூகம் என்பதுதான் அந்த சொத்து.
ஜனநாயகத்தில் இதுதான் பெரிய சக்தி.
ஒரு சமூகத்திற்கு இதுதான் பெரிய சொத்து.
பெரும்பான்மைச் சமூகம் என்ற பெரும் சொத்தை வைத்துதான் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மராட்டா சமூகம் மட்டுமே தொடர்ந்து ஆளும் சக்தியாக இருந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது.
பெரும்பான்மைச் சமூகம் என்ற இந்த பெரும் சொத்தை வைத்துதான் கர்நாடகாவில் லிங்காயத் சமூகமும் கெளடா சமூகமும் தொடர்ந்து ஆளும் சக்திகளாக இருக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு முன்னேறியும் இருக்கின்றன.
இந்திய அளவில் -
வன்னியர் சமூகம் மட்டும்தான் பெரும்பான்மைச் சமூகமாக இருந்தும் ஆட்சிக்கு வரமுடியாமல் இருக்கும் சாதியாக இருக்கின்றது.
மற்ற சாதியினரைப் போல் சமூக உணர்வோடு ஒன்றிணைந்தால்  ‡ குமுதம் வார இதழ் சுட்டிக்காட்டியதைப் போல் தமிழ்நாட்டை வன்னியர்களே ஆள்வார்கள் என்ற நிலையைப் பத்தாண்டுகளில்  உருவாக்கி விடலாம்.
நூறாண்டுகளாக நாம் இழந்து போன உரிமைகளையும் பெருமைகளையும் அடுத்த பத்தாண்டுகளில் மீட்டுவிடலாம்.
அதற்கு; ஆட்சி அதிகாரம் நமது பிறப்புரிமை. அதை கருணாநிதி; எம்.ஜி.ராமச்சந்திரன்; ஜெயலலிதா போன்ற வந்தேறி சிறுபான்மைகளிடம் கொடுத்துவிட்டு இட ஒதுக்கீட்டு பிச்சைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டோம். என்ற உறுதி மிக்க‡ வல்லமை மிக்க ஒரு தலைவனை நாம் உருவாக்க வேண்டும்.
நல்ல தலைவன் வேண்டும்
நல்ல தலைவனா? அதற்கு என்ன இலக்கணம் என்று கேட்கலாம்.
"ஒட்டுமொத்த வன்னிய சமூகத்தையும் தன் பிள்ளைகளாகக் கருதி அவர்கள் முன்னேற்றத்திற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அவனே வன்னிய சமூகத்தின் தலைவன்.
தன் பிள்ளைகளை மட்டுமே வன்னிய சமுகம் எனக்கருதி தன் குடும் முன்னேற்றத்திற்காக மட்டும் பாடுபடும் எவனும் வன்னிய சமூகத்தின் தலைவனாக முடியாது."
வன்னிய சமூகத்தின் நல்ல தலைவனுக்கான இந்த இலக்கணத்தை நாம் யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு ரத்தின சுருக்கமாக வரையறுத்து சொன்னவர் ஒரு சாலை மறியல் தியாகி.
அவர் பெயர் வெடிகுண்டு ராஜகோபால். மின்சார வாரியத்தின் ஒரு சாதாரண ஊழியராக இருந்து; சாலை மறியலில் ஈடுபட்ட காரணத்தால் ‡ காவல்துறை வெடிகுண்டு வைத்திருந்தார் என பொய்வழக்குப் போட்டு கைது செய்த காரணத்தால் வேலைவாய்ப்பை இழந்து; வழக்குக்காக சொத்துக்ளை இழந்து; குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு ‡ ஒரு முருகன் கோவிலை சுத்தம் செய்து அதற்காக தரப்படும் பிரசாதத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜகோபால் பாபநாசத்திற்குப் பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
2006 சட்டமன்றத் தேர்தலில் போது அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் பேசிய அந்தப் பேச்சினை  இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.
இப்போது நம் சமூகத்திற்கு தலைவர்களுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. ஊருக்கு ஊர் வன்னியர் சங்கங்கள் புதுப்புது பெயரில் தினம் தினம் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தலைவர்; செயலாளர்; பொருளாளர் என ஊருக்கு நாலைந்து வன்னியத் தலைவர்கள் முளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
போதும்...
இட ஒதுக்கீடென்னும் மாயமான் வேட்டையில்
60 ஆண்டுகளை வீணடித்தது போதும்.
இவர்கள் எல்லோரும் கிளிப்பிள்ளைகளைப் போல முன்வைக்கிற ஒரு கோரிக்கை வன்னிய சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே. யாருக்கும் வேறு சிந்தனையே இல்லை.
ஒரு பெரும்பான்மைச் சமூகம் வைக்க வேண்டிய கோரிக்கையா இது? பெரும்பான்மைச் சமூக ஆட்சித் தலைவர்களிடம் சிறுபான்மைச் சமூகத் தலைவர்கள் வைக்க வேண்டிய கோரிக்கை.
நாமோ - நாம் உட்கார வேண்டிய முதல்வர் நாற்காலியை காமராசரிடமும்; கருணாநிதியிடமும்; எம்.ஜி.ராமச்சந்திரனிடமும்; ஜெயலலிதாவிடமும் கொடுத்துவிட்டு ‡ அவர்களிடம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு பிச்சை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை வெட்கக்கேடாகவே நான் கருதுகிறேன்.
60 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு பிச்சை கேட்டுக்கொண்டிருக்கும் ஒரே சாதி வன்னிய சாதி என்ற அவமானத்தை முதலில்விட்டு ஒழிப்போம்.
இந்திய அளவில் வியந்து பார்க்கப்பட்ட வரலாறு காணாத சாலை மறியல் போராட்டம் நடத்தி எம்.பி.சி.இட ஒதுக்கீடு பெற்று 20 ஆண்டுகள் ஆகப்போகிறது. உயர்ந்து விட்டதா வன்னியர் வாழ்வு? ஏன் உயரவில்லை என்பதை இட ஒதுக்கீடு என்றும்; தனி ஒதுக்கீடு என்றும் பேசுகிற எந்த தலைவர்களாவது சிந்தித்தார்களா?
யி
எம்.பி.சி இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு - 1991-92 முதல் 2007-2008 வரை தமிழ்நடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 17 முறை தேர்வு நடத்தியுள்ளது.
இதில் எம்.பி.சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை 7773. இதில் வன்னியர் சமூகத்தவர்கள் பெற்ற பதவிகள் 3964 மட்டுமே. சராசரியாக ஒரு ஆண்டுக்கு - 2 கோடி மக்கçக் கொண்ட வன்னிய சமூகத்திற்கு கிடைத்த பதவிகள் 234 மட்டுமே!
இந்த எம்.பி.சி.இடஒதுக்கீடு வந்ததால் நமக்கு லாபமா நஷ்டமா என்றால் நஷ்டம் என்பதே உண்மை.
அம்பா சங்கர் அறிக்கைப் படி-
எம்.பி.சி பட்டியலில் உள்ள 109 சாதிகளும் முன்பு பி.சி.பட்டியலில் இருந்தபோது பெற்ற மொத்த பதவிகளில் வன்னியர் சமூகம் 54.92 சதவீதப் பதவிகளைப் பெற்று வந்தது.
எம்.பி.சி உருவான பின்னால் இதுவரை (2008-2009) தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் மூலம்109 சாதிகள் பெற்ற மொத்த பதவிகள் 50.87 சதவீதம்.
ஆகவே‡எம்.பி.சி ஆனதால் வன்னியர் சமூகத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் 4.05 சதவீதம்.
இதற்காகவா 60 ஆண்டுகளுக்கு மேலாக இட ஒதுக்கீடு கேட்டுப் போராடினோம்?
இதற்காகவா இந்திய வரலாறு காணாத சாலை மறியல் போராட்டத்தை நடத்தி 20க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறிகொடுத்தோம்?
இதற்காகவா பல்லாயிரக்கணக்கானோர் அடி உதைபட்டு சிறைசென்று வழக்குகளில் சிக்கி சீரழிந்தோம்?
காசு கொடுத்து சூனியம் வைத்துக்கொண்டவன் கதையாக - எம்.பி.சி.இட ஒதுக்கீட்டை வாங்கி நஷ்ட்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
இப்போது‡
வன்னிய சமூகத்திற்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று எல்லா என்னிய அமைப்புகளும் கோரசாக கூப்பாடு போடுகிறார்கள்.
தனி ஒதுக்கீடு தராவிட்டால்; ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் நடத்தியதைப் போல ஆயிரம் மடங்கு பெரிய போராட்டத்தை நடத்துவேன் என்கிறார் பெரியவர் ராமதாசு.
எதற்கு?
யாரோ அனுபவிக்க சாலை மறியல் போராட்டத்தில் வன்னியர்கள் செத்தது போதாதா?
மாயமான் வேட்டையாகிவிட்ட இட ஒதுக்கீட்டிற்காக இன்னும் எத்தனை வன்னியர்களை சாகடிக்கத் திட்டம்?
இதற்காக‡
எம்.பி.சி பட்டியலில் 109 சாதிகளைச் சேர்த்ததால்தான் வன்னியருக்கு எம்.பி.சி.வந்தும் பலனில்லை என்றும் காரணம் சொல்கிறார்கள்.
இது உண்மையல்ல,
1991‡92 முதலான 17 ஆண்டுகால அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் இதுவரை 75 சாதிகள் ஒரே ஒரு பதவி கூட பெறாத சாதிகள். இதனால் வன்னியருக்கு ஒன்றும் பாதிப்பில்லை. மீதி இருக்கிற 34 சாதிகள் மட்டுமே எம்.பி.சி இட ஒதுக்கீட்டால் கிடைத்த 7773 பதவிகளையும் பெற்றுள்ளன.
இந்த 34 சாதிகளில் கூட தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் நம்மை விட குறைவாக பதவிகள் பெற்ற சாதிகள் 10. இந்த 10 சாதிகளாலும் நமக்கு பாதிப்பில்லை
வன்னியரல்லாத மீதமுள்ள 23 சாதிகள் தான் தங்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட கூடுதலாகப் பதவிகளைப் பெறும் சாதிகள்.
இந்த 23 சாதிகளால்தான் எம்.பி.சி இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை.
இந்த 23 சாதிகளையும் எம்.பி.சியில் முன்னேறிய சாதிகள் என வகைப்படுத்தி ‡ இவர்களை எம்.பி.சி பட்டியலில் இருந்து நீக்கிவிட்டாலே போதும் ‡ எம்.பி.சியால் வன்னியர்களுக்கான நஷ்டத்தை குறைக்கலாம் இதை விட்டுவிட்டு‡
தனி ஒதுக்கீடு என்றும்; தராவிட்டால் ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் நடத்தியதைப் போல் ஆயிரம் மடங்கு போராட்டம் நடத்துவேன் என்பதெல்லாம்‡
அரசியல் பிழைப்பு நடத்த வன்னியரை ஏமாற்றும் பொய்ப்பிரச்சாரங்களே.
தனி ஒதுக்கீடு; தனி ஒதுக்கீடு என்கிறார்களே‡ எம்.பி.சி. இட ஒதுக்கீடான 20 சதவீதத்தில் வன்னியருக்கு எத்தனை சதவீதம் கிடைத்துவிடும்?
இது தொடர்பாக -
வடதமிழ்நாடு மக்கள் இயக்கத்தின் சார்பாக பிற்பட்டோர் நல ஆணைய தலைவர் நீதிபதி ஜனார்த்தனத்தை சந்தித்து  ‡ தனி ஒதுக்கீடு என்று வந்தால் குறைந்தது 15 சதவீத ஒதுக்கீட்டிற்காகவாவது நீங்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அப்போது அவர் சொன்னார்‡
அம்பாசங்கர் அறிக்கைப் படி எம்.பி.சி. பட்டியலில் உள்ள சாதிகளின் மக்கள் தொகையில் வன்னியர் சமூக மக்கள் தொகை எத்தனை சதவீதம் இருக்கிறதோ அத்தனை சதவீதம் தான் ஆணையத்தின் மூலம் பரிந்துரைக்க முடியும் என்றார்.
அம்பாசங்கர் கொடுத்துள்ள மக்கள்தொகை விபரம்‡ ஒரு ஃப்ராடு புள்ளி விபரம் என்று கோபமாகச் சொன்னோம். உடனே அவர்‡
அதுதான் உச்சநீதிமன்றம் வரை இட ஒதுக்கீட்டிற்காக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் புள்ளிவிபரம் ‡ அதை மீறி பிற்பட்டோர் நல ஆணையம் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
அப்படியானால்‡
நமக்கு லாபமா நஷ்டமா?
109 சாதிகளின் மக்கள் தொகையில் வன்னியர் சமூக மக்கள் தொகை - அம்பாசங்கர் மோசடிப் புள்ளி விபரப்படி சுமார் 55 சதவிகிதமே.
இதைவைத்து தனி ஒதுக்கீடு தந்தால் ‡ வெறும் 11 சதவிகிதமே கிடைக்கும் இப்போது 20 சதவீதத்தில் 10.17 சதவீதம் பெறுகிறோம். இந்த 1 சதவீதத்திற்காகவா - ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் நடத்தியதை விட ஆயிரம் மடங்கு போராட்டம் நடத்தப்போகிறார் பெரியவர் ராமதாசு?
வேண்டாம்-
அரசியல் பிழைப்புக்காக இன்னொரு போராட்டம் நடத்தி வன்னியர்களை வீணாக சாகடிக்கும் எந்த போராட்டத்திலும் ஈடுபட வன்னியர் சமூகம் தயாரில்லை.
இட ஒதுக்கீடு என்னும் மாயமான் வேட்டைக்காக வரலாறு காணாத சாலை மறியல் போராட்டத்தை வீணடித்து விட்டோம். அதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டாமா?
60 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு கேட்டு போராடியற்கு பதிலாக-
60 ஆண்டுகளாக தனிமாநிலக் கோரிக்கைக்காக போராடி இருந்தால்-
சலை மறியல் போன்ற வரலாறு காணாத ஒரு போராட்டத்தை தனிமாநிலக் கோரிக்கைக்காக நடத்தி இருந்தால் -
இந்நேரம் வடதமிழ்நாடு தனி மாநிலமாகி இருக்கும்.
தமிழ்நாட்டின் ஆட்சியுரிமை
வன்னியரின் பிறப்புரிமை
இட ஒதுக்கீடு என்னும் மாயமான் வேட்டையில் - கானல் நீரினில் தாகம் தணித்திடும் வேட்கையில் - வன்னிர் சமூகத்தின் சிந்தனையை மழுங்கடித்து; வன்னியர் சமூகத்தின் போராட்ட சக்தியை வீணடித்துவிட்டோம்.
எனவே பாதையை மாற்றுவோம்-
ஜனநாயகத்தில் பெரும்பான்மைக்கே ஆட்சி உரிமை என்ற அடிப்படையில்‡
தமிழ்நாட்டின் ஆட்சியுரிமை-
தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகமான வன்னியரின் பிறப்புரிமை என்பதை‡
ஒட்டுமொத்த வன்னிய சமூகத்தின் போர்முழக்கமாக்குவோம்.
வன்னியர் சமூகத்தின் ஆட்சியுரிமை என்பது ‡ தமிழ்நாட்டிற்கு வந்தேறி சிறுபான்மைகளின் பிடியிலிருந்து விடுதலை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி  : http://achamillai.org/ta/component/k2/item/12-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

Wednesday, May 16, 2012

தினமலருக்கு நமது பதில் - 1 - அச்சமில்லை பத்திரிக்கைக்கு நன்றி

வன்னியருக்கு உரியதே கவுண்டர் பட்டம்.
அதைக் களவாடி கெளரவம் தேடிக்கொண்டவர்கள் கொங்கு வேளாளர்களே .
இந்தத் திருட்டு வரலாற்றை மறைத்து வன்னியரை இழிவுபடுத்திய
தினமலர் சவுண்டியை எச்சரிக்கிறோம்.
 ந.இறைவன்

"வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா
கவுண்டர்களாக மாறிவரும் வன்னியர்கள்"
என்ற தலைப்பில் 29.1.2012 தினமலர் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையை எதிர்ப்பக்கத்தில் மறுவெளியீடு செய்துள்ளோம்.
பொய் செய்திகள் மூலம் கொங்கு வேளாளர்களை உயர்த்தியும்;
அதே பொய்ச்செய்திகள் மூலம் வன்னியர்களை இழிவுபடுத்தியும் தினமலர் கும்பலுக்கே உரிய வி­மத்தனத்தோடும்; இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
-
கொங்கு வேளாளர்கள் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒவ்வொரு பெரிய மனிதரின் சாவுக்கும் குறைந்தது பத்து லட்ச ரூபாய் அளவுக்கு தினமலரில் விளம்பரம் செய்கிறார்கள். இந்த சாவு விளம்பரத்திற்காக தினமலர் கிருஷ்ணமூர்த்தி கொங்கு வேளாளர்களை இந்திரன் சந்திரன் என துதிபாடிக்கொள்ளட்டும். கொங்கு வேளாளர்களை நக்கிக் கழுவிக் குடிக்கட்டும். அது தேவாமிர்தத்திற்கு மேலானது என்றுகூட பிரச்சாரம் செய்து கொள்ளட்டும். அதில் நமக்கு ஆட்சேபனை இல்லை.
கல்யாண வீட்டிலும் கருமாதி வீட்டிலும் அது சமர்ப்பயாமி; இது சமர்ப்பயாமி என பிச்சை எடுத்து; ஸ்வாஹா செய்தே வயிறு வளர்க்கும் சாதியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்திக்கு அதிலே மான அவமானம் எல்லாம் பார்க்க முடியாது என்பதும் நமக்கு தெரிந்ததுதான்.
ஆனால்-
யார் கவுண்டர்களாக மாறி மரியாதை தேடிக்கொண்டார்கள்; கவுண்டர் பட்டம் யாருக்கு உரியது என்ற வரலாற்றை மறைத்து - சாவு விளம்பரம் தருகிறார்கள் என்பதற்காக வன்னியர்களை இழிவுபடுத்தினால்-
சூரியனைப்பார்த்து நாய் குலைக்கிறது; குலைத்துவிட்டுப் போகட்டும் என எங்களால் சும்மா இருக்க முடியாது.
-
வன்னியர்களில் கவுண்டர் என ஒரு பிரிவும் உள்ளது. அந்தப் பிரிவினரே தங்களைக் கவுண்டர் எனக் கூறிக்கொள்கின்றனர். வன்னியர்களில் பிற உட்பிரிவினர் தங்களைக் கவுண்டர் என மாற்றம் செய்து கொள்வது இல்லை.
இதுவும் தினமலர் கட்டுரையின் வாசகங்களே.
கவுண்டர்தானே கவுண்டர் எனப் போட்டுக்கொள்கிறார்கள்? இதில் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் ஐடியா என்ன இருக்க முடியும்?
கவுண்டர் கவுண்டர் எனப் போட்டுக்கொள்ளாமல் வேறு எப்படிப் போட்டுக்கொள்ள முடியும் என்கிற பாமரனின் அறிவு கூட இல்லாத தினமலர் கிருஷ்ணமூர்த்தி எப்படி ஒரு பத்திரிகை ஆசிரியனாக இருக்க முடியும்? பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய ஆள் பத்திரிக்கை ஆசிரியனாக இருந்தால் இப்படித்தான் முட்டாள்தனமாக கட்டுரைகளை வெளியிடுவான்?

"வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் தங்கள் வீட்டுப்பெண்களை வைப்பாட்டிகளாக்கும் பார்ப்பனர்கள்" என தினமலர் பாணியில் தலைப்பிட்டு எங்களாலும் கட்டுரை எழுத முடியும்.
அந்தக் கட்டுரையில்-
சில சமூகத்தவர்களை சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் காலம் காலமாக இழிவுபடுத்தி வந்தவர்கள் பார்ப்பனர்கள். அந்த சூத்திரச் சாதிகளைச் சேர்ந்தவர்களும்; பஞ்சமர் சாதியைச் சேர்ந்தவர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆனால் போதும்; தங்கள் வீட்டுப்பெண்களை அனுப்பி; அந்த அதிகாரிகளை மயக்கி முடிந்தால் தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக்கிக் கொண்டும்; முடியாத போது அந்த அதிகாரிகளுக்கு வைப்பாட்டிகளாக இருக்க விட்டும் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள் பார்ப்பனர்கள் என்ற உண்மையின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதுவோம்.
அப்படி எழுதும் கட்டுரையில்-
எத்தனை தாழ்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு மாப்பிள்ளைகளாக்கிக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான பட்டியலையும் வெளியிடுவோம்.
இது ஒரு சாம்பிள்தான்.
இது போல் ஆயிரம் அழுக்குகள் இருக்கிறது தினமலர் கிருஷ்ணமூர்த்தியின் சாதியில். எழுதினால் தாங்க மாட்டீர்கள்.
தினமலர் கிருஷ்ணமூர்த்தி திருந்தட்டும் என்பதற்காக இந்த ஒரு சாம்பிளோடு விடுகிறோம்.
-
தன்மேல் இருப்பவன் தலையில் மிதித்தால் தயவாகக் குனிவதைக் கலையாகக் கற்றும்‡
தன் கீழ் இருப்பவன் தலையில் மிதிப்பதை தர்மமென வேதமாய் ஓதியும் வாழ்பவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் சாதியினர்.
ஆனால் நாங்கள் அப்படி அல்ல.
வலியார்கள் என்பதால் அநீதிக்குப் பணியவும் மாட்டோம். எளியார்கள் என்பதால் அவர் தலையில் ஏறி மிதிக்கவும் மாட்டோம்.
இதனால்தான்-
யாம் யார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம் என தலைநிமிர்ந்து வாழும் சமூகமாக இருக்கிறது வன்னியர் சமூகம்.
எனவே-
பிற சாதிகளுக்கு உரிய சாதிப்பட்டங்களை போட்டுக்கொண்டு கெளரவம் தேடிக்கொள்ளும் அவலம் வன்னியருக்கு என்றும் இருந்ததில்லை.
-
இனி-
தினமலர் கிருஷ்ணமூர்த்தியின் வி­மப் பிரச்சாரத்தின் யோக்கியதை என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.


விச­மம் 1 :   
வன்னியர்கள் பிறசாதியினர் மத்தியில் பழகாமல்
குறிப்பிட்ட இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வர்.
இந்திய அளவில் இந்தக் குற்றச்சாட்டுக்கு உரிய ஒரே சாதி உன் பார்ப்பன சாதி மட்டுமே.
நீயும் உன் சங்கராச்சாரிகளும் எல்லா சாதியினரோடும் தோள்மீது கைபோட்டு ஒட்டி உறவாடுகிறீர்களா?
தொட்டால் தீட்டு; பார்த்தால் தீட்டு என மக்களிடையே பேதத்தை உருவாக்கி;
சூத்திரன்; பஞ்சமன் என மக்களைப் பிளவுபடுத்தி இழிவுபடுத்தி யாரிடமும் ஒட்டாமல்; இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு ஒதுங்கி வாழும் சாதி உன்சாதி மட்டுமே.
ஆனால் நாங்கள் அப்படியல்ல-
எல்லா உழைக்கும் சாதிகளோடும் அண்ணன் தம்பிகளாகத்தான் பழகுகிறோம். சிறுபான்மைச் சேவை சாதிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும் இருக்கிறோம்!
உன்னிலிருந்தும்; உன் பத்திரிகையிலிருந்தும்; உன்சாதியிலிருந்தும் வீசிக்கொண்டிருக்கும் சாதி துவேச­ சாக்கடை நாற்றத்தை வன்னியன் மீது ஒட்டவைக்க முயலாதே.

விச­மம் 2 :
வறுமை காரணமாக வன்னியர்கள்
சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு.
யாரையடா சொன்னாய் அது..?
வறுமை காரணமாகத் திருடுபவனை விட வசதிக்காகத் திருடுபவன்தான் கொடியவன்.
வறுமை காரணமாக விபச்சாரத்தில் ஈடுபடுபவளை விட வசதிக்காக விபச்சாரத்தில் ஈடுபடுபவள்தான் கேடுகெட்ட விபச்சாரி. எல்லா சாதிக்காரனும் எல்லா இனத்துக்காரனும் எல்லா நாட்டுக்காரனும் வறுமையின் காரணமாக ஒரு சில சமயங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது உலக இயல்புதான்.
ஆனால் எல்லா சாதியும்; எல்லா இனமும்; எல்லா நாட்டுக்காரனும் வசதிக்காகத் திருட மாட்டான். ஒரு சில சாதிகள்; ஒருசில இனங்கள்; ஒரு சில நாடுகள் தான் வசதிக்காக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவவை.
இத்தகைய சாதிதான் கேடுகெட்ட சாதி.
இத்தகைய இனம்தான் கேடுகெட்ட இனம்.
இத்தகைய நாடுதான் கேடுகெட்ட நாடு...
வன்னிய சாதி இத்தகைய சாதியில் ஒன்றல்ல.
தினமலர் பார்ப்பானே... உன் சாதி எப்படி?
உழைக்காமலே பிறர் உழைப்பைச் சுரண்டிவாழ்வதுதான் உலகில் மிகப்பெரிய சமூகவிரோதச் செயல்.
காலம் காலமாக உழைக்காமலேயே பிறரை ஏமாற்றி பிறர் உழைப்பைச் சுரண்டி உண்டு கொழுத்து; சுகத்துக்கு மேல் சுகத்தை அனுபவித்து வாழும் ஒரு சாதி உண்டென்றால் அது உன் பார்ப்பன சாதி மட்டுமே! எனவே கேடுகெட்ட சமூகவிரோத சாதி பார்ப்பன சாதி மட்டுமே! அதிலே பிறந்த நீயா.... வறுமை காரணமாக வன்னியர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு என எங்களைக் கைநீட்டி குற்றம் சாட்டுகிறாய்?
வறுமையிலும் செம்மையைக் கடைபிடித்து வாழ்வதால்தான் இன்றைக்கு வன்னியர் சமுதாயம் ஏழ்மையான சமுதாயமாக ஆக்கப்பட்டிருக்கிறது.
இதெல்லாம் கேடுகெட்ட சமுதாயத்தில் பிறந்து கேடுகெட்ட பத்திரிகை நடத்திக்கொண்டிருக்கும் உனக்கு எப்படிப் புரியும்?

விச­மம் 3:
வன்னியர்கள் வம்புக்கும் (சண்டைக்கும்)
அடாவடிக்கும் (அடக்குமுறைக்கும்) பெயர் போனவர்கள்
என்ற எண்ணம் பிற சமூகத்தவர்களிடம் உள்ளது.
தனி ஒரு வன்னியரைப்பற்றி என் கருத்து இது என நீ எழுதியிருந்தால், தனிப்பட்டவர்களின் பிரச்சனை இது என உன் உளறலைப் பொருட்படுத்தியிருக்க மாட்டோம்.
ஆனால் நீயோ-
ஒட்டு மொத்த வன்னியர் சமூகத்தினரைப் பற்றிய பிற சமூகங்களின் கருத்து இது என எழுதி, ஒவ்வொரு வன்னியனையும் காயப்படுத்தி இருக்கிறாய்.
கல் எறிந்தது ஒரு பைத்தியக்காரன் என்றாலும் காயப்பட்டவனுக்கு வலி வலிதானே?
எனவே-
வன்னிய சமூகத்தைப் பற்றி இப்படி ஒரு கருத்தைச் சொல்ல உனக்கு மட்டுமல்ல நீ குறிப்பிடும் அந்த பிற சமூகங்களுக்கும் தகுதி இல்லை என்பதை உனக்கு நாங்கள் சொல்லிக் கொள்கிறோம்.
உன் பாணியில்-
உன் சாதியைப்பற்றி-
"வேசித்தனத்திற்கும்; விபச்சாரத்திற்கும்; கூட்டிக்கொடுப்பதற்கும் பெயர்போனவர்கள் பார்ப்பனர்கள் என்ற எண்ணம் பிற சாதியினரிடம் உள்ளது." என எங்களாலும் எழுதமுடியும். சம்மதமா? எழுதவா? சொல்.
கேடுகெட்ட பிறவியான நீ எங்களுக்கு ஏற்படுத்திய காயத்தின் ஆழத்தை உனக்கு உணர்த்துவதற்காக ஒட்டு மொத்த உன் சாதியின் குணஇயல்புகளை விமர்சிக்க வேண்டியுள்ளதே என்ற வலியோடுதான் இதை எழுத நேர்கிறது. புரிந்துகொள்.
-
வன்னியர்கள் வம்பு சண்டைக்கும்; அடாவடிக்கும் பெயர்போனவர்கள் என்ற எண்ணம் எந்த சாதிகளுக்கு இருக்கிறது என அந்த சாதிகளின் பெயர் குறிப்பிட்டு எழுதும் யோக்யதை உனக்கு இல்லை என்றாலும்-
எங்களைப்பற்றி அப்படி ஒரு கருத்தைச் சொல்ல எந்த சாதிக்கும் யோக்யதை இல்லை என சொல்வதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது.
-
மிகவும் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காக சாலை மறியல் போராட்ட்ததை நடத்தியது வன்னியர் சமூகம். அதிலே இருபதிற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொடுத்தோம். பல்லாயிரக்கணக்கான வழக்குகளைச் சந்தித்தோம். சொத்து சுகங்களை இழந்து ஓட்டாண்டிகள் ஆனோம்.
அதன் காரணமாக உருவான
மிகவும் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டால் நாங்கள் மட்டுமா பலன் பெற்றோம்?
எங்களோடு சேர்ந்து போராடாத; உயிர்பலி கொடுக்காத வழக்குகளைச் சந்திக்காத; சொத்து சுகங்களை இழக்காத வன்னியர் அல்லாத 107 சாதிகளும் அந்தப் பலனை அனுபவிக்கிறதல்லாவா?
இந்த 107 சாதிகளுக்கும் சேர்த்து காயங்களை சுமந்தவர்கள் வன்னியர்கள் என்பதற்கான ஆதாரமல்லாவா இது? நோவாமல் பிள்ளை பெற்றவள் கதையாக‡ நோவாமல் இந்த பலன் அனுபவிக்கும் சாதிகள்தானே இவை.
இந்த 107 சாதிகளில் ஏதாவது ஒரே ஒரு சாதியாவது வன்னிய சமூகத்திற்கு நன்றி தெரிவித்ததா?
நன்றி கூட சொல்ல வேண்டாம்...
எங்களை மரம் வெட்டிகள் என இழிவுபடுத்தாமலாவது இருந்தார்களா?
இன்று-
நாயுடு; ரெட்டி; முதலியார்; பிள்ளை; கொங்கு வேளாளர்; ஏன் பார்ப்பனர்கள் கூடத்தான் தங்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டுமென தங்கள் சாதிசங்கங்கள் மூலம் அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
எங்கள் சமூகத்தின் தியாகத்தால் உருவான மிகவும் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பங்கு கேட்கும்போது கூட எங்களை மரம் வெட்டிகள் என இழிவுபடுத்தத் தவறுவதில்லை அத்தனை சாதிகளும்.
எங்களைத் திட்டுவதில்-
நன்றி கெட்டவையாகவும்; பொறாமை உணர்வு மிக்கவையாகவுமே இருக்கின்றன அத்தனை சாதிகளுமே என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த சாதிகளுக்கு  எங்களைப் பற்றிக் கருத்து சொல்லும் யோக்யதை இல்லை.
-
முதுகுளத்தூரில் இமானுவேல் உட்பட பல தலித்துகள் வெட்டி சாய்க்கப்பட்டார்களே அந்த கொலைகள் வன்னியர்களால் செய்யப்பட்டதில்லை.
கீழவெண்மணியில் நாற்பதுக்கும் மேற்பட்ட தலித்துகளை உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடுமை வன்னியர்களால் செய்யப்பட்டதில்லை.
மேலவளவு பஞ்சாயத்து தலைவரும் அவரது உறவினர்களான தலித்துகளும் ஓடும் பேருந்தில் வைத்து பட்டப்பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்களே, அந்த கொடூரம் வன்னியர்களால் செய்யப்பட்டதல்ல.
தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் தலித் பெண்களையும் குழந்தைகளையும் தூக்கிப்போட்டு கொன்ற கொடுமை வன்னியர்களால் செய்யப்பட்டதில்லை.
பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகள் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து - அவைகளைப் பொதுத்தொகுதிகளாக்கும்வரை தேர்தலை நடத்த விடமாட்டோம் என அரசுக்கு சவால் விட்டு; 10 ஆண்டுகள் தேர்தலையே நடத்தவிடாத அடாவடித்தனங்கள் வன்னியர்களால் செய்யப்பட்டதில்லை.
திண்ணியம் என்ற ஊரில் ஒரு தலித்தின் வாயில் மலத்தை திணித்து திண்ண வைத்த காட்டுமிராண்டித்தனமான மனிதத்தன்மையற்ற இழிவு வன்னியர்களால் செய்யப்பட்டதல்லை.
உத்தாபுரத்தில் தலித்துகள் தங்கள் பார்வையில் படக்கூடாது என்பதற்காக; ஊர்பொது இடத்தில் (சீன நெடுஞ்சுவர் போல்) 150 மீட்டர் நீள நெடுஞ்சுவரை எழுப்பி தீண்டாமை வன்கொடுமையை செய்தவர்கள் வன்னியர்கள் இல்லை.
இத்தனையையும் செய்த சாதியை பெயர் குறிப்பிட்டு வம்புக்கும்; அடாவடிக்கும் பெயர்போன சாதி அது என சொல்ல வக்கற்று; இதில் எதுவுமே செய்யாத வன்னியர்களை வம்புக்கும் அடாவடிக்கும் பெயர்போன சாதியயன பிற சமூகங்கள் சொல்வதும் அதை வேதவாக்கு என உன் தினலர் பத்திரிக்கையில் எழுதும் நீயும்.. சேர்ந்து வன்னிய சமூகத்தின் ஒரு மயிரளவு தகுதியும் இல்லாதவர்கள் என்று சொல்வது அகங்காரத்தால் அல்ல. தகுதியால்; யோக்யதையால்..

    விச­மம் 4:
வன்னியர்களிடம் வரவு செலவு கொடுக்கல்
வாங்கல் கூடாது என்பதை எழுதப்படாத விதியாகப்
பிற சமூகத்தினர் கடைபிடிக்கின்றார்கள்.
நாங்கள் ஏமாறுபவர்கள்; ஏமாற்றுபவர்கள் அல்ல.
1.தென்தமிழ்நாட்டிலிருந்து திருட்டு ரயிலேறி சென்னைக்கு பிழைக்க வந்த சாதிகள் எல்லாம், நிலக்கிழார்களாக வாழ்ந்த வன்னியர்களை ஏமாற்றி; அவர்களின் வாழ்வாதாரமாக இருந்த நிலங்களை அபகரித்து மோசடி செய்து கோடீஸ்வரர்களாகிச் சென்னையிலே கோட்டை கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். நில உடைமையாளர்களாக மிராசுதாரர்களாக வாழ்ந்த வன்னியர்கள்; வந்தேறி கொள்ளைக்காரர்களிடம் தங்கள் நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு சொந்த மண்ணிலேயே அநாதைகளாக அகதிகளாக அழிந்து திரிகிறார்கள்.நாங்கள் எங்கள் சின்னவயதில் வீட்டுக்கு வீடு பேப்பர் போட்டுக்கொண்டு இருந்தோம் என பேட்டி கொடுக்கும் வி.ஜி.பி. சகோதரர்களுக்கு‡
சென்னையும் அதன் சுற்றுப்புறங்களிலும் இன்று பல ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் சொந்தம்.
அவர்கள் உழைத்து சம்பாதித்ததா இந்த சொத்துக்கள்?
எங்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களே அதில் ஏராளம்.
-
முன்னாள் காங்கிரசு கட்சியின் தலைவர் தங்கபாலு வன்னியர்களிடமிருந்து பல நூறு ஏக்கர் நிலங்களை ஏமாற்றிப் பறித்து ‡ அதிலே பொறியியல் கல்லூரி கட்டிக்கொண்டிருக்கிறார் என்பது தொடர்பான ஏராளமான புகார்கள் எங்களிடம்  உண்டு.
இப்படி-
எங்களை ஏமாற்றிய சாதிகளை எல்லாம் கொடுக்கல் வாங்கலுக்கு உகந்த நாணயமான சாதிகள்? நாங்கள் தான் நாணயம் கெட்ட சாதியா?
எங்கள் மக்களைக் காப்பாற்றும் என்று நம்பிய எங்கள் தலைமை சாவியாய்‡ பதறாய் போனதால் - எங்களை குத்துக்கல் என்று நினைத்துக்கொண்டு கண்ட நாய்களும் கால்தூக்கி மூத்திரம் அடித்து எங்களை இழிவுபடுத்துகிறது என்பதைத் தவிர இந்தச் சமூகம் நாணயம் கெட்ட சமூகம் என ஆதாரபூர்வமாக எவனாலும் சொல்ல முடியாது.
பிற சாதிகளிடம் வரவு செலவு; கொடுக்கல் வாங்கல் வைத்து வன்னியர்கள் ஏமாந்ததும்; ஏமாற்றப்பட்டதுமே அதிகம். நாங்கள் ஏமாந்தவர்கள் ஏமாற்றுகிறவர்கள் அல்ல.
எனவே-
பிற சமூகத்தவர்கள் எங்களிடம் வரவு செலவு செய்வதையும் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வதையும் கூடாது என நிறுத்திக்கொண்டால் எங்களுக்கு லாபமே அதிகம். நஷ்டம் என்பது குறைவானதே.
எனவே இதனை வரவேற்கிறோம்!
வன்னியர்களே மற்ற சமூகத்தவர்களிடம் வரவு; செலவு; கொடுக்கல் வாங்கல் வைத்து ஏமாறாதீர்கள் என்பதை விழிப்புணர்வுப் பிரச்சாரமாக இனி செய்வோம்.
ஏமாற்றியவர்களை விரட்டியடித்து வன்னியர் சமூகம் நிமிரும்.

























வன்னியர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கும் போராளிகள் என்பதற்கான அடையாளமே திரெளபதி வழிபாடு. - பெ.பழநிச்சாமி



மகாபாரதக் கதையின் நாயகியான திரெளபதி அக்னியில் அவதரித்தவர் என்பது புராணவழி வரலாற்றுச் செய்தியாகும். திரெளபதியைப் போலவே வன்னியர்களும் அக்னியில் தோன்றியதாக வன்னிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆந்திரப் பகுதியில் இன்றும் வன்னியர்கள் அக்னி குல சத்ரியர் என்றே அழைக்கப்படுகின்றனர்.
1929இல் சென்னை மாகாண சட்டமன்றத் தீர்மானம் வாயிலாக தமிழ்ப்பகுதிகளில் வன்னியர் குல சத்ரியர் என்றும் ஆந்திரப் பகுதிகளில் அக்னி குல சத்ரியர் என்றும் வழங்க அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைத் தாண்டி வன்னியர்களை தனித்து அடையாளப்படுத்துவது வன்னயர்களிடத்தில் மட்டுமே உள்ள திரெளபதி வழிபாடும் அதையயாட்டிய மக்கள் கலை வடிவமான தெருக்கூத்தும் ஆகும். வன்னியர்கள் திரெளபதி வழிபாட்டின் பெரும்பங்கை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருப்பதற்கு
திரெளபதியும் வன்னியர் குல சம்புமகரி´யைப் போல் யாகத்தீயில் அவதரித்தது.
வன்னியர்கள் அர்ச்சுனன் பிறந்த பங்குனி உத்திரம் நட்சத்திரத்தை உருத்திர வன்னிய மகாராஜா விழாவாகக் கொண்டாடுவது.
பாண்டவர்கள் 12 வருட வனவாசத்திற்கு பிறகு 1 வருட தலைமறைவு வாழ்க்கையின் போது பாண்டவர்களின் ஆயுதங்களை; வன்னிமரத்தில் மறைத்து வைத்து கொடுத்தது.
தமிழ்நாட்டில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள காவிரிக்கு வடக்கில் உள்ள மாவட்டங்களில் திரெளபதி வழிபாடும் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட தெருக்கூத்தும் இன்றளவும் உயிரோட்டத்துடன் காணப்படுகிறது, இவைகள் காரணங்களாக இருக்கலாம்.
*
இந்திய அளவில் எடுத்துக்கொண்டாலும் மகாபாரத யுத்தம் நடந்த பகுதிகளான குருசேத்திரம் அஸ்தினாபுரம் ஆகியவை வட இந்தியாவில் இருந்தாலும் சுட அங்குள்ள ராஜபுத்திரர்களை விடவும், ஜாட்டுகளை விடவும் வன்னியர்களே திரெளபதி வழிபாட்டையும் அதனோடு சேர்த்து பாரத கூத்துக்கலையையும் பாதுகாத்து வருகின்றனர். புராணக்கதைகள் தமிழ்நாட்டில் செவி வழி இலக்கியமாக எவ்வளவு காலமாக இருந்தது என்பது கணிக்க முடியவில்லை. ஆனால் சிலப்பதிகாரம் மற்றும் பெருந்தேவனார் இயற்றிய பாரதம் ஆகியவற்றில் பாரத கதையின் தாக்கம் தென்படுகிறது.
திரெளபதிக்கு மூலக்கோயில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ள மேலச்சேரி திரெளபதி அம்மன் கோயில்தான் தமிழக திரெளபதி அம்மன் கோயில்களுக்கெல்லாம் மூலமானது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலச்சேரியில் உள்ள திரெளபதி அம்மனின் காவல் தெய்வமாக போத்துராஜா உள்ளதாலும் அருகில் உள்ள சிங்காவர் ரங்கநாதர் மற்றும் மேலச்சேரி பல்லவேஸ்வரம் புடைசிற்பக் கோயில்கள் பல்லவர்களால் கட்டப்பட்டதாலும் சுமார் 1300 ஆண்டுகளுக்கும் பழைமையானது மேலச்சேரி திரெளபதி அம்மன் ஆலயமாகும். சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆல்ப் யஹலிடிபெடல் திரெளபதி வழிபாடு குறித்து ஆய்வு செய்தபோது மொத்த திரெளபதி அம்மன் கோயில்களில் 90%க்கும் மேல் வன்னியர்கள் செறிவாக வசிக்கும் தென்னாற்காடு, வட ஆற்காடு, செங்கற்பட்டு, சேலம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை மற்றும் பெங்களூர், கோலார், சித்தூர்நெல்லூர் பகதிகளிலேயே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரெளபதி அம்மன் கோயில் பூசாரிகளும் நிர்வாகிகளும் 90% வன்னியர் வசமே உள்ளது. 1888‡இல் டாக்டர் குத்சேவ் ஒப்பர்ட் பாரத பூர்வ குடிகள் என்னம் நூலில் பக்கம் 97‡இல் தென்னாற்காட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில்கள் மட்டும் அல்லாது அர்ஜூனனுக்கும் நாக கன்னி (உலுபி)க்கும் பிறந்த அரவான் பாரத யுத்தத்திற்கான முதல் களப்பலியானதன் நினைவாக திருநங்கைகள் கொண்டாடும் கூத்தாண்டவர் கோயில் இந்தியாவிலேயே விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ளது.
ஒவ்வொரு வருடமும் சித்ராபவுர்ணமி நாளில் திருநங்கைகள் திருவிழா மிகப்பெரிய அளவில் நடக்கிறது. அந்த கோயிலும் வன்னியர் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 45 திரெளபதி அம்மன் கோயில்கள் உள்ளன. இது தவிர பாஞ்சாலியம்மன் கோயில்களும் உள்ளன. சேலம் மாவட்டத்தை ஒப்பிடும்போது தருமபுரி ‡கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திரெளபதி வழிபாட்டின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. அதியமானின் சங்ககால ஆட்சியில் தகடூர் என்று அழைக்கப்பட்ட ஊர் பாரதக் கதையின் தாக்கத்தினால் தர்மரின் பெயரால் தர்மபுரி ஆனது. அதேபோல் பாரதப் போரின் சூத்திரதாரியான கிருஷ்ணனின் பெயரால் கிருஷ்ணகிரி ஆனது. செஞ்சியிலும் மேலச்சேரி திரெளபதி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மலையின் பெயரும் கிருஷ்ணகிரி என்றே அழைக்கப்படுகிறது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள செல்லக்குட்டப்பட்டி, வடகாசி, பெண்டர அள்ளி (அரசம்பட்டி) வையம்பட்டி, கொல்லப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள திரெளபதி அம்மன் கோயில்கள் வன்னியர்கள் மட்டுமே குலதெய்வமாக வணங்கும் கோயில்களாகும். மேலும் பாலக்கோடு வட்டத்தில் புலிக்கரை கோயிலூரில் உள்ள குந்தியம்மன் கோயிலும் வன்னியர்களின் குலதெய்வக் கோயில்தான்.  தருமபுரி வட்டம் உங்கார அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குளியனூரில் துரியோதனனை (பெரியாண்டவர்) குலதெய்வமாக வணங்கும் வன்னியர்களும் உள்ளனர். பாரதக் கதையோடு தொடர்புடைய துர்வாச முனிவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையிலும் அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிற்கு சூலாமலையிலும் கோயில்கள் உள்ளன.
இவ்வாறாக திரெளபதி வழிபாடானது வன்னியர்களிடம் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. தமிழக நாட்டுப்புறக் கலைகளில் பிரதான தெருக்கூத்து வடதமிழகத்தில் வன்னியர் செறிவாக வாழும் திரெளபதி அம்மன் கோயில்கள் அதிகமிருக்கும் பகுதியிலேயே பெரும்பாலும் கோடைகாலங்களில் நிகழ்த்தப்படுகின்றன.
தமிழக வரலாற்றில் வாதாபி சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்மன் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரத்தை முற்றுகையிட்டுள்ளார். கோட்டையை எவ்வளவோ முயற்சித்தும் தகர்க்க முடியவில்லை. பிறகு சமாதானம் பேசி மகேந்திரவர்மனுடன் உறவாடிவிட்டு திரும்பிச் செல்லும் வழியில் மக்களையும் கால்நடைகளையும் அழித்ததோடு; விளைந்த பயிருக்கும் தீங்கு விளைவித்து கொன்றுவிட்டதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. அதற்கு பழிவாங்கும் விதமாக புலிகேசியை வென்று வாதாபியை அழிக்க பெரும்படை திரட்ட வேண்டியதாயிற்று அப்பொழுதிருந்தே பாரத்தை படித்து தர்மத்திற்காக போராட என மக்களிடம் போர்க்குணத்தை விதைக்க திரெளபதி அம்மன் கோயில்களும் அதைச் சேர்த்து பாரதம் படித்ததாலும் தெருக்கூத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. "பாரதக் கதைபடிப்பதற்கு பல்லவர் காலத்தில் கூத்தர் மானியங்கள் வழங்கப்பட்டதாக கூரம் செப்பேடுகள் மூலம் அறிகின்றோம்." வாதாபியை நரசிம்மவர்மன் வென்ற வரலாற்று நிகழ்வுதான் வன்னியர் புராணம் என்ற கதையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் படைகளாக்கி அதாவது தங்களை எதிர்க்கும் பகைவர்களை வெல்ல உள்ளத்தில் எதிர்ப்பு மனப்பான்மையை உருவாக்குவதற்காகவே தெருக்கூத்துக்கலை பாரதக் கதை வழியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய சினிமா கவர்ச்சி யுகத்திலும் தெருக்கூத்து ஓரளவேனும் உயிருடன் இருக்கிறது என்றால் அதற்கு வன்னியர்களே காரணம்.

ஆகவே திரெளபதி வழிபாடு வன்னிய குலத்தினர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கும் போராளிகள் என்பதற்கான அடையாள வழிபாடாகவும். தெருக்கூத்து வடதமிழக தேசியக்கலையாகவும் இருக்கின்றன.

பெரும்பாலும் வன்னியர்களிடம் மட்டுமே திரெளபதி வழிபாடு இருக்கிறது என்பது இக்கட்டுரை மூலம் நிறுவப்பட்டுள்ளது. வன்னியர்கள் திரெளபதி வழிபாடு செய்வதற்கு என்ன காரணம் என்பதற்கு விரிவான ஆழமான
ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

நன்றி : http://achamillai.org/ta/component/k2/item/11-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF

Tuesday, May 15, 2012

மயிலை சீனிவாசன் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும்





பாவேந்தர் பாரதிதாசனால் இப்படி பாராட்ட பட்ட மயிலை சீனி வேங்கடசாமி நாயகர் அவர்களுக்கு அவர் வாழ்ந்த சென்னை மைலாப்பூரில் ஏதாவது நினைவு சின்னங்களை வைத்தார்களா இதுவரை ஆட்சி செய்த முதல்வர்கள்? வன்னியருக்கு எதிரான சாதி வெறி தானே இதற்க்கு காரணம். இதுவே அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால் வைத்திருப்பார்கள்...







Thursday, May 10, 2012

400 வருட பழமை வாய்ந்த குதிரை யானை பரிவார சிலைகள்

தமிழ் நாட்டில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகரை அடுத்து செந்துறைக்கு அருகில் உஞ்சனை பஞ்சாயத்தில் உள்ள் அருள்மிகு பெருவிழியப்பன் ,அருள்மிகு பாவயி அம்மன் ,அருள்மிகு கருப்பண்ண சுவாமி ,அருள்மிகு ஐய்யனார் சுவாமி கோவிலில் உள்ள குதிரை யானை பரிவார சிலைகள் .

இந்த கோவில் சோழர் வழி வந்த வன்னிய குல சத்திரியர்களுக்கு சொந்தம்.





ஆதித்ய சோழன் பள்ளிப்படை



கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புண்ணியத்தலம் காளஹஸ்தி அதன் அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்ற ஊர். இப்பொழுது ஆந்திர தேசத்தில் இருக்கிறது சோழர்காலத்தில் கட்டிய கோதண்ட ராமேச்வரம் என்னும் ஆதித்தேச்வரர் கோயில் அவ்வூரில் இருக்கிறது. வரலாறு படைத்த ஒரு மிகப்பெரிய சோழப் பேரரசனுடய கோயில் இது. இதன் வரலாறு மிகவும் சுவயானது.
தமிழ்நாட்டின் வடபகுதியை மிகப் பெரும் பேரரசாக 500 ஆண்டுகள் ஆண்டவர்கள் பல்லவர்கள். அந்தப் பல்லவப் பேரரசுக்கு இன்றைக்கு சரியாக 1100 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றுப்புள்ளி வைத்தவன் அந்த சோழப் பேரரசன். அவனுக்கு ஆதித்த சோழன் என்று பெயர். அவன் ஏறக்குறைய கி.பி. 887ல் பல்லவ அரசன் அபராஜிதன் என்பவனை சண்டையில் வீழ்த்தி தொண்டை நாட்டை அதாவது காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு முதலிய பகுதிகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் "தொண்டை நாடு பாவிய சோழன்" என்று பட்டம் பூண்டான். அதோடு தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி முடிந்துவிட்டது. 
 
ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்கு பொன் வேய்ந்தான். சோழ சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் உன்னதக்கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான். 
 
அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில் சாமாதிக் கோயிலை "பள்ளிப்படை" என்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின் அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றி பல செய்திகளை அறிகிறோம். 
 
ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின் பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105 கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும் வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்கவேண்டும். இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். "பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும் இருக்கவேண்டும். "தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள் இருநூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று அறிகிறோம்.
இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் அளந்தனர். 
 
இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும் இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம் இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல் கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் கொடுக்கப்பட்டது. 
 
இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக் கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். 
 
சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?
இப்போழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான்.

சோழர்களின் வாரிசுகள் ( Chola's Descendants )

சோழர்களின் வாரிசுகள் ( Chola's Descendants ) 

 

சோழர்கள் தமிழகத்தின் தொன்மையான மூன்று அரச குடும்பங்களில் ஒருவர். சூரிய குலத்தோர் என்று இடைக் கால இலக்கியங்களிலும், ஞாயிறு குலத்தோர் என்று சங்க இலக்கியங்களாலும் அறியப் பட்டவர்கள். போர்க் களத்தில் தோல்வியே காணாத ஏழு இந்திய அரசர்களில் மூவர் சோழ அரசர்கள்.
விஜயாலயச் சோழனில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழகத்தை ஆண்ட வம்சம். இந்திய அரசர்களில் முதலும் கடைசியாகவும் வெளிநாட்டின் மீது  படையெடுத்துச் சென்று வென்ற வம்சம்.
இந்த வம்சத்தின் வாரிசுகள் இப்போது இருக்கிறார்களா?
இருந்தால் எங்கு இருக்கிறார்கள்?
பல விதமான சாதி அமைப்புகள் இப்போது சோழர்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவர்களில் எந்த இனத்தில் உண்மையாக சோழர்கள் இருக்கிறார்கள்?
அரச இனங்களை ஒரு சாதி அமைப்புக்குள் அடைக்க நினைத்தால் அது சரியாக இருக்குமா?
அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் வம்சம் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்களே, அது உண்மையா?
அப்படியானால் இப்போது யாரேனும் சோழர்களின் வாரிசுகள் இருந்தால் அவர்கள் சாளுக்கிய சோழர்களாகத்தான் இருக்குமோ?
 சோழர்களின் வாரிசுகள் என நிரூபிப்பதற்கு DNA ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?
இந்தக் கேள்விகள் வரலாற்றில் ஆர்வமுடைய அனைவருக்குமே இருக்கக் கூடிய கேள்விகள்.
இந்தக் கேள்விகளுக்கான விடை தேடலே இந்தக் கட்டுரை.
உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமெனில், கிடைக்கின்ற ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டுமே தவிர, ஒரு சார்புடையதாய் உணர்ச்சி பூர்வமாக முடிவு எடுக்கக் கூடாது.
முதலில் அரச இனங்களை ஒரு சாதி அமைப்புக்குள் அடைக்க நினைத்தால் அது சரியாக இருக்குமா
அவ்வாறு முயற்சித்தால் அதனால் குழப்பமே மிஞ்சும் என்றக் கூற்று உண்மையா என்றுப் பார்ப்போம்.
தனிப்பட்ட முறையில் சோழர்களை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைப்பதில் யாருக்கும் உடன்பாடு இருக்காது. அவர்கள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அனைத்து சாதியினரும் அவர்களை சொந்தம் கொண்டாடுவது சந்தோஷமான விஷயமே. தஞ்சைப் பெரிய கோயில் கட்டுவதில் ஈடுபடாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? தமிழர்களின் மக்கள் தொகை ஒரு கோடியைக் கூடத் தாண்டாத கால கட்டத்தில் ஒன்பது லட்சம் பேர் கொண்ட கட்டுக்கோப்பான வலிமை வாய்ந்த ராஜேந்திர சோழரின் படையில் இடம் பெறாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? சோழர்கள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்றாலும், அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என ஆராய வேண்டுமெனில், இப்போது உள்ள சமூக அமைப்பில் அவர்கள் ஏதேனும் ஒரு சாதி அமைப்புக்குள்ளேயே இருந்தாக வேண்டும்.
எனவே சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்களை ஒவ்வொன்றாய் ஆராய்வோம்.
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவெனில், இப்போதுள்ள ஜாதி அமைப்பே 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததா என்றால் அது சந்தேகமே. உதாரணமாக தற்போது தஞ்சைக் கள்ளர்கள் மற்றும் வன்னியகுல க்ஷத்ரியாவிலுள்ள பொதுவானக் குடும்பப் பெயர்கள்(மழவரையர், பழுவேட்டரையர், உடையார்,கண்டியத்தேவர்,….).
எனவே குடும்பப் பெயரை வைத்தே இவர்களை அடையாளம் காண இயலும். சோழர்களின் குடும்பப் பெயர் சோழர் என்றுதான் இருக்க வேண்டுமே தவிர தேவர் என்றோ உடையார் என்றோ அல்ல என்ற அடிப்படை விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்கள்:
1. தேவேந்திர குல வேளாளர்
2.
முக்குலத்தோர்
3.முத்தரையர்
4 .
பார்க்கவ குலத்தோர்
5 .
தஞ்சைக் கள்ளர்கள்
6 .
வன்னிய குலச் சத்ரியர்
1 தேவேந்திர குல வேளாளர்:

                                                      
இவர்கள் பள்ளர் அல்லது மள்ளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வசிப்பது பெரும்பாலும் தென் தமிழகத்தில். தங்களைச் சோழர்கள் என்று அழைப்பதற்கு எந்தத் தனிப்பட்ட ஆதாரமும் இவர்களிடம் இல்லை. பள்ளர் அல்லது மள்ளர் என்றப பட்டத்தை வைத்துக்கொண்டு இவர்கள் சேர,சோழ,பாண்டிய ஆகிய மூன்று வேந்தர்களுக்கும் உரிமை கோருகின்றனர். இவர்களுடைய வாதம் ஆதாரமற்றது, வலுவில்லாதது. 
2 முக்குலத்தோர்:

                                     
முக்குலத்தோர் சோழர்களுக்கு உரிமைக் கோருவது, சோழர்கள் பயன்படுத்திய கூடுதல் பட்டமான தேவர் என்பதை வைத்தும் அவர்களின் கல்வெட்டுக்களில் களவர் என்ற சொல் காணப்படுவதை வைத்தும். ஆனால் தேவர் என்றப் பட்டம் சோழர்களுக்குத் தாய் வழிப் பட்டமாக கண்டியத்தேவர் வம்சத்திலிருந்து வந்தது. இந்தக் கண்டியத்தேவர் பட்டம் தஞ்சைக்கள்ளர் மற்றும் வன்னிய குல சத்ரியாவில் உள்ளது. களவர் என்பது சோழர்களைக் குறிப்பதாகக் கொண்டால், அது களம்(போர்க்களம்) காண்பவர் என்றப் பொதுவானப் பொருளைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் அல்லது தஞ்சைக் கள்ளர்களைக் குறிப்பதாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டக்கூடிய தேவர் என்றப் பட்டம் தஞ்சைக் கள்ளர்கள் மற்றும் வன்னிய குல சத்ரிய வகுப்பைச் சேர்ந்தப் பட்டப் பெயர் என்பதாலும்,களவர் என்று குறிப்பது களம் காண்பவர் என்றப் பொதுவானப் பொருள் தருவதாகவோ அல்லது தஞ்சைக் கள்ளர்களைக் குறிப்பதாகவோ இருப்பதாலும்,இவர்கள் பெரும்பான்மையாக வசிப்பது தென் தமிழகத்தில் என்பதாலும், சோழர்களுக்கான இவர்களின் உரிமைக் கோரல் வலுவற்றதே.
 
3.முத்தரையர்:
                                இவர்களுடையப் பெயரே போதுமான அளவுக்கு விளக்கம் கொடுத்து விடுகிறது. அரையர் என்றால் சிற்றரசர் அல்லது குறுநில மன்னர்கள் என்று பொருள். இவர்களும் வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் மூவேந்தர்களுக்கும் உரிமைக் கோருகின்றனர். இவர்கள் மூவேந்தர்களின் வாரிசு என்பது உண்மையானால், தங்களை அரையர் என்று அழைத்துக் கொள்வதில் திருப்தி அடைந்துவிடுவார்களா என்பது சந்தேகமே. இவர்கள்  மூவேந்தர்கள் யாருக்காவது உரிமை கோர வேண்டுமென்றால் அது பாண்டியர்களாக இருக்கலாமே தவிர சோழர்கள் அல்ல. 
4 . பார்க்கவ குலத்தோர்:

                                        
ராஜராஜ சோழன் மற்றும் அவருக்குப் பின் வந்த சோழர்கள் பயன் படுத்திய உடையார் என்றப் பட்டம் பார்க்கவ குலத்தைச் சேர்ந்தது என்பதை வைத்து இவர்கள் சோழர்களுக்கு உரிமை கூறுகின்றார்கள். உடையார் என்றப் பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டமாகும். ராஜராஜனின் தாயார் மலையமான் வகுப்பைச் சேர்ந்தவர்.  உடையார் என்பது இந்த மலையமான் வகுப்பினரின் ஒருப் பட்டம். தற்போது மலையமான் வகுப்பினர் தஞ்சைக் கள்ளர்கள்,வன்னிய குல க்ஷத்ரியா மற்றும் பார்க்கவ குலம் ஆகிய மூன்று இனங்களிலும் உள்ளனர். எப்படி இருந்தாலும் இதுத் தாய் வழிப் பட்டமே. அவர்கள் சோழர்களுக்குப் பெண் கொடுத்தவர்கள் அவ்வளவே.
5 . தஞ்சைக் கள்ளர்கள்

                                     
கள்ளர்கள் என்றால் கருப்பு நிறத்தவர், போருக்கு முன்பு ஆநிரைக் கவர்வோர், போர்க்களம் புகுவோர்,  திருட்டுத் தொழில் புரிவோர் என்று வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு. தென் தமிழகத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் இனக் கள்ளர்கள் இவை அனைத்தும் தங்களுக்குப் பொருந்தக் கூடியது எனக் கூறுகின்றனர். ஆனால் தஞ்சைக் கள்ளர்கள் தாங்கள் போர்த் தொழில் புரிவோர் என்றப் பிரிவைச் சேர்ந்ததாகக் கூறுகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் பலவகையானப் பட்டங்களைப் பார்க்கும் போது, இதை உண்மையாகக் கருதலாம். முக்குலத்தோர் இவர்களைத் தங்களில் ஒருவராகக் கூறிக் கொண்டாலும் இவர்கள் தங்களைத் தனிப் பிரிவாகவேக் கூறிக் கொள்கின்றனர்.அடிப்படையில் இவர்கள் முக்குலத்தோர் பிரிவில் இருந்து வந்தவர்கள் இல்லை. இவர்களுக்கும் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தத் தென் தமிழகத்துக் கள்ளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.மரபியல் படியும் இவர்களுக்கும் தென் தமிழகத்து முக்குலத்தோர் இனக் கள்ளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் மரபியல் படி இவர்களுக்கும் வன்னியர்களுக்கும் தொடர்பு உள்ளது. இவர்கள் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர்களுடன் மண உறவு கொள்வார்களா என்பது சந்தேகமே.ஆனால் இவர்கள் வன்னியர்களுடன் மண உறவுக் கொள்கின்றனர். சோழர்கள் பயன் படுத்திய தேவர்,உடையார் என்றப் பட்டங்களும் இவர்களுக்கு உண்டு. சோழகன் என்றப் பட்டப் பெயரும் இவர்களிடம் இருந்தாலும் சோழகன் என்பது கள்ளரினத்தின் ஒரு காட்டுச் சாதி என்பதால் இவர்களில் சோழ வம்சத்தினரைத் தனித்துப் பார்ப்பது அவசியம். இவர்களிடம் இருக்கும் சோழ அல்லது சோழங்க என்று ஆரம்பிக்கும் மற்றப் பட்டங்கள் சோழ கங்கன், சோழங்க தேவர்சோழங்க நாட்டார், சோழங்க தேவ அம்பலக்காரர் என்பவை. இதில் சோழ கங்கர் என்பது சோழர்கள் கங்க நாட்டை வென்ற பிறகு அந்த நாட்டை ஆண்ட சோழர்களின் பிரதிநிதிக்குக் கொடுக்கப்பட்டப் பட்டம். இவர்கள் சோழர்களின் ரத்த சம்பந்தம் உடையவராகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். சோழங்க தேவர், சோழங்க நாட்டார் என்றப் பட்டமுடையவர்களைப் பார்த்தோமானால், அவர்களுடைய உண்மையானப் பட்டமென்பது தேவர், நாட்டார் என்று இருந்திருக்கக் கூடும். சோழங்க என்றப் பெயர் முன்னால் இணைந்திருப்பதற்கு வேறு காரணம் இருக்கக் கூடும். உதாரணமாக சோழங்க என்பது தாய் வழிப் பட்டம் அல்லது மன்னர்களின் படைவீரர்க்கு மன்னரே அவர்தம் பெயரையே கொடுப்பது போன்று ஏதேனும் ஒரு காரணம் இருக்கலாம். இதே போன்று சோழங்க ஆரச்சி (solangaarachchi )  என்ற சிங்களவருக்கு உள்ளப் பட்டத்தையும் பார்த்தோமானால் இது அச்சு அசலாக சோழங்க நாட்டார் என்பதற்கு இணையான சிங்கள வார்த்தை. ஆரச்சி என்ற சிங்கள வார்த்தைக்கு கிராமத் தலைவர் அல்லது நாட்டார் என்று பொருள். சோழங்கன் என்ற ஊர் இலங்கையில் இருப்பதையும் சோழர்கள் சில சமயங்களில் சிங்கள இளவரசிகளை மணந்தார்கள் என்பதையம் கவனத்தில் கொள்ள வேண்டும். தஞ்சைக் கள்ளர்களின் இருப்பிடம் தஞ்சை என்பதும் இவர்களின் வாதத்திற்கு வலு சேர்க்கிறது. சோழர்களின் குடும்பப் பெயரான சோழன், சோழங்கன்( அங்கன் என்றால் மகன் என்று பொருள்) என்பவை இவர்களிடம் இருப்பதாகக் கூறினாலும் உண்மையில் ஆராயும் போது அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. சிலர் சோழகன் என்பது தான் சோழன் என்றும் சோழ கங்கன் என்பது தான் சோழங்கன் என்றும் கூறுகின்றனர். ஆனால் சோழகன் என்பதற்கும் சோழ கங்கன் என்பதற்கும் உள்ள பொருளை முன்பேப் பார்த்தோம். இருப்பினும் சோழன் அல்லது சோழங்கன் ஆகியப் பட்டங்கள் இவர்களிடம் இல்லை என்பதை நூறு சதவீதம் வரை உறுதிப் படுத்தப் படாத வரை நாம் ஏதும் முடிவெடுக்க இயலாது. இவர்கள் சோழ வம்சத்திற்கு உரிமை கோருவது ஆராயத் தக்கது.

6.வன்னிய குல க்ஷத்ரியர்:
                                                சோழர்கள் பயன் படுத்திய தேவர்,உடையார் என்றப் பட்டங்களுடன் சோழர்களின் குடும்பப் பெயரான சோழனார், சோழங்கனார் போன்றப் பட்டங்கள் இவர்களுக்கு உண்டு. வசிப்பிடம் கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் மற்றும் இதற்கு இடைப்பட்டப் பகுதிகள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் சோழர்களுக்கு வழங்கப்படும் முதல் மரியாதை இப்பொழுதும் பிச்சாவரம் சோழனார்களுக்கு வழங்கப்படுகிறது. சோழர்களில் கடைசியாக ஆட்சி புரிந்தது குலோத்துங்கன் வழி வந்த சாளுக்கிய சோழர்களே. இவர்கள் நேரடிச் சோழர்கள் போன்று சோழனார் பட்டதைப் பயன் படுத்தினாலும், அவர்களைப் போன்று மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவுக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மழவரையர், பழுவேட்டரையர் போன்றவர்கள் அவர்களுக்கு சகோதரர்கள் போன்ற முறையாகக் கருதப்படுவார்கள்.பிச்சாவரம் சோழனார்களும் மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவுக் கொள்வதில்லை. இவர்களின் மண உறவுப் பெரும்பாலும் உடையார் பாளையம் ஜமீன்களுடனே.  ஆனால் கங்கை கொண்ட சோழ புரத்திற்கு அருகில் வசிக்கும் சோழனார்/சோழங்கனார் என்றப் பட்டமுடையவர்கள் மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவு வைத்துள்ளனர். சோழர்களின் கடைசித் தலை நகரம் கங்கை கொண்ட சோழ புரம் என்பதிலிருந்தும், அது கிட்டத்தட்ட 200  ஆண்டுகளாகத் தலை நகராக இருந்ததை வைத்தும் சோழர்களின் இருப்பிடம் இந்தப் பகுதியிலேயே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். எனவே இங்கு வசிக்கும் சோழனார்/சோழங்கனார் என்றப் பட்டமுடையவர்களே நேரடிச் சோழர்களின் வாரிசுகளாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.


சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்கள்
வசிப்பிடம்
சோழர்கள் பயன் படுத்தியப் பட்டங்கள்
சோழர்களின் குடும்பப் பெயர்
சோழர்களுக்கான உரிமை கோரல்
1. தேவேந்திர குல வேளாளர்
தென் தமிழகம்
இல்லை
இல்லை
ஆதாரமற்றது
2.முக்குலத்தோர்
தென் தமிழகம்
தேவர்
இல்லை
வலுவற்றது
3.முத்தரையர்
தஞ்சை
இல்லை
இல்லை
ஆதாரமற்றது
4. பார்க்கவ குலத்தோர்
தஞ்சை
உடையார்
இல்லை
தவறானது
5. தஞ்சைக் கள்ளர்கள்
தஞ்சை
தேவர், உடையார்
சோழகங்கன்
ஆராயத் தக்கது
6. வன்னிய குலச் சத்ரியர்
கங்கை கொண்ட சோழ புரம், சிதம்பரம்
தேவர், உடையார்
சோழனார், சோழங்கனார்
மிக வலுவானது
























அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் வம்சம் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்களே, அது உண்மையாஎன்பதைப் பார்ப்போம்.
முதலாம் ராஜேந்திர சோழனுக்கு நான்கு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் மன்னராகப் பதவியேற்றுள்ளனர். ஒருவர் மன்னராகப் பதவியேற்பதற்கு முன்பே அவருக்குத் திருமணமாகிக் குழந்தைகள் இருக்கும். அதுவும் அரசர்கள் ஆண் வாரிசுக்காக பல திருமணம் புரிவார்கள். ராஜராஜ சோழனுக்கு மூத்தக் கிளையான உத்தமச் சோழனின் மகன் கண்டராதித்த மதுராந்தகன், இராஜ ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்துள்ளார். ஆதித்தக் கரிகாலனுக்கு கரிகாலக் கண்ணன் என்ற மகன் இருந்துள்ளதாக ராஜராஜனின் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ராஜேந்திர சோழனுக்கு மதுராந்தகன் என்ற தம்பி இருந்ததாகவும், இவரே கங்கைப் படையெடுப்பைத் தலைமை ஏற்று நடத்தியதாகவும், கங்கை கொண்ட சோழன் மற்றும் சோழ கங்கன் என்பன இவருடையப் பட்டப் பெயர்களே என்றும் ஒரு கருத்து உள்ளது. அதி ராஜேந்திரன் இறந்தவுடன் இந்த அனைத்து நேரடி வாரிசுகளும் அல்லது அவர்களின் சந்ததியும் கூடவே அழிந்து விட்டார்கள் என்று கூற முடியுமா? அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்களின் வம்சம் முடிந்து விடவில்லை.
அப்படியானால், சோழர்களின் வாரிசுகள் என நிரூபிப்பதற்கு DNA ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?
நேரடிச் சோழர்களின் DNA மாதிரிக் கிடைத்திருக்குமானால் இவ்வளவு குழப்பங்களே வந்திருக்காது. இருப்பினும் மற்ற கிடைக்கக் கூடிய ஆதாரங்களே ஓரளவுக்குப் போதுமானதாக உள்ளது.
முடிவுரை:

சோழர்களின் குடும்பப் பெயரான சோழன், சோழங்கன் ஆகியப் பட்டங்கள் இப்போதைக்கு வன்னிய குல க்ஷத்ரியாவில் உள்ளது. தஞ்சைக் கள்ளர்களிடம் இந்தப் பட்டம் உள்ளது அல்லது இல்லை என்பதை உறுதிப் படுத்த வேண்டியுள்ளது. அதனைப் பற்றி விபரம் அறிந்தவர்கள் இங்குப் பதிவு செய்யுங்கள். வேறு ஏதேனும் இனங்களிலும் சோழன் அல்லது சோழங்கன் பட்டம் இருந்தாலும் இங்குப் பதிவு செய்யுங்கள்.
நன்றி  : திரு. செம்பியன் 
http://cholanar.blogspot.com/2012/04/cholas-descendants.html