Saturday, September 29, 2012

ஸ்ரீ மதுமலா்க்கா வீரபத்திரா் சுவாமி : ((மழவர்கள் வழிபடும் வீரப்புத்திரர் = மழவர் என்போர் புராதன காலத்து சேர நாட்டின் வன்னியர் மரபைச் சேர்ந்தவர்கள். சேர நாட்டின் பெரும் போர்வீரா்களாவர் ))







கிழக்கிலங்கையின் புரதான
இந்துக் கோயில்கள்
மட்டக்களப்பு மாவட்டம்

===================

மட்டக்களப்பு நகரின் வடக்கே சுமார் 12 கி.மீ தொலைவில் ஏறாவூர் எனும் பழைமை வாய்ந்த கிராம்ம் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் எகுளப்பற்று என்றழைக்கப்பட்ட பகுதியின் தலைப்பட்டினமாக ஏறாவூர் விளங்கியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள 5 ஆம் குறிச்சி எனும் இடத்தில் பிரதான வீதியில் தென்மேற்குப் பக்கத்தில் வீரபத்திரா் ஆலயம் அமைந்துள்ளது.

வீரபத்திரா் ஆலயத்தின் அமைவிடம்

வடக்கு தெற்காக சுமார் 70 கி.மீ நீளத்துடன் ஒடுக்கமாகக் காணப்படும் மட்டக்கப்பு வாவியின் வட கோடியில் ஏறாவூர் கொம்பன் ஆலயம் அமைந்திருப்பது இதன் பண்டைய சிறப்பையும் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. இவ்வாலயத்தின் வடக்கிலும் கிழக்கிலும் குடிருப்புகளும் தெற்கிலும் மேற்கிலும் வயல்கள் நிறைந்த மருத நலப்பரப்பும் காணப்படுகிறது. வயல்களை அடுத்து முகுந்தனை ஆற்றின்கிளை ஆறும் அதனை அடுத்து வயல்களுக்கு மத்தியில் முகுந்தனை ஆறும் காணப்படுகிறது. இவ் ஆறுகளும் கிளை ஆறுகளும் இப்பகுதிக்கு செழிப்பையும் வனப்பையும் கொடுத்து மட்டக்களப்பு வாவியில் காணப்படுகிறது.


சங்க இலக்கிய நூலான

சிறுபாணாற்றுப்படையில் ஏறு மாநாடு
சுமார் 2200 வருடங்கால சைவப் பாராம்பாரியத்தைக் கொண்ட ஏறாவூர் பகுதி பண்டைய காலங்களில் ஏறுமாவூர், ஏறுமாநாடு, ஏறுமாறாவூர், எகுளப்பற்று போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டுவந்துள்ளது. சங்ககால நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் நாகர்குலத்தைச் சேர்ந்த நல்லியக்கோன் எனும் நல்லியக்கோடான் என்ற சிற்றரசனால் ஏறுமாநாடு என்ற சிறப்புப் பெயரோடு ஆட்சி செய்யப்பட்ட இடமே இந்த ஏறாவூர் என அறிஞர்கள் கூறுகின்றனர். இன்றய ஏறாவூர் நகரின் வடபகுதியில் இருந்த இவ்விடம் அன்று காட்டுமாஞ்சோலை என கூறப்பட்டது. நிலத்தில் வெளிலே படாத இக்காட்டு மாஞ்சோலை பகுதி அமைந்திருந்த இடத்தில் தான் பத்திரகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இதன்படி சங்ககால சிற்றரசர்களின் தொடர்புடைய பகுதியாக ஏறாவூர் விளங்குவது இதன் தொன்மையான இந்து பாரம்பரியத்திற்கு மேலும் இவ்வூர் பண்டைய காலத்தில் வலிமை மிக்க நாகர் குலத்தவர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. நல்லியக் கோடன் மன்ன்னின் கொம்பன் யானை நீராடுவதற்கு கட்டப்பட்ட துறையே கொம்பன் துறையாகும். இன்று இது கொம்மாதுறை என அழாக்கப்படுகிறது.


2200 வருடகால பாரம்பரியம் மிக்க ஏறாவூர் வீரபத்திரா் வழிபாடு

ஏறாவூர் வீரபத்திரா் கோயில் சுமார் 750 வருடம் பாரம்பரியம் கொண்டது என குறிப்புகள் கூறுகின்றன. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மாகோன் மற்றும் குளக்கோட்டன் காலத்தில் இவ்வாலயம் தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும் இது சுமார் 2200 வருடங்களுக்கு முன்பாக கூத்திக மன்னன் காலத்தில் ஸ்தாபிக்கபட்டிருக்கலாம் என நம்ப இடமுண்டு. கி.பி 2 நூற்றாண்டில் மகாசேன்னால் கிழக்கிலங்கைக் கரையில் 3 கோயில்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட மூன்று ஆலயங்களும் சிவாலயங்கள் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இவை கோகர்ண என்னுமிடத்திலும் கலந்தனின் ஊரிலும் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது கோகர்ணம் என்பது திருகோணமலை ஆகும். கலந்தனின் ஊர் பானமைக்கருகில் உள்ள சாஸ்திராவெளி என அடையாளம் காணப்பட்டுள்ளது ஏரக்காவில என்பது ஏறாவூர் எனவும் மகாசேனால் அழிக்கப்பட்ட ஆலயம் இந்த வீரபத்திரா் ஆலயமே எனவும் சில குறிப்புகள் கூறுகின்றன. அண்மைக்கால ஆய்வுகளின் படி ஏரக்காவில என்பது “எருவில்” என்னுமிடத்தில் களுவாஞ்சிக் குடிக்கருகில் உள்ள எருவில் போராதீவு எனவும், இங்கிருந்த ஓர் சிவாலயமே மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயம் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, ஏறாவூர் வீரபத்திரா் ஆலயத்தின் தொன்மையே இவ்வாறான ஓர் கூற்றுக்கு சான்று.


வீரபத்திரா் வழிபாடும் மழவர்களும்

ஏறாவூர் உள்ள வீரபத்திரா் வழிபாடு 2200 வருடங்களுக்கு முற்பட்ட பாரம்பரியம் கொணடது எனக் கூறுவதற்கு ஓர் முக்கிய காரணமுண்டு. மட்டக்களப்பின் வரலாற்றைக் கூறும் “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” எனும் நூலில் காணப்படும் சாதித் தெய்வக் கல்வெட்டில் ஒவ்வோர் குலத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய தெய்வங்களைகப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இதில் மழுவர் எனும் குலத்தவர்ளுக்கே வீரபத்திரா் எனக் கூறப்பட்டுள்ளது. வீரபத்திரருக்கு பூஐை செய்வனுக்கு மழவனே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக் குறிப்பின்படி மழவர்கள் வாழ்ந்து வந்த இடங்களிலெல்லாம் வீரபத்திரருக்கு ஆலயம் கட்டி வழிபாடு நடத்திருக்க வேண்டும் எனக் கூறக் கூடியதாக உள்ளது. மழுவர்களை மழவர் குடி எனவும் அழைத்தார்கள். இவர்கள் புராதன காலத்து சேர நாட்டின் வன்னியர் மரபைச் சேர்ந்தவர்கள் எனவும் கிறிஸ்துவுக்கு பிட்பட்ட காலத்தில் தமிழகத்திலுள்ள கொம்பு நாட்டின் வழியாக காவேரியின் வடமேற்குக் கரையிலுள்ள அரியலூர், பெரம்லூர் போன்ற பகுதிகளில் குடியேறி விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள் எனவும் தமிழக ஆய்வுக் குறிப்புகள் கூறுகின்றன. இவர்கள் சேர நாட்டின் பெரும் போர்வீரா்களாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழி அகராதியிலும் இதே அர்த்ததில் மழவன் என்பதற்கு நகர்தாப்போன், அஞ்சாதவன், பிடித்ததை விடாதவன் எனும் பொருள் குறிப்பிட்டுள்ளது. அரியலூர் எனும் பண்டைய “அரிசின்” பகுதியில் வாழ்ந்த மழுவர்களின் வழிவந்த பாளையக்கார குறுநில மன்னர்கள் சுமார் 5 நூற்றாண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் என தமிழக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.


கூத்திகன் காலத்தில் மட்டக்களப்புப் பகுதியில் குடியேறிய மழுவர்கள்


மிகப் புராதன காலத்தில் இம்மழுவர் குடியினர் மட்டக்களப்புத் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கி.மு 2 ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தின் மன்னனான சேனனின் மகன் கூத்திகனே மகாவம்சம் குறிப்பின் படி இலங்கையின் இரணடாவது தமிழ் மன்னனாவன். இவனது ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்புப் பகுதியுடன் நெருங்கிய தொடர்பு இருந்த்தாக மட்டக்களப்பு மாம்யம் குறிப்பிடுகிறது. கூத்திகனின் ஆட்சிக் காலத்தின் போதே மட்டக்களப்பு பகுதியில் மழுவர் குலத்தவர்கள் முதன்முருதல் குடியமர்த்தப்பட்டார்கள் என நம்பப்படுகிறது. இதன் பின்பு கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மகோன் காலத்திலும் மழுவர்கள் இங்கு வாந்தார்கள் என குறிப்புகள் கூறுகின்றன. மழுவர் குடியினர் மட்டக்களப்புப் பகுதிக்கு குடி வந்த கால அடிப்படையை வைத்துப் பார்க்கும் பொழுது ஏறாவூர் வீரபத்திரா் வழிபாடு முதன்முதலாக கி.மு 2 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்று, கி.பி 10 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்று, கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மகோன் காலத்தில் மேலும் செல்வாக்குடன் விளங்கிருக்க வேண்டும் எனக் கூறக் கூடியதாக உள்ளது. இவர்கள் இன்றும் பாணடிருப்பு, அக்கரைப்பற்று பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


http://epaper.thinakkural.com/ — in Eravur, Sri Lanka.

Friday, September 28, 2012

தீவுக்கோட்டையை ஆண்ட வன்னிய சோழனார்



சிதம்பர சோழனார் குறித்த செய்தி:




செய்தியை அளித்த திரு . சுவாமி அவர்களுக்கு நன்றி

பிச்சாவரம் சோழனாரின் வரலாறு ஆய்வுக்குரியது. பலருக்கு  பிச்சாவரத்தை  ஆண்ட பாளையக்காரரகத்தான் அவரைத் தெரியும். ஆனா அதற்கு முன்பே அவர்கள் கொள்ளிடம் சார்ந்த பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களாக இருந்திருக்கின்றனர்.சோழகனார்களின் தலைநகரமாக விள்ங்கியிருக்கிறது தீவுக்கோட்டை என்ற சிறிய தீவு.

இத்தீவு பிச்சாவரத்திற்குத் தெற்கில் கொள்ளிடம் ஆறு கடலில் சேருமிடத்தில் அமைந்துள்ளது.ஒரு போருக்குப் பின்னர் இந்தீவுக்கோட்டையை விட்டகன்ற சோழனார்கள் வலி குன்றி பிச்சாவரத்தை தலைமையிடமாகக் கொண்டு பாளையக்காரர்களாக ஆனார்கள்.


இத்தீவுக்கோட்டை தஞ்சையை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன் அமைத்ததாகவும் அதனை தனது மகளுக்கு சீதனமாகக் கொடுத்ததாகவும் செவி வழிக் கதைகள் உண்டு.

இந்தத் தீவுக் கோட்டையை   மையமாக வைத்து, நாவலாசிரியர் சாண்டில்யன் அவர்கள் "ராஜபேரிகை" எனும் வரலாற்று புதினத்தைப் படைத்துள்ளார்கள்.

அந்த நாவலில் சாண்டில்யன் இத்தீவுக்கோட்டையை சோழ மன்னன் அமைத்ததாகவும் அதைத் தன் மகளுக்குச் சீதனமாகக் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

தீவுக் கோட்டையை ஆண்டு வந்த நாட்களில் சோழனார் வலிமை பொருந்திய குறுநில மன்னனாக அறியப்படுகிறார்.பகைவர்களை சிறைப்பிடித்துக் கொன்று அவர்கள் உடல்களை கொள்ளிட ஆற்றில் தங்களால் வளர்க்கப்படும் முதலைகளுக்கு இரையாக்கியுள்ளார்கள் எனவும் குறிப்புகள் உண்டு.

நன்றி: சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு -திரு.நடன.காசிநாதன் அவர்கள்.

மதுரைச் செப்பேடு:



மதுரைச் செப்பேடு:




செய்தியை அளித்த திரு. சுவாமி அவர்களுக்கு நன்றி ..

வன்னியர் குறித்த ஒரு செப்பேடு மதுரை நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்டு சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இது எழுதப்பெற்ற காலம் கி.பி.1760.

மதுரைக் கோட்டை வடக்கு கோபுரத்துக்கு அருகிலுள்ள கிழக்கு மாசி வீதியில் மறவன் மண்டபத்துக்கும் பள்ளி வாசலுக்கும் இடையில் இருந்த வெற்றிடத்தில் நாச்சியான் படையாட்சி எடுப்பித்த தருமர் கோவிலுக்கு நிதிவசதி வெறுவது சம்பந்தமான வழிமுறைகளை படையாட்சி சாதியார் வகுத்ததை இப்பட்டயம் கூறுகிறது.

நன்றி : "வன்னியர்" -திரு. நடன.காசிநாதன் அவர்கள்.

Wednesday, September 19, 2012

பார்க்கவ குல உடையார்களின் சிறிய கிருஷ்ணாபுரம் செப்பேடும் - வன்னியர்களும் :





பார்க்கவ குல உடையார்கள் தங்கள் இனம் என்று இதுவரை இணைய பக்கங்களில் எல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் எழுதுபவர்கள் இனியாவது உண்மையை உணரட்டும்.


பார்க்கவ குல உடையார்களின் "சிறிய கிருஷ்ணாபுரம் செப்பேடு" உண்மை நிலையை உணர்த்துவது.ஆதாரமில்லாமல் எழுதுபவர் கூற்று இனி எடுபடாது.

பார்க்கவ குலம் பற்றி சொல்லவெண்டுமென்றால் "தெய்வீக மன்னன்" பற்றி கூறுதல் அவசியம்.

திருக்கோவலூரை ஆண்ட தெய்வீக மன்னனின் வழி வந்தோரே பார்க்கவ குல உடையார்கள்.

தெய்வீக ராஜன் மூவேந்தர் பகை: தெய்வீக ராஜன் திருக்கோவலூரை ஆளத் தொடங்கியபோது அவரிடம் இருந்த பச்சைப் புரவி(குதிரை) ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டு அதனை வாங்கி வருமாறு தமது அமைச்சர்களை மூவேந்தர்கள் அனுப்பினர்.

குதிரை வேண்டுமானால் போரிட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என தெய்வீக மன்னன் தெரிவிக்க மூவேந்தர்களும் போரிட வந்தனர்.ஆனால் போரில் மூவேந்தரும் தோல்விகண்டனர். 

தோல்வி கண்ட மூவேந்தர்களும் தெய்வீக மன்னன் வெற்றி பெற்றார் என ஒப்புதல் வழங்கி எந்த நிலப்பகுதிகள் அவருக்கு வெண்டும்ன்று கேட்க தாம் பச்சைப் புரவியேறி அது ஒரு வட்டம் வரும் அளவுள்ள நாடு போதுமென்று கூறினார்.

இதனை கீழ்க்காணும் பாடல் தெரிவிக்கிறது:

"வடதிசைக் கடியாறு குணதிசைக் கரிய கடல் வளம் வராத குடதிசைக்குக் கொல்லிமலை தெந்திசைக்கு திவ்வியாறு குலவுமெல்லை யடவுபட கணப்பொழுதிலொரு வட்டஞ் சூழ்ந்த பரியதன்மேல் வந்து புடவிதனிலறச ரொருமூவர் திருமுன்பு போந்தான் வேந்தன்"

இந்தப் பாடல் கிருஷ்ணாபுரம் செப்பெட்டில் உள்ளது.

மூவேந்தர்களும் குதிரை நடந்த தேசமெல்லாவற்றையும் தெய்வீகராசனுக்கு விட்டுக் கொடுத்து, அம்மன்னனுக்கு திருக்கோவிலூரில் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.

-----

இத்தகைய பெருமை மிகுந்த தெய்வீகராசன் வழி வந்தவர் தமது இனத்திற்கு இம்மையில் புகழும், மறுமையில் வீடுபேறும் பெறுவதற்காக பொதுவாக ஒரு மடம் ஏற்படுத்த முடிவு செய்தனர்.

இதனை சிறிய கிருஷ்ணாபுரம் தெய்வீகராசன் செப்பேடு தெளிவாகத் தெரிவிக்கிறது.
அந்த செப்பேட்டில் தெய்வீகராசன் வழிவந்தோர் யார் யார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்பேட்டில் அந்த செய்தி வரும் பகுதி :

"சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு தேசம் 4 மண்டலத்துண்டாகிய மலைய மன்னர், நத்த மன்னர், பாளையக்காரராகிய பண்டாரத்தார், நயினார், உடையார், சீமை நாட்டார், சில்லரை கிராமத்து வன்னியர் யிவர்கள் அனைவருக்கும் பொது மடம் கிரமமாய் நடந்து வருகிற படியினாலே", ஆண்டு  வர்த்தனையாகக் கட்டளையிட்ட சுவாதியம்:

தணிடிகை(பல்லக்கு) துரைமாருக்குப் பணம் 10 குதிரை, குடை பெற்ற் பேருக்குப் பணம் 5 தலைக்கட்டுக்குப் பணம் 2 கலியாணத்துக்குப் பணம் 2 மாப்பிள்ளை வீட்டுக்குப் பணம் 2

இது பிரகாரம் ஆண்டுக் காண்டு தம்பிரான் வந்த உனே பட் அரிசிகளும், பணமும், வெற்றிலையும் கொடுத்துத் தங்கள் கீர்த்தி போல கிரமமாய் நடப்பித்துக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

-----------

மேற்கண்ட செப்பேட்டுச் செய்தியில் பாளையக்காரராகிய நயினார் உடையார் என அரியலூர், உடையார்பாளையம் பாளையக்காரர்களே குறிப்பிடப்பட்டுள்ளனர். சில்லரை கிராமத்து வன்னியர் என்பது பல்வேறு சிறு கிராமங்களில் வசித்துவரும் வன்னிய ஜாதியினரைக் குறிக்கின்றது.இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

இந்தச் செப்பேட்டின் காலம் கி.பி 18 ஆம் நுற்றாண்டு. 

தெய்வீகராசன் வழிவந்தோரகிய இவர்கள்தான் பொது மடம் கட்டினர்.எனவே வன்னிய ஜாதியினரும் தெய்வீகராசன் வழிவந்தோர்தான். பார்க்கவகுலமும் வன்னியர் இனமும் ஒன்றே என்பது உறுதியாகிறது.

இந்தச் செப்பெட்டைக் காணும் யாவரும் இந்த உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.

சோழர் என்று உரிமை கூற வழி ஏதும் இல்லாமல் பார்க்கவ குல உடையார்களோடு தம்மை தொடர்புபடுத்தி ஆதாரமில்லாத செய்திகளை தொடர்ந்து எழுதினால் உண்மை மறைந்துவிடுமா?

தெய்வீகராசன் வழி வந்தோர் மலையமன்னர், நத்த மன்னர், வன்னியர் என்று 18 ஆம் நூற்றாண்டு செப்பேடு கூறுவதை யாரும் மறுக்கமுடியாது.

பிற்காலத்தில் ஆண்ட மலையமான்கள் வன்னியர். சங்ககால மலையமான் வன்னியர் அல்ல என்று இனி கூற முடியாது.

தெய்வீகராசன் சங்ககால மலையமானின் முன்னோடி.

வன்னியர் செப்பு பட்டயம்


வன்னியர் செப்பு பட்டயம்

செய்தியை அளித்த திரு.கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி  

நூல்  : வன்னியர், திரு. நடன. காசிநாதன்


செப்பு பட்டயம் எண் 10
காலம் :  சகம் 1563   , கி பி 1641  ஆங்கிரச ஆண்டு
குறிப்பு  : வன்னி குலாதிக்கம்  1966  பக்கங்கள்  40    - 45  


அரசர் ;  மல்லிகார்சுன  தேவமஹாராயர்

செய்தி  பல இடத்து வன்னியர்கள் ஒன்று சேர்ந்து வில்லவ நல்லூரில்  மடம் கட்டுவதற்காக ராஜவன்னிய ராஜா மல்லிகார்சுன தேவ மக்ராயரிடம் அனுமதி பெற்று வந்ததையும் மடம் கட்டும் பொருட்டு ஒவ்வொருவரும் எவ்வளவு பொருள் தரவேண்டும் என்று முடிவு செய்ததையும் விளக்கு கிறது  மேலும் பல்வேறு  விதமான திருமணமுறை அக்காலத்த்தில் நடைமுறையில்  இருந்ததையும் மன்னவேடு கிராமத்தார் எந்தெந்த வகையில் வரி எவ்வளவு செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்ய பெற்றிருந்தமையும்  குறிப்பிடுகிறது .

பட்டய வாசகம் :

சுபஸ்ரீ மஹா மண்டலத்தில் சுவர்ண அரியராய விபாடன் பாஷைக்கு தப்புவராத கண்டன் மூவராய கண்டன்
கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் , துடுக்கர் தளவிபாடன் துடுக்கர் மோகந்த விர்த்தோன், ஒட்டியர் தளவிபாடன் , ஒட்டியர் கொட்டந்த் தவிர்த்தோன், பின் மண்டலமுங் கொண்ட இராஜாதி ராஜன், இராஜ பரமேஸ்வரன், இராஜ மார்த்தாண்டன்,இராஜேஸ்வரன் , புயங்கன் , இராஜகம்பீரன் , இராக்கன்த்தம்பிரான் , இந்திர துரந்த (ர ) ன் . அஸ்வபதி கஜபதி துரந்தான்  அஷ்ட மனோகர இராயன், அசுராண விருது, நரபாலன் , கோதண்ட இராமன் , கலியுக இராயன் கண்ணன், வாளுக்கு வீமன் தோளுக்கு அபிமன்னன் , குணத்திற்கு தருமன், அழகுக்கு அ நங் கன், அமர்ந்தாற்கு  அரிச்சந்திரன் , ஆண்மைக்கு அனுமான், ஆக்கினைக்குச சுக்ரீபன் , கொடைக்கு கர்ணன் , செல்வத்திற்கு அளகேசுவரன், பலத்திற்கு வாயு பகவான் , உலகுக்கு கதிரோன் உலாவும் உலகமெல்லாம் படைக்க நினைத்தருளிய வீராதிவீரா வன்னியப் பிரதாபன் , கிருஷ்ணதேவ மஹாராயர், திருமலை தேவ மஹா ராயர் , நரசிங்க தேவ மஹா ராயர் இராம தேவ மஹா ராயர் , பிராவிட தேவ மஹா ராயர் , மல்லிகார்சுன தேவ மஹா ராயர் பிரிதிவி இராச்சிய பரிபாலனம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1563  இதற்கு மேல் நின்ற ஆங்கீரச வருஷத்து மிதுன  மாசத்து பூர்வ பட்சத்து அஷ்டமியும் பூராட்டாதி நட்சத்திரமும்
பெற்ற சோமவார நாள் , வடகரை விருதப்பசங்கன்  வளநாட்டுக்கு மேற்கு நாடு இருங்க கோள பாண்டி வளநாடு , தொண்டை மண்டலம் , சோழ மண்டலம் , பாண்டிய மண்டலம் , கொங்கு மண்டலம்  இந்த நாலு மண்டலத்திற்கு அழகான தொண்டைவள நாட்டுக் கழகான வில்லவனல்லூர் திருக்காமேஸ்வரர் குயிலாரம்மை அவர்கள் சந்ததியாகிய வில்லவனல்லூரிலே அந்தந்த சாதிக்கு மடாலயங்கள் உண்டாகின்றன. நமக்கு சிவாலய பூசை மாத்திரமிருகின்றது. தென் தேசத்தில் நமது வம்ச பன்னாடர் தங்கள் பேரும் பிரதாபமும் உண்டாகவேண்டுமென்று மடங்கள் கட்டியிருக்கிறார்கள். நாம் இராயரைபோய் கண்டு மடங்கட்ட உத்தரவு பெற்று வருவோமென்று திருவக்கரை வல்லவநாட்டு மழவராய பண்டாரத்தார், கருத்த நாயனார் பண்டாரத்தார், சின்னகுமார நாயனார் பண்டாரத்தார், சிதம்பர மழவராய பண்டாரத்தார் கச்சி இராயர் பெரியண்ன நாயனார்   சிற்றம்பல நாயனார் தாண்டவ நாயனார் சடையப்ப நாயனார் அழகு சிங்க நாயனார் மெய்யோக நாயனார் பண்டாரத்தார் இவர்களும் கண்டன்மார் தந்திரியார் படையாக்ஷியார் என்னும் பல பட்ட பெயர் பெற்ற சோம சூரிய அக்கினி வம்ச பண்ணாடரான உறவின் முறையார் அனைவரும் போய் இராஜ வன்னிய இராஜ ஸ்ரீ மல்லிகார்சுன தேவ மஹா ராயரைக்   கண்டு பேச அப்போது இராயரும் சிம்மாசனம் விட்டு இறங்கி நமதுவம்சத்தாரென்று தெரிந்து தேவாலய பூஜை யிருக்க மடத்து தருமம் நமகேனென்று இராயரும் கேட்க அப்போது நாயனார் பண்டாரத்தார் பாண்டிய மண்டலம் சோழ மண்டலம் முதலிய மற்ற மண்டலங்களில் குரு மடங்கட்டியிருக்க தொண்டைமண்டலதிலேயும் இருக்க வேண்டுமென்றார்.இராயரும் சந்தோஷித்து உங்களுக்கு இடமில்லாமற் போமோவென்று தானத்தாரையழைத்து நாயனார் பண்டாரத்தார் அவர்களுக்கு இடம் விடப்போமென்று சொல்ல அப்போது தானத்தார் மூத்த முதலியார் திருநாகத்தொண்டை முதலியார் நம்பித திருஞானப பண்டிதர் மற்றும் முற்றாற்றுடையார் நம்பிக்குருக்கள் வயித்தியநாத குருக்கள் கோவில் கணக்கு ஷேமக்கணக்கு மற்று முண்டான தானத்தார் தலதாருங்க்கூடி கெவிசித்த லிங்க தேவர் முளைய தேவர் தம்பிரானார் திருநாமத்தில் காணியான தெற்கு தெருவில் தேரோடும் வீதியில் தென் சரகில் பாலையர் மடத்திற்கு கிழக்கு அம்பலத்தாடும் ஐயர் மடத்திற்கு மேற்கு சட்டையர் மடத்திற்கு வடக்கு அடி கிழக்கு மேற்கு 75   தெற்கு  வடக்கு அடி 15  அடி ஒன்றுக்கு பொன் ஒன்றாக 75  பொன்னுக்கு கிரையங் கொண்டு கல்லில் பேர்வெட்டி நட்டு கிணறுகட்டி மடங்கட்டி  தாம்பர சாஸனமாக பட்டையமெழுதி நாலு மண்டலம் 54 தேசமுங் குருமூர்த்தமாய் கொண்டாடசொல்லி மஹா மட பிச்சை முட்டியும் திருவிளக்கும் திருநந்தவனப பணிவிடையும் திருமாலையும் உபயமும் மகேஸ்வர பூஜையும் பண்ணி நடத்தி வர சிலா நதி சக்கரவர்த்தி யோகீஸ்வர குருவை மடத்தில் வைத்து அந்தந்த சீர்மைப பண்ணாடரும் நாயனார் பண்டாரத்தார் அனைவரும் வம்ச தரும கீர்த்திகாக மடத்திற்கு கட்டளையிட்டது உபநய முகூர்த்தத்திற்கு பணம் ஒன்றும் , சுயம்வரம் நாட்டி மாலை சூடுங் கலியாணத்திற்கு பொன் பத்தும் , கத்தி நாட்டி காலியான ஞ்  செய்பவருக்கு பணம் பத்தும் , மற்ற முகூர்த்தங்களுக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் பணம் ஒன்றும் , பெண் வீட்டார் பணம் ஒன்றும் , பெண் தந்த பணம் ஒன்றும் , மாதா பிதா குரு பாத பூஜை வரும்படிகளும் மடத்தில் சேரவேண்டியது.  தண்டிகை துரைகள் பணமும், குதிரை மேற் குடைபெற்ற அஸ்வபதிகள் அஞ்சு பணமும், ஜாதியில்  குற்றா குற்ற ஞ் செய்பவர் அபராத பணமும் மன்னவேடு கிராமத்தார் அரிவாளுக்கு ஆறுபடி தானியமும், களைவெட்டுக்கு பதக்கு தானியமும் ஏருக்கு முக்குறுணி தானியமும் , பேரூருக்கு பத்து பணமும், சிற்றூருக்கு அஞ்சு பணமும் கொடுக்க வேண்டியது. ஆதுபாது அற்றவர் சொத்தை மடத்தில் சேர்த்து மடத்தாரால் சவரட்சணை பெற வேண்டியது. இவ்வரும்படிகள் மடத்திற்கு சேருகிற படியால் செந்தூரத் திலர்தம் கோபி திருமணி திருநீறிட்ட பேர்களும் சந்திர சூரியருள்ள நாள்வரைக்கும் நடத்தி வருவீர்களாகவும்;  
 இந்த மடாலய தருமத்தை தங்காமல் கொடுத்தபேர்கள் மாதாப்பிதாக்களை இரட்சித்து சிவாலயம் பிர்மாலயம்  பூதானம் கோதானம் கன்னிகாதானம் செய்த பலனை பெறுவார்கள் . ஸ்ரீ மது வில்லவனல்லூரிலே  திருக்காமேஸ்வரர் குயிலாரம்மை குமாரசாமி சந்நிதானம் விளங்குவது போல் விளங்குவார்கள். மடத்திரு அனுப்ப கட்டளையிட்டதை அனுப்பாவிடில் மடத்து சுவாமியாரால் அனுப்பப்பட்ட பணிவிடை சிஷியாள் எழுந்தருளின உடனே கூடி முன்னேபோய் காண்பித்து கொண்டு வந்தவர்களுக்கு விடுதிவிட்டு சாப்பாடு போஜனம் அமைத்து தருமத்திற்குண்டான வரும்படிகளை கொடுத்தனுப்பி வைக்க வேண்டியது. தருமபரிபாலரான சௌபாக்கிய பிரமாணிக்கரான வேள்வியில் பிறந்தோர்களான  ஸம்பு குலத்தவரான குமாரசாமியார் படைத்தலைவரான அசுரர்கள் மார்பரான ஆஸ்தான பந்துஜன சிந்தாமணிய ரான சாந்த மாரியுடைய கந்நிகையை மணஞ் செய்தவரான வாடாமாலையும் வன்னத்தடுக்கும் மாலையும் தரித்தவரான வாசமிகுந்த குவளை மாலையும் மிடக்கொடியும் முப்பத்திரண்டு விருதுகளும் பெற்றவர்களான முன்னூல் மார்பும் புலிக்கொடியும் பெற்றவரான நையா நாட்டுக்கு சப்தபதிகளான சோணாடு காத்தவரான மறையோர் மகனுக்கு உயிர் கொடுத்தவரான வல்லானுடைய மகுடந் துணித்தவரான வாதாபியை வென்ற வன்னியகுலாதிபரான செங்கையில் வில்லும் சிலீமுகமும் எடுத்தவரான ஏரடி வாழும் வீரப்பரி நகுல துஷ்ட நிர்தண்ட விர்ப்பன்ன உத்தண்ட கோதண்ட விக்கிரமார்தாண்டரான அனைவோரும் மனமொத்து இந்த காரியம் தட்டுதலை பண்ணுவ தல்லவென்று மடத்து தருமம் விளங்கத தக்கதாக பார்க்கவும் யாதாமொருவர் அகடவிகடம் பண்ணினால் கங்கைகரையில் காராம்பசுவை கொன்ற பாவத்தில் போககடவர். தங்களுடைய மாதாபிதாக்களை கொன்ற தோஷத்திலேயும் தெய்வ பிராமணரை கொன்ற பாவத்திலேயும் போக கடவர் . தருமம் விளங்க குலம் விளங்கும் ; குலம் விளங்க பெருமையும் செல்வமும் பதவியும் அடைவார்கள். 

Monday, September 17, 2012

திமுகவின் ஒட்டு வங்கியான வன்னியருக்கு,திமுக துரோகம் மட்டுமே இழைத்தது






காலம் காலமாக திமுக வின் ஒட்டு வங்கியாக இருக்கும் வன்னியர்களுக்கு , திமுக என்றுமே துரோகம் மட்டுமே இழைத்தது என்ற உண்மையை சொன்ன மதிமுக கட்சியை சேர்ந்த திரு . எல்.கணேசன் என்னும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த அய்யாவிற்கு நன்றி ......












எதிர்தழிக்க முடியாத காமராசர் அணைத்தழித்து விட்டார்










Saturday, September 15, 2012

சம்புவராயர்




























Wednesday, September 12, 2012

வன்னிய குல க்ஷத்ரிய சமுதாயத்தை சேர்ந்த கேரள மாநிலம், கொச்சி மாகாண முன்னாள் திவான் தெய்வத்திரு. சுப்பிரமணியம் பிள்ளை



 இப்புகைப்படத்தை அளித்த திரு பாபு நாயக்கர் அவர்களுக்கு நன்றி
 =========

இது சென்னை எழும்பூரில் உள்ள நமது வன்னிய குல க்ஷத்ரிய சமுதாயத்தை சேர்ந்த கேரள மாநிலம், கொச்சி மாகாண முன்னாள் திவான் தெய்வத்திரு. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களின் மகன் தெய்வத்திரு.சு.இராமநாதம் பிள்ளை அவர்களின் திருவுருவச்சிலை.

 

இவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள திரு.அண்ணல் கண்டர் அவர்களின் கீழ்கண்ட வலைப்பூ இணைப்பை சொடுக்கவும்.

http://annalpakkangal.blogspot.com/2012/06/blog-post_26.html

வலைப்பூ உதவிக்கு திரு.அண்ணல் கண்டர் அவர்களுக்கு நன்றி.


மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய குடைவரை கோவில்

இது தான் சென்னை ஜமீன் பல்லாவரத்தில் இருக்கின்ற மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய குடைவரை கோவில் . 
 இந்த குடைவரையில் தனது விருதுபெயர்களை பொறித்துள்ளார் மகேந்திரவர்மன். தற்போது இது ஒரு இசுலாம் வழிப்பாட்டு தலமாக மாறியுள்ளது. இங்கு ஒரு முசுலீம் பெரியவர் வந்து தங்கி இங்கேயே அடக்கம் ஆகியுள்ளார். அதனால் இது ஒரு தர்காவாக மாற்றட்டப்பட்டுள்ளது. தற்போது இதை சுற்றி பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. 
இங்கு உள்ள குடைவரை மொசைக் ஒட்டப்பட்டு கல்வெட்டுக்கள் எல்லாம் மறைந்து விட்டது. தொல்பொருள் துறையினரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். 
என்ன செய்வது ஒரு வன்னியனின் வரலாற்று நினைவு நம் கண் முன்னே நம்மை விட்டு மறைகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது இந்த புகைப்படம்.
 செய்தியை அளித்த திரு பாபு நாயக்கர் அவர்களுக்கு நன்றி

Sunday, September 9, 2012

"Kempe Gowda " - The Founder of BANGALORE CITY

"Kempe Gowda " - The Founder of BANGALORE CITY also belongs to THIGALAS 
(THIGALAS - VANNIYAR CASTE NAME IN KARNATAKA)
-------------------- பெங்களூர் தமிழ் சங்கம் 1992 ...