Saturday, December 10, 2011

சம்புவராயர்கள் வன்னியக்குலத்தவரான ஒய்மான் மன்னர்கள் வழிவந்தவர்கள்.




சம்புவராயர்கள்
 வன்னியக்குலத்தவரான ஒய்மான் மன்னர்கள்வழிவந்தவர்கள்.

சுந்தர சோழன் காலத்தில் (கி.பி 10 ஆம் நூற்றாண்டு'ஓமயிந்தன்முந்நூற்றுவன் பள்ளியான கரணமாணிக்கம்என்பான் சம்புவராயர் குலமுன்னோடி.இவன் பள்ளி குலத்தவன்.இவன் குறுநிலத் தலைவன்ஆவான்.( South Indian Inscriptions - Vol 7, no.500)

இவனுக்குப் பிறகு அறியப்படும் குறுநிலத்தலைவன் செங்கேணி சாத்தநாலாயிரவன் எனும் கரிகாலச்சோழ நாடாள்வான்:இவனதுகல்வெட்டுக்கள் திண்டிவனப் பகுதியான கிடங்கலில் காணப்பெறுகிறது.இவன் சோழ மன்னரான அதி ராஜேந்திரன் காலத்தில்குறுநில மன்னனாக் ஆட்சி செய்தவன்.(ARSIE,1902,no.227, S.I.I.Vol 7, No. 854)

சம்புவராய மன்னனாகிய ஓய்மா நாட்டு முந்நூற்றுப் பள்ளி செங்கேணிநாலாயிரவன் அம்மையப்பன் எனும் ராஜேந்திர சோழ சம்புவராயன்என்பான் கி.பி 1128 வாக்கில் ஆட்சி செய்த குறு நில மன்னனாவான்.இக்குறு நில மன்னனின் பத்து கல்வெட்டுகள் கி.பி 1123 ஆம் ஆண்டுமுதல் கி.பி 1174 ஆம் ஆண்டு முடிய எழுதப் பெற்றிருக்கின்றன.

வேலூர் மாவட்டம் திருவல்லம்(ARE 232 of 1921),வாயலூர் (ARE 422 of 1922),காஞ்சி மாவட்டம் மதுராந்தகம்(ARE 400 of 1922), திருவண்ணாமலைமாவட்டம் சீயமங்கலம்(ARE 63 of 1900),மடம்(ARE 234 of 1919, 238 of 1919, 252 of 1919 and 100 of 1939-1940),தேவனூர்(ARE 298 of 1929 and 302 of 1929),திருக்கழுக்குன்றம்(ARE 126 of 1932-33) ஆகிய இடங்களில்இவ்வரசனுடைய பத்து கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன.

இந்த சம்புவராய மன்னர்கள் பள்ளி குலத்தவர் எனக் கல்வெட்டுக்களில்குறிப்பிடப் படுகின்றனர்இவர்கள் சுந்தரச் சோழன் ஆட்சி காலம் முதல்விஜய நகர வேந்தர் படையெடுப்பு வரை தொடர்ந்து தொண்டைமண்டலப் பகுதி ஆட்சியாளர்களாகவும் குறு நில மன்னர்களாகவும்விளங்கினர்விஜய நகர வேந்தர் படையெடுப்பின் போது முழுவுரிமைபெற்ற மன்னர்களாய் விளங்கினர்.

இம்மன்னர்கள் கல்வெட்டுக்கள் மூலம் இவர்கள் பள்ளி குலத்தவர்என்பதை அறியலாம்.தமிழக வரலாற்றாசிரியர்களும் இதனைஉறுதிப்படுத்தியுள்ளனர்சம்புவராயர் குறித்த வரலாற்று நூல்களும்மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இவர்கள் வன்னியர்(பள்ளி) குலத்தவர்என்று கூறுகின்றன.
சம்புவராய மன்னர்கள் வன்னியர் குலத்தவர் என்பதுஉறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.

சோழர் காலத்தில் தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி செய்தோர்வன்னியரே என்பது உறுதி.
கி.பி.1340

சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒய்மாநாட்டு(திண்டிவனம்மூன்னூற்றுப்பள்ளியை சம்புவராயர்கள் ஆண்டு வந்தார்கள்.பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும்செங்கல்பட்டு(செங்கழுநீர்பற்று, வன்னியர் புராணத்தில் சிவபெருமானின்செங்கழுநீரை ஆவுதி நீராய் தர யாகத்தில் இருந்து ருத்ர வன்னியமஹாராஜா தோன்றினார் என்பதின் தொடர்புடையது தான் இந்தசெங்கழுநீர்பற்றுபிற்காலத்தில் மருவி செங்கல்பட்டு ஆனது.)மாவட்டத்தையும் உள்ளடக்கி ராஜ கம்பீர ராஜ்ஜியம்” என்ற பெயரில்ஆண்டனர்விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர்பிற்காலச்சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர்சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றிஉள்ளனர்அழகிய சிங்கன்இராசராசசம்புவராயன்,திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன்,வீரப்பெருமாள்எதிரிலி சம்புவராயன்இராசகம்பீரசம்புவராயன்,பல்லவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப காலஅரசர்கள்.
கி.பி.14

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்புபாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம்வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில்காவலர்களாக நிறுத்தினார்சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க்குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள்இவர்களுடைய ஆதரவு பெற்றவர்கள்இவர்களின் நாணயங்கள் "வீரசெம்பன் குளிகைகள்என அழைக்கப்பட்டனதமிழர்களுக்குபுகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். "அஞ்சினான் புகலிடங்கள்அமைத்தார்கள்".