Wednesday, October 17, 2012

திராவிட வாளை ஏந்தி இனியும் தமிழினத்தை வீழ்த்தலாம் என கனவு காணாதே வைகோ - "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன்








# மேடை போட்டுக் கொடுத்தால்; அங்கே ஆக்ரோ­மாகப் பேசி சிலர் பெரிய ஆள் ஆகி விடுகிறார்கள்.

#ஈழப்பிரச்சனையில் நாம் தோற்றுவிட்டோம். திராவிடம் பேசி நம்மை அழித்துவிட்டனர். தமிழரினம் அழிவதை தமிழக அரசியல்வாதிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


#திராவிடத்தைப் பேசி தமிழர்களை மழுங்கடித்து விட்டனர்.

இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தமிழகத் தலைவர் தா.பாண்டியன் அவர்களின் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் பாரதிராஜா பேசியது இது.
==========================

# அரசியல்வாதிகளையும்; திராவிடத்தையும் பற்றிப் பேசுவது சிலருக்குப் பொழுதுபோக்கு.

# திராவிடம் இல்லையயன்றால் இங்கே எதுவுமே இல்லை.

# பெரியாரும் அண்ணாவும் இல்லாமல் இங்கு எதுவுமே நடந்திருக்காது.

# இனி திராவிடம் பற்றி ஒரு வார்த்தை பேசினால் பத்து வார்த்தை நாங்கள் திருப்பி பேச வேண்டி வரும்.

பாராதிராஜாவின் பேச்சுக்கு எதிராக பேச்சுமேடை நடிகன் கோபால்சாமி நாயுடுவின் பேச்சு இது.
============================

திராவிடத் தலைவர்களால்தான் ஈழத்தமிழரினம் அழிந்தது என்ற வரலாற்று உண்மையை நீண்டநாள் மறைத்து வே­ம் போட முடியாது. பாரதிராஜா சொன்னது கொஞ்சம்தான். மேடை நாகரீகம் கருதி தொட்டுச் சென்றுள்ளார்.

இதற்கேவா இந்தக் குத்தாட்டம்?

மேடைபோட்டுக்கொடுத்தால், அங்கே ஆக்ரோ­மாகப் பேசிச் சிலர் பெரிய ஆள் ஆகி விடுகிறார்கள் என்று மேடையிலிருந்த சீமானை மறைமுகமாக விளாசினார் பாரதிராஜா என ஜூனியர் விகடன் குறிப்பிட்டிருந்தாலும்,

ஜூனியர் சும்மா இருக்க; சீனியர் மேடைப்பேச்சு நடிகனான கோபால்சாமி நாயுடுவை அதிகம் பாதித்து அனுமான் வே­ம் போட வைத்துவிட்டது.

திராவிடம் இல்லையயன்றால் தமிழ்நாட்டில் எதுவுமே இல்லை என்று நாயுடு கூறியிருப்பது பாரதிராஜா மீதான தாக்குதல் இல்லை.

தமிழ்நாட்டின் மீதான தாக்குதல். தமிழ்நாட்டில் எதுவுமே இல்லை என்றால் நீ எதற்கு இங்கே கட்சி நடத்துகிறாய்? எல்லாம் இருக்கிற உன் தெலுங்கு தேசத்துக்குப் போய் கட்சி நடத்துவதுதானே?

திராவிடம் இல்லை என்றால் தமிழ்நாட்டில் எதுவுமே இல்லை என்றதற்கே உன்னைத் தமிழ்நாட்டை விட்டு தெலுங்கு தேசத்திற்குக் கடத்த வேண்டும். காலம் வரும்... வராமலா போகும்?

அரசியல்வாதிகளையும் திராவிடத்தையும் பற்றிப் பேசுவது பொழுதுபோக்கு என்கிறார் நாயுடு. திராவிடத்தைப் பேசி பிழைப்பு நடத்தும் கருணாநிதி, கோபால்சாமி நாயுடுவைப் பார்த்த பிறகும் அரசியல்வாதிகளையும் திராவிடத்தையும் பொழுதுபோக்காக யாராவது பேசினால். தப்புதான் நாயுடு ஜி.

புறம்போக்கும்படி செயல்பட வேண்டும் என்று சொல்லியிருப்பதற்கு நன்றி.

பெரியாரும் அண்ணாவும் இல்லயயன்றால் இங்கு எதுவுமே நடத்திருக்காது என்கிறார் நாயுடு.

உண்மைதான், பெரியாரும் அண்ணாவும் இல்லை என்றால் தமிழ்நாடு சித்தூரோடும்; கோலாரோடும்; தேவிகுளத்தோடும்; பீர்மேட்டோடும்; எதுவுமே நடக்காமல் இங்கேயேதான் இருந்திருக்கும். இவைகள் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரத்திற்கும் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்குமாகி நடந்தது எல்லாம் பெரியாராலும்; அண்ணாவாலும்தானே?

திராவிடத்தை எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசினால், பத்து வார்த்தை பேசுவாயாமோ? நல்லது நல்லது. பேசு பேசு.. அப்போதுதான் நீபேசும் திராவிடத்திற்கு ஆதரவான பத்து வார்த்தைகளுக்கு நூறு வார்த்தைகள் எதிராக எங்களால் பேச முடியும்.

திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டின் சாபக்கேடு. திராவிடத் தலைவர்களான பெரியார்; அண்ணாத்துரை; கருணாநிதி; எம்.ஜி.ராமச்சந்திரன்; .... உன்னை நீயே ஒரு திராவிடத் தலைவன் என நினைத்துக்கொண்டால் நீயும்.
தமினத்தின் சாபக்கேடே...

நீ இதற்கு தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் எதிர்த்து பத்து வார்த்தையில் பதில் சொல். உனக்கு நாங்கள் திராவிடத் தீமையை எதிர்த்து நூறு வார்த்தையில் பதில் சொல்கிறோம்.

துருப்பிடித்து; இற்றுப்போய்; காயலாங்கடைக்குப் போக நாள் பார்த்துக் கொண்டிருக்கும் திராவிட வாளை ஏந்தி இனியும் தமிழினத்தை வீழ்த்தலாம் என கனவு காணாதே நீ ....

-------------------------------- "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன்