Saturday, July 6, 2013

அண்ணாமலையார் , வன்னிய மன்னன் வல்லாள மகாராஜனுக்கு திதி கொடுக்கும் 672-ஆம் ஆண்டு மாசிமக விழா (25-02-2013) அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்


அண்ணாமலையார் , வன்னிய மன்னன் வல்லாள மகாராஜனுக்கு திதி கொடுக்கும் 672-ஆம் ஆண்டு மாசிமக விழா (25-02-2013) அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

                                        

                              வன்னிய மன்னன் வல்லாள மகாராஜன்














இந்த நிகழ்ச்சியில் , அண்ணாமலையாருக்கு சம்மந்தம் கட்டும் முறை நடைப்பெறும் . இந்த சம்மந்தி முறையில் வந்து அந்த உரிமையை செய்வது வன்னியர்கள் மட்டுமே . வழக்கமாக இதை ஒரு ஊர் வன்னியர்கள் மட்டுமே செய்தனர் .

இதனால் அந்த ஊருக்கு சம்மந்தனூர் என்ற பெயரே பெற்றது ஆனால் கால மாற்றத்தாலும், அனைவரும் இனைந்து செயல் படவும் , இப்போது மற்ற ஊர் வன்னியர்களும் செய்வதாக கேள்விபட்டேன் .



பிறகு , சமந்தி முறையில் உள்ள வன்னியர்களை சம்மந்தம் கட்ட அழைக்கும் போது,

### நேரம் ஆச்சி சீக்கிரம் வாங்கப்பா ன்னு சொன்னா
, ஏன் மாப்பிள்ளை (இங்கே மாப்பிளை என்பவர் அண்ணாமலையார் தான் ) சிறிது நேரம் காத்திருக்க மாட்டாரா ? 

காத்திருக்க சொல்லுங்கள் மாப்பிள்ளையை ! ..... ## 

என்று சொல்வார்களாம் ..... 

அண்ணாமலையானையே வன்னியர்கள் காத்திருக்க வைக்கும் நிகழ்வு இது .
 
இந்த திருவண்ணாமலை தான் வன்னியர்களின் பல பெருமையான பழமையான நிகழ்வுகளை இன்றும் நடைமுறையில் வைத்திரக்கும் ஊர் . வன்னியர் புரணாம் கூட கூத்தாக நடிக்கும் வழக்கம் மற்ற இடத்தில் அழிந்துவிட்டது , திருவண்ணாமலை தவிர ........

பழமையை பாதுக்காப்போம் ... 


அண்ணாமலையார் , வன்னிய மன்னன் வல்லாள மகாராஜனுக்கு திதி கொடுக்கும் 672-ஆம் ஆண்டு மாசிமக விழா அழைப்பிதழ்கள்:

வன்னியர் பூமியான திருவண்ணாமலையை ஆண்ட , வன்னியர் குல க்ஷத்ரிய மரபில் உதித்த ஹொய்சால பேரரசன் "வீர வல்லாள மகாராஜனுக்கு " மகனாகப் பிறந்த ஈசன் அண்ணாமலையார் , தன் தந்தைக்கு 25-02-2013 மாசிமகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கௌதம நதிக்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சிக்கும் (672-ஆம் ஆண்டு நிகழ்வு ) , அரசன் இறந்தபின் மகனுக்கு முடிசூட்ட வேண்டும் என்ற மரபுக்கு ஏற்ப 26-02-2013 அன்று அருணாச்சலேசுவரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு நடக்கும் முடிசூட்டு விழாவுக்கும் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு பக்தர்களை வணக்கத்துடன் கேட்டுக்கொண்டு திருவண்ணாமலையில் வைக்கபெற்ற பேனர்கள் இவை
 

உலகில் எந்த ஒரு நிகழ்வும் ஒரு மன்னனுக்கு இத்தனை ஆண்டுகளாக நடைப்பெருகிறதா என்று தெரியவில்லை .. ஆனால் நமது வன்னிய மக்கள் நம் மன்னனுக்கு இறைவனே மகனாக தோன்றி திதி கொடுக்கும் நிகழ்வை இத்தனை ஆண்டுகளாக செய்வது மெய்சிலிர்க்க வைக்கிறது ..........  

 வாழ்க வீர வன்னியர் இனம் .............. சிவனே போற்றி !!!                அண்ணாமலையானே போற்றி !!!