Monday, August 20, 2012

ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர்








சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்க்கரை சாலையில் மிகவும் ரம்மியமாய் கடற்கரையை பார்த்து கொண்டே செல்லும் வகையில் இருக்கும் ஆயிரம்காணி நிலத்திற்கு சொந்தக்காரர் வன்னியகுல க்ஷத்ரிய சமுதாயத்தில் உதித்த திரு. ஆளவந்தார் நாயகர் அவர்கள்.

வைணவத்தில் ஈடுபாடு கொண்டு பிரம்மச்சரியத்தை கடைபிடித்த இவரின் சமாதி இவரின் நிலத்திலேயே இருக்கிறது. தற்போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு இவரின் அறக்கட்டளை நிலமே பயன்படுத்த படுகிறது. நெமேலி மற்றும் பட்டி புலத்தில் இவரின் நிலங்கள் உள்ளது. மற்றொரு பகுதி நிலம் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் நாட்டிய பள்ளி கட்டிக்கொள்ள இந்து அறநிலைய துறை ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையில் இருந்து பெற்று தந்திருக்கிறது.

ஆளவந்தார் நாயகர் அவர்களின் ஜீவ சமாதியும் ஆலயமும்

திருமணம் செய்து கொள்ளாத நாயகர் அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு ஜீவா சமாதி ஆகிவிட்டார். அவரின் நிலத்திலேயே அவருக்கு ஆலயம் இருக்கிறது.

இவருடைய பிறப்பு : 1835

இறப்பு ; 8 . 8 . 1914

ஊர் : கோவளம்

தந்தை : வேங்கடபதி நாயகர்

தாயார் : அகிலாண்டம்மாள்

இயற்பெயர் : தம்பிரான்

சொத்துக்கள் : 1039.27 ஏக்கர்

அனைத்து சமுதாய மக்களுக்கும் தான் சம்பாதித்த பணத்தில் உதவிகள் செய்த நாயகரின் புகழ் வான் உள்ளவரை நிலைத்திருக்கும்


செய்தியை அளித்த கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி .