Monday, August 20, 2012

சேதிராயர் பட்டம் தாங்கி திருகோவிலூரை ஆண்ட வன்னியர் குலத்தை சேர்ந்த பிற்கால மலையமான்கள் . கடையேழு வள்ளல்களில் ஒருவரான திருமுடிக்காரி வழி வந்தவர்கள்




மலையமான் :
============

"சேதுராயர்" "சேதிராயர்" "சேதுவராயர்" பட்டம் கொண்ட மலையமான் வழிவந்த வன்னியகுல க்ஷத்ரியர் சேத்தியாதோப்பில் கணிசமாக வசித்து வருகிறார்கள். திருகோவிலூர் பகுதியிலும் மலையமான் வம்சத்தினரான வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

குறுநில மன்னர்களான தொண்டை மண்டல சம்புவராயர்களும், மலையமான்களும் "வன்னிய மக்கள் நாயன்" என்றழைக்கப்படுகின்றனர்.

சம்புகுல காடவர்(காடவராயர்கள்) என்பாரும் பள்ளி(வன்னியர்) இனத்தவர்தான்.

பிற்கால சோழர் ஆட்சியில் குறுநில மன்னராயிருந்த மலையமான்கள் பள்ளி(வன்னிய) இனத்தவர் என்று "சோழர் கால சமுதாயம்" எனும் நூல் தெளிவுபடுத்தியுள்ளது.

சேதுராயர் பட்டம் கொண்ட வன்னியர்கள் பல உண்டு .... சோழர் பற்றிய புத்தகமான "சோழர் கால சமுதாயம்"என்னும் நூலும் வன்னியரகளைதான் மலைமான்கள் என்றது ..

குலோத்துங்க சோழனின் தளபதியும், பல்லவ மன்னனுமான வன்னியரான கருணாகர தொண்டைமான் முன்னிலையில் கம்பர் எழுதிய சிலை எழுபது என்னும் நூலும் வன்னியர்களைதான் மலையமான்கள் என்று சொல்கிறது .

குலத்தலைவர் படைச் சிறப்பு :
விடையுடையார் வரமுடையார்
வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே
. --------------(கம்பர் எழுதிய சிலை எழுபது)

சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பதுகவனித்தற்பாலது.

சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்ட
கிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர்.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி சங்ககாலத்தில் இவ்வூரை ஆண்ட மன்னர்களில் ஒருவன்.. இது வன்னியர்களின் கோட்டையான விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

‎"சேதிராயர் "(மலையமான் ) பட்டம் கொண்ட வன்னியர்களை பற்றிய கல்வெட்டு:  

1. VANNIYANAR alias Manabharana-CHEDIYARAYAR

Pallva Inscriptions (A. R. No. 290 of 1919 at Avur Tiruvannamalai Taluk, North Arcot District, On the south wall of the central shrine in the ruined Siva temple.)

“This is a fragmentary record dated in the 32nd year of the chief. It registers some provision made to the god Tiruvagattisuramudaiya-Nay
anar for the welfare of Vanniyanar alias Manabharana-Chediyarayar.”
2. VANNIYANAYAN CHEDIRAYAN

Pallva Inscriptions (A. R. No. 300 of 1919, On the south wall of the mandapa in front of the central shrine of the same temple)

“This inscription of the 32nd year records a gift of land by Vanniyanayan Chediray

an to Bharadvaji Va[ra*]ntandan devan, a Brahmana of the village, for supplying on festival days, sandal paste, scented powder and incense for the sacred bath of the god Tiruvagattisuramudaiya-Nay

anar at Avur.”