Thursday, August 23, 2012

சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் காடவராயர் அரசரை பாடிய பாடல்

பாடல் வரி :
"காடவர் குரிசி லாராங் கழற்பெருஞ் சிங்க னார்தாம் "


விளக்கம் :

காடவர் - சோழர்களின் ஒருபிரிவாகிய மரபு. “காடவர் கோன்” என்பது முதனூல்; 
இம்மரபு பல்லவர்களினின்றும் கிளைத்தது என்பது “பல்லவர்குலத்து வந்தார்” என்றதனால் ஆசிரியர் அறிவித்தமை காண்க. 
இவர்க்கு மும்முடிவேந்தர்களுட் சேர்த்து எண்ணும் பெருமையின்று என்ற குறிப்பினால் இவரைக் குறுநிலமன்னன் ரைவருள் வைத்து வகுத்தனர் திருத்தொண்டர் புராண வரலாற்றின் ஆசிரியர் உமாபதி சிவனார். 
பெருங்கழற் சிங்கனார் என்க. கழலையணிந்த சிங்கம் போன்றார் எனக் காரணப் பெயராய் வந்தமை தெரியக் கழற் பெருஞ் சிங்கனார் என அடைய இடையில் வைத்தார்.

கழல் - அடைமொழி; சிங்கன் பெயர்; போரிற் சிங்கம் போன்றவன்.
சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் காடவராயர் அரசரை பாடிய பாடலிது
Source:  http://www.tamilvu.org/slet/l4100/l4100uri.jsp?song_no=4102&book_id=120&head_id=7&sub_id=1509