Friday, May 22, 2015

மன்னர்கள் அரச வம்சமா என்று பார்த்தே மண உறவு கொண்டனர் - மொழி அல்ல



ஆதித்தய சோழன் மனைவிகளில் பட்டத்தரசி ராஷ்ட்டிரகூடர் இளவரசி "இளங்கோப்பிச்சி" ஆவார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு .. அவர்கள் பெயர்

கன்னர தேவன்
பராந்தகன்.


ஆனால் சோழர் குலத்தில் பின்னாளில் எப்படி சாளுக்கியரில் திருமணம் செய்த சோழ அரசியின் புதல்வன் குலோத்துங்கன் , சோழ மன்னனாக ஆட்சி புரிந்தானோ , அதே போல

பல நூற்றாண்டு முன்பே

ராஷ்டிர கூடர் அரசில் , அரசனாக முடி சூடி ஆட்சி செய்தவன் சோழ அரசன் கன்னர தேவன் ஆவான்.

பராந்தகன் சோழனாக முடி சூடிகொண்டான்.
கன்னர தேவன் ராஷ்டிர மன்னனாக முடி சூடினான்..

ராஷ்டிரர் , சாளுக்கியர் இருவருமே ஒரே குலம்தானே ?

வேளிர் யது குலம், அக்னியில் பிறந்தவர் என்றெல்லாம் சொல்லப்படும் ஹோய்சாலர் போன்றவர்கள்தானே..

அப்படி இருக்க சாளுக்கிய வம்சத்தில் சோழ ரத்தம் குலோத்துங்கன் காலத்திற்கு முன்பே கலந்து விட்டது போலும்.

அப்படிதானே ?

படம் - பிற்கால சோழர் வரலாறு..

குறிப்பு :

மன்னர்கள் அரச வம்சமா என்று பார்த்தே மண உறவு கொண்டனர்..

மொழி அல்ல..