Sunday, April 22, 2012

விழுப்புரம் மாவட்டம், ஆசூர் திருவாலீசுவரர் கோயில் கல்வெட்டு:

செய்தியை  அளித்த திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி .
விழுப்புரம் மாவட்டம், ஆசூர் திருவாலீசுவரர் கோயில் கல்வெட்டு:

நன்றி: "வன்னியர்" - திரு.நடன.காசிநாதன் அவர்கள்

ஆதாரம்:ஆவணம், இதழ் 12, சூலை- 2001, பக்கம் 6- 8

இக்கல்வெட்டு ஆசூர் திருவாலீசுவரர் கோயிலில் மகா மண்டபக் கிழக்குச் சுவரில் பொறிக்கப்படுள்ளது.

வன்னிய நாயக்கமாரால் கோயிலைப்பெருநல்லூர் பற்று (கோலியனூர்) ஆசூரில் நாயனார் திருவாலந்துறை உடைய நாயனாருக்குக் கொடை அளித்தது குறிக்கப்பெறுகிறது.
இக் கல்வெட்டு விஜயநகர வேந்தன் வீரபுக்கண உடையார் காலத்தைச் சார்ந்தது(கி.பி. 1379).

இதன் மூலம் கி.பி 14 ஆம் நூற்றாண்டளவிலேயே வன்னியர்களுக்கு "நாயக்கர்" பட்டம் உண்டு என்பது தெரிகிறது.