Thursday, April 19, 2012

ஊத்தங்கால் பாளையக்காரர்:

 செய்தியை அளித்த திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி :
 ஊத்தங்கால் பாளையக்காரர்:

நன்றி: "வன்னியர்" - நடன.காசிநாதன் அவர்கள்

ஊத்தாங்கால் எனும் சிற்றூர் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலிக்கு அருகில் சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது.இது முன்பு ஒரு பாளையமாக விளங்கியது.

இப்பாளையம் இருந்தது ஆனந்த ரங்கம் பிள்ளை நாட்குறிப்பால்(Anandarangam Pillai diary volume-3) தெரிய வருகிறது.இப்பாளையத்தை ஆட்சி புரிந்த பாளையக்காரரான காங்கய நயினார் என்பவரை பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பாளையக்காரர்களில் புக்ழ வாய்ந்தவர் சமீந்தார் திரு.சாமியப்பா பரமேஸ்வர வன்னிய நயினார் ஆவார்(கி.பி. 1908).

திரு.சாமியப்பா பரமேஸ்வர வன்னிய நயினார் அவர்கள் தென்னற்காடு வன்னியகுல ஷத்திரிய சங்கத்தின் உபதலைவர்கள் இருவரில் ஒருவராக இருந்து, வன்னியர் சங்கத்தை வழிநடத்தியிருக்கிறார்.

இவருக்குப் பிறகு தற்போது இப்பரம்பரையில் வந்த மூவர் பற்றி மட்டும்தான் தகவல் உள்ளது.

1.செல்லச்சாமி பரமேஸ்வர வன்னிய நயினார்.

2.தெய்வச்சாமி பரமேஸ்வர வன்னிய நயினார்.

3.அண்ணாத்துரை பரமேஸ்வர வன்னிய நயினார்.

இவர்கள் கொள்வன கொடுப்பன எல்லாம் வன்னிய பாளையக்காரகளுடன்தான். குறிப்பாக திருக்கணங்கூர் பாளையக்காரகளோடும், வடகால் பாளையக்காரர்களோடும் (வடகால் ஸ்ரீ ராய ராவுத்தமிண்ட நயினார்) கொள்வன கொடுப்பன உறவு வைத்துக்கொண்டுள்ளனர்.