Monday, February 27, 2012

வரலாறு கூறுவது என்ன? சோழர் வன்னியரே .

தகவலை தந்த சொந்தம் திரு சுவாமி அவர்களுக்கு நன்றி 

சம்புவராயர்,காடவராயர் என்பார் வன்னியரே என்பது நாமறிந்த விஷயம்.வரலாற்று ஆதாரங்களும் அதனை உறுதி செய்கின்றன.

இதுவரை இவ்விரண்டு மரபினர் தாங்களே என்று உரிமை கோரியவர்கள் இப்போது மௌனமாகிவிட்டனர்.உண்மை வரலாற்றைத்தானே உலகம் ஏற்கும்?

இப்போது சம்புவராயர்,காடவராயர் இவர்கள் மட்டும்தான் வன்னியர் என்றும் இதர சிற்றரசர்களும்,சோழர்களும் வன்னியரில்லை என்று வீணே வாதாடுகின்றனர்.

பிச்சாவரம் சோழனார்களாகிய வன்னியர்களே இன்றைய சோழ வாரிசுகள் என்பதை சோழருக்கும் பின்னர் அவர் வழி வந்த வன்னிய சோழகனாருக்கு மட்டுமே உரித்தான பட்டாபிஷேக பாத்தியதை உணர்த்தும்.

இதனை ஏற்காதாரை என்ன சொல்ல?

காடவராயருக்கும் சோழருக்கும் தொடர்பில்லை என்று சிலர் கூறுகின்றனர்.

Kopperunjinga I who was related to the Chola King by ties o marriage and was an

officer under Kulottunga-Chola III till about A.D. 1213.
(A.R. No 63 of 1919 and 487 of 1921)

இதற்கு என்ன பதில்?

பிற்கால சோழர் ஆட்சியில் சிற்றரசர்களாகயிருந்த மலையமான்கள் வன்னிய குலத்தவரே.இவர்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத சில இனத்தவர் மலையமான்கள் எங்கள் இனம் என்று உரிமை கொண்டாடுவது வேடிக்கை.

திருவெண்ணைநல்லூர்(தென்னாற்காடு) கல்வெட்டொன்று கூறுவது
(A.R No. 480 of 1921)

Records a political compact made by Alappirandan Mogan alias Kadavarayan of Kudal with Periya-Udaiyan Iraiyuran Rajaraja-Chediyarayan, a Malaiyaman chief of Kiliyur, promising to cease his enmity with the latter. The pact for the marriage of Atkondanachchi, the daughter of the former with Akarasuran alias Kovalrayan seems to have been the cause of hostility.

இதில் குறிப்பிடப்படும் ஆகரசூரன் எனும் கோவலராயன் என்பவன் மலையமான் அரச குடும்பத்தவனே.

இவன் அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெரிய உடையான் இறையூரன் ராஜ ராஜ சேதிராயன் சகோதரன் ஆவான்.

பெரிய உடையான் இறையூரன் ராஜ ராஜ சேதிராயன் கிளியூர் ஆண்ட மலையமான் மன்னன் ஆவான்.

காடவராயர் வன்னியரென்றால் அவர்களோடு உறவு முறை கொண்ட மலையமான்கள் வன்னியரன்றி வேறு யாராய் இருக்க முடியும்?