Tuesday, November 29, 2011

உடையார்பாளையம்&பிச்சாவரம் ஜமீந்தார்கள்:


வன்னியர்களுக்குள்ள பட்டப்பெயர்களுள் உடையார் என்பதும் ஒன்று.உடையார் மட்டுமல்ல முதலியார்,  தேவர் போன்ற பட்டங்களும் வன்னியருக்குண்டு.

உடையர் என அழைக்கப்படுவோரெல்லாம் உடையார் இனம் எனக் கூறமுடியாது. உடையார்பாளையம்,அரியலூர் இவ்விரண்டும் வன்னியராண்ட சமஸ்தானங்கள்.வரலாற்று நூல்களும் உடையார்பாளையம் ஜமீந்தார்களை வன்னியர் என்றே கூறுகின்றன.

சில ஆதாரங்கள்:

1.பிச்சாவரம் ஜமீந்தார்கள் வன்னியர் குலத்தினர்.
தற்போதைய ஜமீந்தார் திரு.சிதம்பரநாத சூரப்ப சோழனார்.

இவரது பெற்றோர்கள்: தந்தை -திரு.ஆண்டியப்ப சூரப்ப சோழனார்.

தாய் - திருமதி.ஜலகந்தி ஆயாள்

இப்போதைய ஜமீந்தாரின் தாயாரான திருமதி ஜலகந்தி ஆயாள் அவர்கள் உடையார்பாளையம் ஜமீந்தார் திரு. கச்சி பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார் அவர்களின் மகளாவார்.

பிச்சாவரம் ஜமீந்தார்கள் பெண் கொடுப்பதும்,பெண் எடுப்பதும் வன்னியர் குல ஜமீந்தார்கள் குடும்பத்திலிருந்துதான்.இது நெடுங்காலமாக இவர்கள் கடைபிடித்துவரும் வழக்கம்.


2.உடையார்பாளையம் ஜமீந்தார்களின் நில விற்பனை ஆவணங்களில் இவர்கள் "வன்னிய ஷத்திரிய ஜாதி,சிவமதம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

3.சில நூல்களில் இவர்கள் சிங்கக் கொடியுடைய பிரம்ம வன்னியர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.(Brahma Vanniyar with a lion flag)

4.உடையார்பாளையம் சமஸ்தானத்தின் 24 ஆவது ஜமீந்தார் திரு. கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார் என்பவர் தமது மரபு வழிப் பட்டியலை தயாரிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அப்படியலில் இவர்கள் வன்னியர் குலத்தில் தோன்றியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


"The Udayarpalayam zamin family took its origin from Vanniya kulam(the family of the god of fire)"

இறுதி ஆதாரம்:

தற்போதைய உடையார்பாளையம் ஜமீந்தாரான திரு.பெரிய குழந்தை ராஜா காலாட்கள் தோழ உடையார் அவர்கள் இன்றும் பழைய ஜமீன் மாளிகையில் வசித்துவருகிறார்.இவர் வன்னியர் இனத்தவர் என்றே சில வரலாற்றாசிரியர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடிருக்கிறார்.

இவருக்கு ஆறு மகன்கள். திரு.ராஜ்குமார்,திரு.பழனியப்பன்,திரு.சத்
தீஷ்குமார், திரு.ஜெயகுமார்,திரு.விஜயகுமார்,திரு.பரணீஸ்வர சிவகுமார், திரு.நந்தகுமார் என்பவர்களாவர்.இவர்கள் அனைவரும் தம்மை வன்னியர் இனத்தவராகவே கூறியுள்ளனர்.

எனவே உடையார்பாளையம் ஜமீந்தார்கள் வன்னியர் குலத்தவர் என்பதே உண்மை.