Sunday, June 30, 2013

மழவர்களே (வன்னியர் ) புறப்படுங்கள் - கடையேழு வள்ளல்களில் ஒருவனும் , சேரர் குலத்தவனுமான , வள்ளல் ஓரி மழவர் பெருமகன் அவர்களுக்கு விழா .


மழவர்களே (வன்னியர் ) புறப்படுங்கள் .

கடையேழு வள்ளல்களில் ஒருவனும் , சேரர் குலத்தவனுமான , வள்ளல் ஓரி மழவர் பெருமகன் அவர்களுக்கு விழா .

யார் யாரோ இவருக்கும் பொய்யாக சொந்தம் கொண்டாடும் போது , தமிழகத்தில் மழவர் குடிக்கென்று இருக்கும் ஒரே சம்ஸ்த்தானம் "அரியலூர் விஜய ஒப்பில்லா மழவராயர் " சமஸ்த்தானத்து மன்னர்களான படையாட்சிகள் அமைதி காப்பது தவறு .

வரலாறை இழக்க வேண்டாம் .

இன்றுவரை தமிழ்நாட்டில் மழவர் குடியினர் ஆட்சி செய்ததற்கு ஆதாரமாக இருப்பது படையாட்சிகளின் "அரியலூர் விஜய ஒப்பில்லா மழவராயர் " சம்ஸ்த்தானம் மட்டுமே .

மழவர் யார் என்று தமிழ் சான்றோர்களிடம் கேட்டதற்கு ,

வரலாற்றாசிரியர் திரு.ராசமாணிக்கனார் :

அரியலூர் மழவராயர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்.போர்வீரர் குடியினராக இருப்பதாலும்,படையாட்சி மரபினர் என்பதாலும் இவர்கள் சங்ககால மழவர் வழி வந்தவர் எனக் கருத இடமுள்ளது.

"தமிழ்த்தாத்தா" திரு.உ.வே.சாமிநாதையர்:

மழவர் என்பார் சங்ககாலத்தில் அறியப்பட்ட போர்க்குடியினர்.இவர்கள் தற்போது வன்னியர் வகுப்பினராக வாழ்ந்து வருகிறார்கள்.

இன்னொரு செய்தி :அறிஞரான திரு.உ.வே.சாமிநாதையர்அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் வன்னியர்களான மழவராயர்கள் ஆண்ட அரியலூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர்.

மழவரான சேர மன்னர்களை அக்னி குல க்ஷத்ரியர் என்றுதான் வில்லிபாரதம் சொல்கிறது .. இன்று தமிழகத்தில் அக்னி குலத்தவர் என்று கூறப்படுபவரும் வன்னியர் மட்டுமே ..

இது அரசின் ஆவணங்களில் கூட உள்ளது ..

Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya )

http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

ஆக இத்துனை ஆதாரம் இருக்கும் நாம் நமது விஜய ஒப்பில்லா மழவராயர் ஆசீர்வாதத்துடன் விழாவை சிறப்பிப்போம் .

மழவர்களே (வன்னியர் ) புறப்படுங்கள் .