Sunday, June 30, 2013

வன்னியர் என்ற சொல்லுக்கு படைகளை கட்டி ஆளும் அரசன் என பொருள் - கல்லாடம்

தருமப் பெரும்பயிர் உலகுபெற விளைக்கும்
நால்படை வன்னியர் ஆக்கிய பெருமான்
- கல்லாடம்

வன்னியர் என்ற சொல்லுக்கு படைகளை கட்டி ஆளும் அரசன் என பொருள் . இது கல்லாடம் சொல்வது .

ஆங்கிலேயர் காலத்தில் பல சமூகங்கள் பாளையமும் ஜமீன்களும் வைத்திருந்தவர்கள் கூட வன்னியர் சமூகமே தமிழகத்தில் மன்னர் சமூகம் என்று எப்படி சொல்கிறீர் என்று வன்னியர் குல குரு திரு.அர்த்தநாரீசவர்மா அவர்களிடம் கேட்ட போது அவர் தம் க்ஷத்ரியன் தொகுப்பு என்னும் நூலில் அதற்க்கான விடையை தெளிவாக சொன்னார் .

அதில் அவர் சொன்ன பதில் :

வன்னியர் என்ற சொல்லுக்கு மன்னர் என்று பொருள் . இதை தமிழகத்தின் பழங்கால நூல் கல்லாடம் சொல்கிறது . 
நாங்கள் வன்னியர் குலம் . வன்னியர் ஜாதி . அதாவது மன்னர் குலம் அல்லது மன்னர் ஜாதி என்றும் அழைக்கலாம் .

மன்னர் சாதியை சேர்ந்தவர்கள் மன்னர்களாக போற்குடிகலாக அல்லாமல் வேறு யார் என்றார்