Thursday, December 26, 2013

புதுகோட்டை கள்ளர் - வன்னியர் பட்டம்

புதுகோட்டை மாவட்டத்தில் வ.சூரக்குடி என்ற ஊர் உள்ளது .. இது வன்னிய சூரகுடி என்று அழைக்க பட்டது .. இப்போது இங்கு சேதுபதி , கிருஷ்ணதேவராயர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் இருந்து கள்ளர்கள் குடியமர்த்தப்பட்டு , ஏற்க்கனவே அங்கு ஆட்சி செய்த வன்னியர் சாதியான அறந்தாங்கி தொண்டைமான் அழிந்த பிறகு , கள்ளர்கள் தொண்டைமான் பட்டம் சூடி புதுகோட்டை பகுதியை ஆட்சி செய்தனர் என்பது நாம் அறிந்தது ..

இந்த சூரக்குடியில் இப்போது கள்ளர்கள் வன்னியர் பட்டம் சூடியுள்ளனர் என்பது சமீபத்தில் நான் கேள்வி பட்டது .. அதற்க்கான காரணம் இதோ கீழே ... இந்த இடத்தில் ஆட்சி செய்தவன் ஒரு வன்னியன் .. கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் , வன்னிய சிற்றரசுகள் அழித்தொழிக்க பட்டன .. இதற்கான ஆதாரம் கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டிலே வருகிறது ..

பின்பு இங்கு கள்ளர்கள் குடியமர்த்த பட்டதால் , அந்த வன்னியர் பட்டம் இந்த ஊரில் வாழும் கள்ளர்களுக்கு உரித்தானது ..


சோழன் பாண்டியனை சிறைப்பிடித்தாள் , எப்படி பாண்டிய பட்டம் சூடி கொள்வானோ , கட்டபொம்மன் பாண்டிய நாட்டில் பாளையம் அமைத்ததால் எப்படி பாண்டியர் பட்டம் சூடிகொண்டானோ , அதே போல வன்னியர் நிலம் கள்ளர் கைக்கு போன பொது , இவர்களுக்கு அந்த இடங்களில் வன்னியர் பட்டம் உரித்தானது ...அல்லது சூடி கொண்டார்கள் ..

ஆதாரம் :

"பதினைந்தாம். பதினாறாம் நு}ற்றாண்டுகளில் தென்னாட்டை ஆண்ட சில குறுநில மன்னரின் ஆவணங்களில் வன்னியர்பற்றிக் குறிப்புக்கள் வருகின்றன. சூரைக் குடியை ஆண்ட சூரைக்குடி யரசு பள்ளிகொண்ட பெருமாள் என வழங்கிய அச்சுதராய விஜயாலய முதுகு புறங் கண்டான் என்ற வாசகம் வருகின்றது. திருவரங்குளத்தைச் சேர்ந்த ஆலங்குடியில் உள்ள கல்வெட்டொன்றில் அழுந்து}ரரசு திருமலைராசப் பல்லவராயர் பதினெட்டு வன்னியர் கண்டன் எனக் கூறப்பட்டுள்ளான். இராமநாதபுரத்துச் சேதுபதிகளின் பட்டயங்களிலும் இதேபோன்ற குறிப்புக்கள் வழமையாக வருகின்றன. எனினும் இக் குறு நில மன்னர்களின் மெய்க்கீர்த்திகளிற் கூறப்படுவன ஆதார பூர்வமானவையென்று கொள்ளமுடியாது. விஜய நகர மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் வருகின்ற வன்னியர் பற்றிய வாசகங்களை இராமநாதபுரத்துச் சேதுபதிகள், சூரைக்குடி அரசர் முதலானோர் தத்தம் ஆவணங்களிலே சேர்த்துக் கொண்டார்கள். கிருஷ்ண தேவராயரின் காலமளவிலே தொண்டை மண்டலத்து வன்னிமைகள் அழிந்துபட்டன."

இலங்கைப்பல்கலைக்கழக வரலாற்று விரிவுரையாளர்.
கலாநிதி சி. பத்மநாதன்