Saturday, November 16, 2013

காடவராயன் கோட்டை சேந்த மங்கலத்திற்கு ஒரு நேரடி விசிட் :



                            
13 ஆம் நூற்றாண்டுகளில் சேந்த மங்கலத்தை தலைமையாக கொண்டு ஆட்சி செய்தவர் "காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் " என்பவர் . இந்த ஊர் தென்னார்க்காட்டு மாவட்டத்தில் உள்ளது .

    
"வன்னியர் வரலாற்று ஆய்வு மையம்" தலைவர் திரு. அண்ணல் கண்டர் , செயலாளர் திரு.முரளி நாயகர் , சென்னை தொழிலதிபர் திரு ,ராஜேந்திர நாயகர் , கவின் கண்டர் , ஸ்ரீவிஜய் கண்டர் மற்றும் நான் (வசந்தராஜ படையாட்சியார் ) ஆகியோர் சேர்ந்த மங்கலத்திற்கு சென்றிருந்தோம் .

அன்றைய தேதி (15-09-2013) .


அவர் கட்டிய கோவிலின் பெயர் "ஸ்ரீ ஆபத்து சகாயீச்வரர் திருக்கோவில் ".



                               
        
                                 (கோவிலின் முன் அண்ணல் கண்டர் அவர்கள் )
                                
                         
                       
சேந்தமங்கலம் சிவாலயத்திலுள்ள வானிலை கண்டீஸ்வரர் ஆபத்சகாயேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கோப்பெருஞ்சிங்கனை பல ஆபத்துகளிலிருந்து காத்ததால் ஈசனுக்கு இப்பெயர் அமைந்ததென்பர். தற்போதும் தன்னை நாடிவரும் பக்தர்களின் ஆபத்துகளை நீக்கி திருவருள் புரிகிறார் இத்தலத்து சிவபெருமான். அம்மன் பிரகன் நாயகி என்னும் பெயரில் அருள்புரிகிறாள்.

இவ்வாலயத்தின் எதிரேயுள்ள திருக்குளத்தின் வடகரையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கல் குதிரைகள் உள்ளன. காண்போரை வியப்பில் ஆழ்த்தும் இந்தக் குதிரைகளையும் ஆலயத்தையும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் புனரமைப்பு செய்து வருகிறார்கள்.

இந்த கோவிலின் சிறப்பம்சம் குதிரை சிலைதான் .. தேர் பூட்டுவது போல இரண்டு குதிரை சிலைகள் அமைக்க பட்டிருந்தன . அதில் ஒன்று முழுவதுமாக சேதம் அடைந்து விட்டது . இப்போது இது ஒன்றுதான் உள்ளது .

இசை, நடனத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் காடவர் . ஏழிசையும் வருமாறு செதுக்கப்பட்ட குதிரை சிலை இது

                               


கோவில் உள்ளே சென்றதும் ஒரு கல்வெட்டு படிவம் உள்ளது . அதில் சூரியன், சந்திரன், திரிசூலம் ,வாள் ஆகிய படங்களை செதுக்கி எழுதியுள்ளனர்


பாண்டவர் உபயோகித்த அனுமன் கொடியவே , காடவர்களும் உபயோகித்தனர் .

அவர்கள் சின்னத்தை குறிக்கும் சிலை இது 






இந்த கோவிலும், கோவில் சார்ந்த அகழி அனைத்தும் அரசாங்கத்தின் பாதுக்காப்பில் இருக்கிறது இன்று .

நீர் ஏதும் இல்லை என்றாலும், மிக அகண்ட எரியாக இது உள்ளது 

                            

சுவாமி தரிசனம் செய்து விட்டு பூசாரியிடம் பேசிகொண்டிருந்தோம் .அங்குள்ள பூசாரியிடம் பேசிய போது , காடவராயருக்கு நாளை (16-09-2013) "ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில்" "பிறந்தநாள் என்றும் , கூறினார் .

                               

அந்த நாளில் கோவிலில் காடவராயர் வம்சாவளியான விருத்தாசலம் அருகில் உள்ள பரூர் கச்சிராயர்கள் தலைமையில் விழா நடக்கும் என்றும் கூறினார் .

அடுத்த நாள் நாங்கள் பாபநாசத்திற்கு செல்ல வேண்டியதால் , எங்களால் பங்குபெற முடியவில்லை .

கோவிலில் உள்ள சில சிலைகள் :



                                                                       முருகர்
 
கோவில் சுற்றளவு படங்கள்  :

                               

                               



காடவரால் சிறை படுத்தப்பட்ட சோழனை மீட்க நடந்த போரினாலும் , அதன் பிறகு தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு போரினாலும் அந்த கோவில் சேதம் அடைந்து காணப்பட்டது .

நடராஜரின் தீவிர பக்தரும், நாட்டியத்தில் பெரும் வித்வானான கோப்பெருஞ்சிங்கன் , தில்லையை போலவே மண்டபம் கட்டுவதற்கும் முயன்றுள்ளார் .. அவை அனைத்துமே சேதம் அடைந்து கிடக்கிறது .

 
  
அம்மன் இருக்கும் கோவில் இது .. ஈசனின் கோவில் அருகாமைலேயே இந்த மண்டபம் இருக்கிறது




டாக்டர் கே.கே.பிள்ளை யின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலிருந்து சில வரிகள்:

"சோழர்,பாண்டியர் போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகைசூடி "மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், பரதமல்லன், எழிசைமோகன் ,கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன் "என்பன போன்ற பல விருது பெயர்களை சூடியவன்  "காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் " .

இவர் பிற்கால பல்லவர் என்றும் அறியப்பட்டவர் . சோழர்களுடன் மண உறவு கொண்டவர் . பிற்காலத்தில் ஏற்ப்பட்ட சில கசப்புகலால் மூன்றாம் ராஜாதி ராஜனை சிறைப்படுத்தி சோழர் வலிமைக்கு முடிவு எழுதியவர் .

தன்னை நேரடியாகவே "பள்ளி ( வன்னியர் ) சமூகத்தவன் " என்று கல்வெட்டுகளில் அறிவித்தவர் காடவராயர் .

ஆதாரம் :

உலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான நொபுரு கரஷிமா அவர்களின் "South Indian Society in Transition: Ancient to Medieval" ஆய்வு நூலில் கல்வெட்டு ஆதாரங்களுடன் "காடவராயர்கள் வன்னியர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருமுட்டம் மற்றும் விருதாச்சலம் கல்வெட்டுகள் காடவராயர்கள் வன்னியர்களே (பள்ளி) என்று குறிப்பிடுகின்றன.

கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த கோப்பெருஞ்சிங்க காடவராயன் மூன்றாம் ராஜராஜ சோழனையே கைது செய்து சேந்தமங்களத்தில் சிறைவைத்தான். (சிதம்பரம் கோவிலின் தெற்கு கோபுரத்தையும், தில்லை காளியம்மன் கோவிலையும் கட்டியவன்
இவன்தான்.)

மற்றொரு காடவராய தலைவனான குலோத்துங்கசோழ காடவராயனின்தம்பி குலோத்துங்கசோழ கச்சியராயன் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுவதையும் நொபுரு கரஷிமா குறிப்பிடுகிறார். இப்போதும் கடலூர் நடுத்திட்டு, தியாகவல்லி பகுதி வன்னியர்கள் கச்சியராயர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.


From “South Indian Society in Transition: Ancient to Medieval", by Noboru Karashima, OXFORD 2009

Page 74

In a Shrimushnam inscription (ARE 1916 – 232) Kulottungachola Kadavarayan, a Kadava chief, is stated as a Palli.

Pages 137 & 139

Kopperunjinga, one of the Kadava chiefs of the thirteenth century, is famous for having taken captive his own master, Rajaraja III of the Cholas, for some time in Sendamangalam in South Arcot District.

A Tiruvadi inscription (SII, vii – 319; SA, 1145) records that Araisanarayan alias Kulottungachola Kachchiyarayan, a Kadava chief…

Another Tiruvadi inscription (SII, vii – 320; SA, 1146) records the remission by Elisaimahan alias Kulottungachola Kadavarayan, probably an elder brother of Araisanarayan of previous inscription…

We have   three more inscriptions of this chief, which are found in Vriddhachalam (SII, vii – 150; SA, 11468), Srimushnam (ARE 1916 – 232, SA, 1152), and Tirunarunkondai (SITS – 74; SA, 1156). In the first two he is described as a Palli who has kani right in Erumbur.