Saturday, December 28, 2013

சிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் இளவரசி

சிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் (சிங்கம்பட்டி ) இளவரசியார் .




வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் சிவகிரியின் கடைசி ஜமீனாக இருந்தவர் .இவர் 16-8-1955 இல் காலமானார் .

இவரது மகனான "சிவகிரி ராஜா" என்ற "செந்தட்டி காளை பாண்டியன் "1952 ஆம் வாக்கில் முதன் முதலில் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார் .

இந்த செந்தட்டி காளை பாண்டியன் மறவர் சமூகத்தின் சிங்கம்பட்டி ஜமீன் மகளான "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியாரை " காதல் திருமணம் செய்து கொண்டார் ..

அதன் பிறகு இவரது மகன்களும் சேத்தூர் ஜமீனுடன் உறவு வைத்து கொண்டனர் ...

இதுவே சிவகிரி வன்னியர் ஜமீனில் மறவர் சமூகம் கலந்த தொடக்கம் .

இருப்பினும் சிவகிரியின் கிளைவழி ஜமீன்களான தென்மலை ,சமுசிகாபுரம் மற்றும் சிவகிரியோடு மணஉறவு வைத்திதிருந்த ஏழாயிரம் பண்ணை ஆகியோர் இன்றும் அக்மார்க் வன்னியர்களாகவும், வடதமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்துடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர் .

சிவகிரி ஜமீன் மறவரில் தாய் வழி உறவு வைத்துகொண்டாலும் , இவர்களது சாதி சான்றிதழ் , பத்திரங்கள் போன்றவை தங்களை வன்னியர் சாதி என்பதை தெரிவிக்கின்றன ..

1. இந்த புகைப்படத்தில் கையில் குழந்தையுடன் இருப்பவரே "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியார் " அவர்கள் .


                                

2. கீழே கையை கட்டி அமர்ந்திருக்கும் சிறுவன் ,இன்றைய சிவகிரி ஜமீனாக உள்ள விக்னேஷ்வர ராஜாவின் தந்தையார் அவர்கள் ..


நன்றி : புகைப்படம் தந்து உதவிய திரு. அண்ணல் கண்டர் மற்றும் திரு . முரளி நாயகர் ஆகியோருக்கு நன்றி

Thursday, December 26, 2013

புதுகோட்டை கள்ளர் - வன்னியர் பட்டம்

புதுகோட்டை மாவட்டத்தில் வ.சூரக்குடி என்ற ஊர் உள்ளது .. இது வன்னிய சூரகுடி என்று அழைக்க பட்டது .. இப்போது இங்கு சேதுபதி , கிருஷ்ணதேவராயர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் இருந்து கள்ளர்கள் குடியமர்த்தப்பட்டு , ஏற்க்கனவே அங்கு ஆட்சி செய்த வன்னியர் சாதியான அறந்தாங்கி தொண்டைமான் அழிந்த பிறகு , கள்ளர்கள் தொண்டைமான் பட்டம் சூடி புதுகோட்டை பகுதியை ஆட்சி செய்தனர் என்பது நாம் அறிந்தது ..

இந்த சூரக்குடியில் இப்போது கள்ளர்கள் வன்னியர் பட்டம் சூடியுள்ளனர் என்பது சமீபத்தில் நான் கேள்வி பட்டது .. அதற்க்கான காரணம் இதோ கீழே ... இந்த இடத்தில் ஆட்சி செய்தவன் ஒரு வன்னியன் .. கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் , வன்னிய சிற்றரசுகள் அழித்தொழிக்க பட்டன .. இதற்கான ஆதாரம் கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டிலே வருகிறது ..

பின்பு இங்கு கள்ளர்கள் குடியமர்த்த பட்டதால் , அந்த வன்னியர் பட்டம் இந்த ஊரில் வாழும் கள்ளர்களுக்கு உரித்தானது ..


சோழன் பாண்டியனை சிறைப்பிடித்தாள் , எப்படி பாண்டிய பட்டம் சூடி கொள்வானோ , கட்டபொம்மன் பாண்டிய நாட்டில் பாளையம் அமைத்ததால் எப்படி பாண்டியர் பட்டம் சூடிகொண்டானோ , அதே போல வன்னியர் நிலம் கள்ளர் கைக்கு போன பொது , இவர்களுக்கு அந்த இடங்களில் வன்னியர் பட்டம் உரித்தானது ...அல்லது சூடி கொண்டார்கள் ..

ஆதாரம் :

"பதினைந்தாம். பதினாறாம் நு}ற்றாண்டுகளில் தென்னாட்டை ஆண்ட சில குறுநில மன்னரின் ஆவணங்களில் வன்னியர்பற்றிக் குறிப்புக்கள் வருகின்றன. சூரைக் குடியை ஆண்ட சூரைக்குடி யரசு பள்ளிகொண்ட பெருமாள் என வழங்கிய அச்சுதராய விஜயாலய முதுகு புறங் கண்டான் என்ற வாசகம் வருகின்றது. திருவரங்குளத்தைச் சேர்ந்த ஆலங்குடியில் உள்ள கல்வெட்டொன்றில் அழுந்து}ரரசு திருமலைராசப் பல்லவராயர் பதினெட்டு வன்னியர் கண்டன் எனக் கூறப்பட்டுள்ளான். இராமநாதபுரத்துச் சேதுபதிகளின் பட்டயங்களிலும் இதேபோன்ற குறிப்புக்கள் வழமையாக வருகின்றன. எனினும் இக் குறு நில மன்னர்களின் மெய்க்கீர்த்திகளிற் கூறப்படுவன ஆதார பூர்வமானவையென்று கொள்ளமுடியாது. விஜய நகர மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் வருகின்ற வன்னியர் பற்றிய வாசகங்களை இராமநாதபுரத்துச் சேதுபதிகள், சூரைக்குடி அரசர் முதலானோர் தத்தம் ஆவணங்களிலே சேர்த்துக் கொண்டார்கள். கிருஷ்ண தேவராயரின் காலமளவிலே தொண்டை மண்டலத்து வன்னிமைகள் அழிந்துபட்டன."

இலங்கைப்பல்கலைக்கழக வரலாற்று விரிவுரையாளர்.
கலாநிதி சி. பத்மநாதன்

சோழர்களின் வாரிசு "சிதம்பரநாத சூரப்ப சோழனார் " அவர்களின் மறைவிற்கு கடலூர் மாவட்ட பாமக செயலாளர் "ஜெகன் " அவர்கள் இரங்கல் தெரிவித்தல்




சோழர்களின் வாரிசு "சிதம்பரநாத சூரப்ப சோழனார் " அவர்களின் மறைவிற்கு கடலூர் மாவட்ட பாமக செயலாளர் "ஜெகன் " அவர்கள் இரங்கல் தெரிவித்தல்







சோழர்களின் வாரிசு சிதம்பர நாத சூரப்ப சோழனாரின் படத்திறப்பு :



கடலூர் பாமக செயலாளர் "ஜெகன் " அவர்களால் சோழர்களின் வாரிசு சிதம்பர நாத சூரப்ப சோழனாரின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது .


சோழர்களின் வாரிசு சிதம்பரநாத சோழனார் மரணம்: டாக்டர் ராமதாஸ் இரங்கல் - மாலைமலர் செய்தி




நன்றி : http://www.maalaimalar.com/2013/12/09112606/Chidamparanata-Cholar-death-Ra.html

சோழ மன்னரின் பரம்பரையை சேர்ந்த சிதம்பரநாத சூரப்ப சோழகனார் திடீர் மரணம் - மாலைமலர்

சோழ மன்னரின் பரம்பரையை சேர்ந்த சிதம்பரநாத சூரப்ப சோழகனார் திடீர் மரணம் -  மாலைமலர்




நன்றி : http://www.maalaimalar.com/2013/12/09123530/Chola-dynasty-chidamparanatar.html

"சோழர்களின் வாரிசு திரு.சிதம்பரநாத சூரப்ப சோழனார் " மறைந்தார் - கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

"சோழர்களின் வாரிசு திரு.சிதம்பரநாத சூரப்ப சோழனார் " மறைந்தார் - கண்ணீர் அஞ்சலி போஸ்டர்